Wednesday, June 15, 2005

பாட்டியொருத்தி பேரனில் கோபங் கொண்டாள்

நான் சுட்ட வடையை சுட்ட காக்காவே,

கொஞ்சம் பொறு இங்கு கனடாவில் என் பேரன் உள்ளான்.

நாளை வந்து உனை சுடுவான்.

அதுக்கே இப்ப தன் சோதரங்களை சுட்டு பயிற்சி எடுக்கிறான்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

6 Comments:

At 3:32 PM, June 15, 2005, Blogger முகமூடி said...

எப்ப உங்க பதிவ படிச்சாலுமே எனக்கு என்னமோ புரியிர மாதிரி இருக்கும் ஆனா சரியா என்னான்னு விளங்காது... ஏதாவது துப்பு கொடுக்க கூடாதா ?

 
At 3:48 PM, June 15, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

முகமூடி,

கனடாவிலை எங்கடை குஞ்சுகள் வீரத்தனமா இல்லாமல் கோழைத்தனமா சண்டை பிடிக்குங்கள். பத்துப்பே(ய)ர் சேர்ந்து ஒருவனுக்கு அடிப்பதும், ஒருவன் வெறுமனே நிராயுதபாணியாய் நிற்கையில் துப்பாக்கி கொண்டு சுடுவதும் இங்கு கண் கொள்ளாக் காட்சிகள்.

வேறை எந்தப் பதிவு விளங்கேல்லை எண்டு சொல்லுங்கோ.

அதுக்காக கனடாவிலை ஒண்டிக்கு ஒண்டியாய் சண்டை பிடிப்பதை நான் சரியெண்டு சொல்ல வரேல்லை என்றும் சொல்லைக்கொள்ள வேண்டியுள்ளது.

(அப்பாடா இப்பவெண்டாலும் என்னால் மற்றவருக்கு புரியாத தொனியில் எழுத முடிகின்றதே)

 
At 4:31 PM, June 15, 2005, Blogger நற்கீரன் said...

இன்னும் இப்படி நடக்கின்றதா!
சில நாட்களாய் எல்லாம் அமைதியாய் இருப்பதுபோல் அல்லவா தெரிகின்றது.

 
At 4:39 PM, June 15, 2005, Blogger கறுப்பி said...

நக்கீரன் கிஸோ பல வருடங்களுக்கு முன்பு எழுதியவற்றை மீண்டும் தூசி தட்டிக் கொண்டு வருகின்றார் அதுதான் அப்படி இருக்கின்றது.

 
At 4:39 PM, June 15, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

நற்கீரன், நீங்கள் இருப்பதாலை இப்ப அந்தப் பிரச்சினையள் கொஞ்சங் குறைஞ்சதாக நான் கேள்விப்பட்டது உண்மை போல உள்ளது.

 
At 4:47 PM, June 15, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

கறுப்பிதான் இப்ப எனக்காக *பேச வல்ல அதிகாரி :-)

* - நன்றி BBC தமிழோசை

 

Post a Comment

<< Home

statistics