Friday, May 20, 2005

சாபம்

காதலிற்கு வேலியில்லை
காதலிற்கு சாதியில்லை
பரம்பொருளே சொல்லும்போது
பரதேசிகள் உங்களுக்கு
இன்னும் என்ன பிடிவாதம்?

நிலவினில் கால் பதித்து
செவ்வாய்க்கு வண்டி அனுப்பி
விஞ்ஞானத்தை வளர்த்தோம்-ஆனால்
மெஞ்ஞானத்தை வளர்த்தோமா?

மலைச்சாதி வள்ளியை
எம்பெருமான் முருகன்
ஓடி ஓடிக் காதலித்த கதை கேட்டு
கைதட்டி மெய்சிலிர்த்த நீங்கள்
மானிடக் காதலுக்கேன்
மண்ணை அள்ளிப் போடுகின்றீர்?

காதலிற்கு குறுக்கே நிற்போர்
குறுக்காலே போகட்டும்.
காதலரை எதிர்ப்பவர்கள்
நரகத்திற்கு போகட்டும்.

சாதிகள் இல்லையடி பாப்பா!
ஆதியிலே சொன்ன கவிஞன்
பாடையிலே போய்விட்டான்.
பாடையிலே போனது
அவன் மட்டும்தானா?

காதலில் உவர்கள்
சாதிகள் பார்க்கும் மட்டும்
ஊழிக்காற்று வீசட்டும்;
ஊமத்தங்குருவி
ஊரெல்லாம் அலறட்டும்!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

statistics