<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7593652</id><updated>2011-08-31T03:15:26.968-04:00</updated><title type='text'>கணிதம்</title><subtitle type='html'>&lt;b&gt;வாசித்தவை, பாதித்தவை, எனது ஆக்கங்கள், விமர்சனங்கள், கருத்துக்கள், சில குறிப்புக்கள், நகைச்சுவைகள், மற்றும் உங்கள் கருத்துக்கள்:&lt;/b&gt;</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>47</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-112128673949313004</id><published>2005-07-13T16:31:00.000-04:00</published><updated>2005-07-13T16:47:05.170-04:00</updated><title type='text'>ஒரு பைத்தியம் நிலா பார்க்கிறது*</title><content type='html'>கோடை காலத்தின் ஒரு உக்கிர இரவு அது. உடலின் வெப்பங் கூடியதால் அதனைச் சமப்படுத்த தோலின் நுண்ணிய துவாரங்களில் இருந்து வேர்வைத்துளிகள் வெளிப்பட்டுக் காற்றைச் சுகம் விசாரித்தன. அகோரம் தாங்க முடியாமலோ என்னவோ காற்றுஞ் சூடாக மாறியது.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்குள்தான் இப்படி. வெளியில் போய் வயல்வெளியில் சற்று காற்று வாங்கினால் என்ன? உள்ளம் வயல்வெளியை நினைத்துப் பார்த்து ஒரு தடவை துள்ளிக் குதித்தது. வீட்டுப்படி தாண்டி வெளியே வந்தேன். தென்றல் செல்லமாக என் முகத்தில் அடித்தது. பின்னர் காதுகளில் இலேசாகக் குசுகுசுத்து மன்னிப்புக் கேட்டது. என்னையும் அறியாமல் சற்று வாய்விட்டு 'மன்னித்தேன் தென்றலே' என்றேன். நான் மன்னித்துவிட்ட சந்தோசத்திலேயோ என்னவோ தென்றலுக்குப் பேச்சே வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;செல்லமக்காவின் வளவு தாண்டி குச்சொழுங்கையின் புழுதியில் கால் வைத்தேன். அந்தப் புழுதிமணல் ஒரு பூவின் இதழ்களைப் போன்று மென்மையாக இருந்தது. 'ஐயோ உழக்கி நடந்தால் அதற்கு வலிக்கப் போகின்றதே' என்று என் ஜீவன் ஆதங்கப்படவே பாதங்களை மெதுவாய் எடுத்து வைத்தபடி வயல்வெளியைப் போய்ச் சேர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பகலில் பச்சைப்பசேல் என்றிருந்த மரங்கள் தூரத்தே இப்போ அமைதியாய் கறுப்பாய் கோலமளித்தன. மனசில் சுகந்தத்தை வரவழைக்க தன் சில்மிசங்களைக் காட்ட ஆரம்பித்தது தென்றல் குழந்தை.&lt;br /&gt;கண்களை அலையவிட்டு எட்டிய தூரம்வரை பார்த்தேன்...மனித ஜீவன்கள் உலாவுவதற்கான ஒரு அடையாளத்தையுங் காண முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இலேசாகக் கனைத்துக் கொண்டேன். பள்ளிக்கூடத்திலை சரஸ்வதிப் பூசைக்கு போட்ட படத்தில் வீரபாண்டிய கட்டப்பொம்மன் பேசிய வார்த்தைகளளை நினைவுக்குக் கொண்டுவர முயன்றேன். அவனது முறுக்கிய மீசைதான் முதலில் என் ஞாபகத்தோடு மல்லுக்கு நின்றது. தொடர்ந்து அவன் பேசிய வார்த்தைத்துளிகள் என் நினைவுப் பூமியில் தூறல்களாக விழுந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;"வட்டியாம் வட்டி.&lt;br /&gt;வயலுக்கு வந்தாயா?&lt;br /&gt;நாற்று நட்டாயா?&lt;br /&gt;இல்லை அந்தப்புரத்திலுள்ள&lt;br /&gt;என் குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா?&lt;br /&gt;மானங் கெட்டவனே,&lt;br /&gt;யாரைக் கேட்கிறாய் வட்டி?"&lt;br /&gt;&lt;br /&gt;காற்று வெளியில் கைகளை அலையவிட்டு வீரமாய் வசனம் பேசினேன். நான்கு தடவைகளுக்கு மேல் சொல்லிவிட்டு மீண்டும் ஆரம்பித்த போது குடலின் அடிப்பாகத்தில் இருந்து இருமல் உருவெடுக்க கூடவே களைப்பும் சேர்ந்து கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கைகளை தலைக்கு அணையாக வைத்து, உழுது சற்று விகாரமாயிருந்த மணலில் மேனி சாய்த்தேன். தொடக்கத்தில் சற்று நொந்தாலும் அதுவே பின்னர் சுகமாக மாறியது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது கண்ணில் தெரிந்தது வானம் மட்டுமே. கரிய உருக்கொண்ட பேய்களாய் முகில்கூட்டங்கள் ஊர்வலஞ் செல்ல, எங்களுக்கு இந்த ஊர்வலம் எல்லாம் சரிவராது என்பது போல் நட்சத்திரங்கள் கைகட்டி வாய்மூடி மௌனியாய் இருந்தன. இவர்களுக்கு மத்தியில் இந்த வானிற்கே மகாராணி எனச் சொல்லாமல்சொல்லி நிலவு கம்பீரமாகக் காட்சியளித்தது. அதன் வெண்மை கலந்த ஒளிவீச்சின் அழகில் மிளிர்ந்தது பூமிப்பெண்ணின் முகம்.&lt;br /&gt;&lt;br /&gt;முகில் கூட்டங்கள் எவ்வளவுதான் சீண்டிப் பார்த்தும் நிலவு எதையும் தாங்கும் இதயமாய் அமைதியாய் இருக்கவே, அதன் பொறுமையைப் பார்த்து ஒரே நேரத்தில் அதன்மீது மதிப்பு, பிரியம், பொறாமை வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"இவ்வளவு பொறுமையை நீ எங்கிருந்து கற்றாய்...? எனக்கும் கொஞ்சம் சொல்லேன் நிலவே" உரக்கச் சத்தமிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நிலவு ஒன்றுமே சொல்லாமல் மண் பார்த்தது. இந்த மண்ணை எப்படி நாம் வருத்தினாலும் அது எதிர்ப்பது கிடையாது. மாங்கு மாங்கு என்று கொத்தினாலும் மறு பேச்சு பேசுவதில்லை; எச்சில்தனை உமிழ்ந்தாலும் வாய் திறந்து வார்த்தைகளை உதிர்க்காது. அவ்வளவு பொறுமை! நிலவு அதனைத்தான் சொல்லியிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;"நிலவு! நீயும் நானும் சிநேகிதர்களாக இருப்பமோ?" நான் தயங்கித் தயங்கிக் கேட்க 'அதுக்கென்ன, இருப்பமே' என நிலவு சிரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப்பற்றி நிலவுக்குக் கதைகதையாய்ச் சொன்னேன்.&lt;br /&gt;"நிலவுப் பிள்ளம்... நான் கதை கவிதையெல்லாம் எழுதுவன்" என என்னை நானே தம்பட்டம் அடித்துக் கொள்ள, அதனை நம்புவதற்கு நிலவு தயங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ரை உருவத்தை வைச்சு என்னை எடை போடாதை. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது ஓ! வேணுமெண்டால் இப்பவே உனக்கு ஒரு கதை சொல்லவோ?" நான் சீற 'சரி, சொல்லு பார்க்கலாம்' என்பதாய் நிலவு ஒரு பார்வை பார்த்தது. என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;"ஒரு நாட்டை ஒரு இராசா ஆண்டு வந்தானாம். தான் தன்ரை நாட்டை நல்ல முறையிலை ஆட்சி செய்யுறன் எண்டு மற்றவர்களை நம்பச் செய்வதிலேயே அவன் குறியாக இருந்தானாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஒருநாள் தனது மந்திரியை அழைத்து,"மந்திரியே...! மனிதர்கள் நாங்கள் அழுதால் கண்ணீர் வரும். அதை வைத்து எங்களின் சோகத்தை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் தண்ணீரிலே இருக்கின்ற மீன்கள் பாவம். அவை அழுதால் அவற்றின் கண்ணீர் தண்ணீரோடு கலந்துவிடும். இது மனிதர்கள் பலருக்குத் தெரிவதில்லை. மீன்கள் பாவம்! அவைகளும் எனது ஆட்சியில்தானே இருக்கின்றன. அவைகளின் கண்ணீர் மனிதர்களுக்குத் தெரிய வேண்டும். எனவே எல்லா மீன்களையும் பிடித்து நிலத்திலே போடுங்கள். அவை நிலத்தில் அழுதால் மனிதர்களும் அதனைக் காணலாம். இது எனது கட்டளை" என்றானாம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இராசாவின் கட்டளையை ஏற்று மந்திரி அப்படியே செய்தானாம். நிலத்திற்கு வந்த மீன்கள் துடிதுடித்தன. அவற்றின் விழிகளில் இருந்து கண்ணீர் வந்தபோது, தனது நோக்கம் நிறைவேறிவிட்டது என்று இராசா பெருமிதமடைந்தானாம்". &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;கதையைச் சொல்லிவிட்டு நிலவின் முகத்தைப் பார்த்தேன். என் கதையில் மூழ்கியிருந்த நிலா யதார்த்ததுக்கு வர சற்று நேரம் எடுத்துவிட்டு 'ஆகா! அருமையான கதை' என்று பாராட்டுத் தந்தது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;என் கேள்விகளுக்குப் பதிலளித்து, என் கதையினை இரசித்து நிலவு உரையாடினதை என்னால் இன்னுமே நம்பமுடியவில்லை. முருகேசு வாத்தியாரட்டை பாராட்டுப் பெற்றதுமாதிரிச் சந்தோசமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை யாருக்காவது சொல்லியாக வேண்டும் என்று மனசு அவசரப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"நிலவே! நீ கதைச்சதை யாருக்காவது சொல்லியாக வேண்டும். மற்றது நான் நித்திரைக்கும் போக வேண்டும். நாளைக்குச் சந்திப்பம் என்னா!"&lt;br /&gt;இப்போ நிலவு அழுமாற்போல் ஒரு பார்வை பார்த்தது. இருந்தும் அரைமனசோடு நிறைய நினைவுகளைச் சுமந்துகொண்டு நிலவைப் பிரிந்து சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நிலவோடு கதைச்சதை அடுத்த நாள் பள்ளிக்கூடத்திலை பெடியளுக்குச் சொன்னபோது எல்லோரும் என்னை லூசுமாதிரிப் பார்த்தபடி, "நிலவு ஒரு ஊமை; அதாலை கதைக்க ஏலாது" என்று ஏளனஞ் செய்தபோது உயிரின் ஆழத்தில் இருந்து வேதனை பீறிட்டு எழுந்தது. 'அவர்கள் நம்பாட்டா எனக்கென்ன' என்று ஒருவாறு மனசைத் தேற்றிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாளைய இரவுக்காய் ஆசையோடு காத்திருந்தேன். சாப்பிடக்கூட விருப்பமில்லை. எப்ப இரவு வரும் எப்ப நிலவைப் பார்க்கலாம் என்றிருந்தது. கடைசியாய் அன்றும் இரவு வந்தது; சேர்ந்து நிலவும் வந்தது. நிலவு இறைவனாகவும், அதனைச் சுற்றியுள்ள நட்சத்திரங்கள் இறைவனுக்கு அர்ச்சிக்கப்பட்ட மலர்களாகவும் தெரிந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;"நிலவு, அண்டைக்கே உன்னைக் கேட்கவேணும் எண்டு நினைச்சனான். பொறுமை மீறிக் கோபம் வரும்போது நீ என்ன செய்வாய்?"&lt;br /&gt;எனது இந்தக் கேள்விக்கு நிலவு ஒன்றுமே சொல்லவில்லை. இருந்தும் அது என்ன சொல்ல வருகின்றது என்று எனக்குத் தெளிவாய்ப் புரிந்தது. கோபம் வரும்போது வார்த்தை என்னும் எச்சிலைத் துப்பாமல் மௌனித்திருக்க வேண்டும் என்பதனைத்தான் அது தன் மௌனத்தால் உணர்த்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி நிலவு! நேற்றுக் கதை சொன்னனான். இண்டைக்குக் கவிதை ஒண்டு சொல்லப் போறன். சின்னக் கவிதையெண்டாலும் இது உனக்கு நிறையப் பிடிக்கும்" என்றுவிட்டு ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்ற இறக்கத்தோடு கவிதையைச் சொல்லிவிட்டு அதன் முகத்தையே ஆவலோடு பார்த்தேன்.&lt;br /&gt;'அழகான கவிதை. ஆனா, இதை நீதான் எழுதினாய் என்று நம்பத்தான் கொஞ்சம் கஸ்ரமாய் இருக்கு' என்று அதன் முகஞ் சொல்லியது.&lt;br /&gt;&lt;br /&gt;"எந்தக் கோவில்லையும் அடிச்சுச் சத்தியம் பண்ணுறன்...இதை நான்தான் எழுதினனான்" நான் அழத் தயாரான போது நிலவு தன் புன்சிரிப்பால் என்னைச் சமாதானப்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயோ, நல்லா இருண்டு போச்சு. அம்மா என்னைத் தேடப் போறா. நான் இப்ப போக வேணும். நாளைக்கு வெள்ளண வாறன்" என்று அவசரமாய்ப் பிரிந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதேச்சையாய் திரும்பி வான் பார்த்தேன். அதுவும் என் கூட வந்து கொண்டிருந்தது. வந்த வழியால் திரும்பி நடந்தபோது அது என் முன்னால் பாதை காட்டி ஒரு போர்வீரனாய்ச் சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் நிலவு எனோடையே வாறாய்? உனக்கு என்ன வேணும்?" கேள்வி கேட்டபோது நிலவு குறும்பாய்ச் சிரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த விளையாட்டு எல்லாத்தையும் வேறை ஆரோடையும் வைச்சுக் கொள்ளு" செல்லமாய்க் கோபித்தபடி வீடு நோக்கிக் கால்களைச் செலுத்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மனசுக்குள் ஏதோ உறுத்த திரும்பிப் பார்த்தேன். கள்ள நிலவு...! இப்பவும் என் பின்னாலேயே வந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"குட்டி நாய்க்கும் செல்லப் பிள்ளைக்கும் செல்லங் கொடுக்கக்கூடாது எண்டு சொல்லுவினம். அதோடை உன்னையும் சேர்க்க வேணும் போலை கிடக்கு" என்று நான் பகிடிக்குச் சொன்னேன்.&lt;br /&gt;நிலவோ, "ஆர் குட்டிநாய்? நீதான் குட்டிநாய்" என்பது போல் என்னை ஏளனமாய்ப் பார்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்குப் பின்னாலை வரக்கூடாது எண்டால் வரக்கூடாது. சொல்வழி கேக்காட்டால் அடிச்சுப் போடுவன் ஓ...!" நான் என்ன சொல்லியும் அது என் பின்னாலேயே வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை நன்றாய் மூச்சை இழுத்துவிட்டு, வீட்டை நோக்கிக் கால்கள் தெறிக்க ஓடினேன். திரும்பிப் பார்த்தால் அது என்கூடவே வரும் என்ற பயத்தில் திரும்பியே பார்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வீடு வந்து களைப்பில் கட்டிலில் போய் விழுந்தேன். படுத்த வேகத்திலேயே நித்திரையும் வந்தது. திடீரென் விழித்துக் கொண்டேன். நடுச்சாமம் பன்னிரண்டு மணி முப்பது நிமிடம். நிலவு என்ன செஞ்சிருக்கும். அது என்னோடை ஓடுமோ...? நான் கோட்ட மட்டதிலேயே ஓட்டத்திலை முதலாவதாக வந்தனான். இருந்தும் மனசு புறாக்குஞ்சாகக் குறுகுறுத்தது. சத்தம் போடாமல் கதவைத் திறந்து முற்றத்திற்குப் போய் சற்று அண்ணாந்து வான் பார்த்தேன். கள்ள நிலவு சிரிச்சுக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கென்ன நிலவு, நீ பள்ளிக்கூடத்துக்கும் போறேல்லை. நான் அப்படியோ? காலமை ஏழு மணிக்கே எழும்ப வேணும். நாளைக்குப் பார்ப்போம்" என்றுவிட்டு அதனைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. நித்திரை கண்ணைச் சுழற்ற திரும்பப் போய்ப் படுத்தேன். பாவம் நிலவு! இரவு முழுக்க தனிய இருக்கப் போகுது. நினைத்துப் பார்க்க எனக்கு அழுகை வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் கண் விழிச்சதும் வெளியே போய் ஆகாயத்தைப் பார்த்தேன். நிலவைக் காணவில்லை.&lt;br /&gt;"அச்சாப்பிள்ளை நிலவு. உப்பிடித்தான் சொல்வழி கேட்க வேணும்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வயல்வெளியின் வரம்புகளையும், தென்றலையும் சாட்சியாக வைத்துக் கொண்டு எம் சினேகிதம் வளர்ந்தது. இதுவரை தவழ்ந்து கொண்டிருந்த அந்தச் சினேகக் குழந்தை இப்போ மெல்லக் காலூன்றி எம் இதயப் பிரதேசத்தில் ஓடிவிளையாடியது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றும் வழமையைப் போல் நிலவோடு கதைச்சுக் கொண்டிருந்தேன். அப்போதுதான் கவனித்தேன். என் நிலவு தேய்ந்து கொண்டிருந்தது. குறுகியதாய் ஆனால் மிகவும் கொடியதாய் ஒரு வலிமின்னல் என் நெஞ்சில் வெட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் நிலவே நீ ஒவ்வொரு நாளும் தேஞ்சு கொண்டு போறாய்?"ஒன்றுமே பேசாமல் அது சோகமாய் இருந்தது. நான் மன்றாடிக் கேட்டும் அது காரணஞ்ச் சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதெல்லாம் அது என் வீட்டருகே வருவதில்லை. சற்றுத் தொலைவிலேயே நின்றுவிடும். எப்பவுமே மூஞ்சையை 'உம்' எண்டு வைச்சுக் கொண்டு ஒரு சோகப்பார்வை பார்க்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதின்மூன்றாம் நாள். முதல்நாளையைவிட இன்று அது இன்னுங் கூடத் தேஞ்சிருக்கும் என்பதை எண்ணிப் பார்த்தபோது என் உடல் பதறியது. என் கைகள் நடங்குவதை என்னாலேயே உணர்ந்து கொள்ள முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மனசு பூரவும் சோகத்தை நிரப்பிக் கொண்டு வயல்வெளியை நோக்கி நடந்தேன். காற்றுக்கு அன்று என்ன நடந்ததோ தெரியாது. அள்ளி அடிச்சு பலமாக வீசியது. புழுதி மணல் முகத்தில் அடிச்சு வலது கண் எரிந்தது. ஒற்றைக் கையால் அதனைப் பொத்திக் கொண்டு வயல்வெளியை அடைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தலையைச் சற்றி உயர்த்தி வான் பர்த்தேன். நட்சத்திரங்களும் முகில்களும் மாத்திரமே தெரிந்தன; என் நிலவைக் காணவில்லை. என்னுள் சோகத்தீ பற்றிக் கொண்டு சுடர்விட்டு எரிய, பொல பொலவென்று கண்ணீர் முத்துக்கள் சொரிந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;நிலவு சொல்லித் தந்த பொறுமையைக் கைவிடாமல் காத்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு ஒரு மணியிருக்கும்...இன்னுமே நிலவு வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"நட்சத்திரங்களே...! என் நிலவைக் கண்டனீங்களோ? எனக்காக இங்கை காத்திருக்கிறன் எண்டு சொன்னது. ஆருங் கண்டனீங்களோ?" எனக்கு வாய் குளறியது. வார்த்தைகள் தொண்டைகுழி தாண்ட முடியாமல் தடுமாறின.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் காத்திருப்பதை வான் பார்த்திருப்பதை விழி பூத்திருப்பதை எப்படி மறந்து போனாய்? என் நிலவே! நீ எங்கை போய் விட்டாய்? விளையாடினது காணும்...தயவு செய்து வெளியை வா. நீ வராட்டால் நான் செத்துப் போவன் ஓ! உனக்கு ஆர் உப்பிடிச் செஞ்சது? அதையாவது சொல்லிவிட்டுப் போ" உயிரின் ஜீவநாடியில் இருந்து ஆர்ப்பரித்தேன்.&lt;br /&gt;ஒரு பதிலுமே வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உடம்பு உதறத் தொடங்க, நடக்கவே சக்தியில்லாமல் கால்களும் சோர்வுற்றன.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ரை குஞ்செல்லோ...என்ரை செல்லமெல்லோ...என்ரை தங்கப்பவுணெல்லோ... தயவு செய்து என்னைவிட்டுப் போய்விடதை. போறதெண்டால் என்னையும் கூட்டிக் கொண்டு போ. சொல்லு என்னையும் ஆட்கொள்ளுவாயா அன்றி ஆட்கொல்லியாய் மாறுவாயா...?"வாய்விட்டு அலறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"கந்தையாவின்ரை லூசு இந்த நேரம் வயலுக்கை என்ன செய்யுது?" ஆரோ பக்கதிலை கத்திக் கேட்டது. சற்றுத்தூரம் ஓடிவிட்டுத் திரும்பிப் பார்த்தேன். நான் எதிர்பார்த்தது போல் அங்கு என் நிலவில்லை. இன்னுங் கொஞ்சத்தூரம் ஓட, வரம்பு தடக்கி கால்கள் இடறிக்கொண்டன.&lt;br /&gt;&lt;br /&gt;முகம் நிலத்தில் அடிபடவிழுந்து மூக்குடைந்து இரத்தம் மெல்லக் கசிந்தது. வலியின் வேதனை தாங்க முடியாமல் இறுக மூடிய கண்களை இலேசாகத் திறந்தேன். மேலே முகில்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறியிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ரை குஞ்செல்லோ...என்ரை செல்லமெல்லோ...!"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;(முற்றும்) &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;............................................................&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;5 அல்லது 6 வருடங்களுக்கு முன்னர் எழுதியது*.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-112128673949313004?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/112128673949313004/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=112128673949313004' title='46 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/112128673949313004'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/112128673949313004'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/07/blog-post.html' title='ஒரு பைத்தியம் நிலா பார்க்கிறது*'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>46</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111955897878873411</id><published>2005-06-23T16:33:00.000-04:00</published><updated>2005-06-24T15:03:02.920-04:00</updated><title type='text'>எழுதி முடிக்கப்படாமல் போன சிறுகதை</title><content type='html'>பத்து ரூபா.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தலைப்பில் ஒரு சிறுகதை (கிறுக்கலாய்) எழுதி வைச்சிருந்தேன் 6 வருடங்களுக்கு முன்பு. அதனை மெருகேற்ற வேண்டும் என்று எண்ணி அது நிறைவேறாமலே போய் விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கிறுக்கலை இப்போது காணவில்லை. இன்னும் ஒருக்கா வடிவா தேடிப் பார்க்க வேண்டும். சிறுகதையில் எனக்கு இப்ப நம்பிக்கை இல்லாமல் போனதும் தொலைந்தமைக்கு ஒரு காரணமாக இருக்கும் என்று நினைக்கிறன்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்து ரூபா என்பதுதான் அக்கதையின் தலைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;பத்து ரூபா.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு தமிழ் ஆசிரியரின் கதை. நேர்மையும் கண்டிப்பும் நிறைந்த தமிழ் ஆசான் அவர். ஒருநாள் அவரது பாதையில் ஒரு பத்துரூபாத்தாள் கேட்பாரற்றுக் கிடந்தது. அக்கம்பக்கம் பார்த்துவிட்டு அதனை தனது சட்டைப்பையினுள் போட்டுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அவர் வீடு வந்ததும் குற்ற உணர்ச்சி அவரைப் பிய்த்துத் தின்றது. ஊருக்கு உபதேசம் செய்யும் தானே இப்படியான ஒரு செயலை எப்படிச் செய்யலாம் என்று அவருள் கேள்வி எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் மற்றவர்கள் எல்லாம் இவரினைச் சுட்டி எள்ளி நகையாடுவது போல இவர் உணர்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;...&lt;br /&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான வதைகளின் பின் ஓடோடி வீடு வரும் அவர் அந்தப் பத்து ரூபாவை பிள்ளையார் கோவில் உண்டியலில் போட முடிவு செய்கின்றார்.&lt;br /&gt;கோவிலுக்குப் போய் பையினுள் கையை வைச்சால் அங்கு அந்தப் பத்து ரூபாவைக் காணவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வந்த வழியே அவர் திரும்ப பதறிக்கொண்டு ஓடுகின்றார். அங்கு ஒருவன் குனிந்து எதையோ எடுக்கின்றான். அது அது... அது அவர் எடுத்த பத்து ரூபா.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் கெக்கட்டம் விட்டுச் சிரித்தார். தான் பட்ட மன உளைச்சலை இப்ப இந்த ஒருவன் படப் போகின்றானே என்று. பாதையால் போவோர் இவரை விசித்திரமாய்ப் பார்த்துச் செல்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;...................................................&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இதுதான் கதை. எழுதி முடிக்கப்படாத எனது 2ஆவது அல்லது 3ஆவது சிறுகதை.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111955897878873411?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111955897878873411/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111955897878873411' title='54 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111955897878873411'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111955897878873411'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/06/blog-post_23.html' title='எழுதி முடிக்கப்படாமல் போன சிறுகதை'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>54</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111936166400462614</id><published>2005-06-21T09:46:00.000-04:00</published><updated>2005-06-21T10:12:14.140-04:00</updated><title type='text'>நாய் கடிக்கும் கவனம் (பகுதி 2)</title><content type='html'>செல்லமக்காவீட்டு நாய்க்குட்டிக்கு சோறு போட்டால் எப்படிச் சிரிக்குமோ அப்படி அவள் சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாய் ஒன்று அமைதியில்லாமல் அல்லாடிக் கொண்டிருந்தது. ஓ அதுவும் நான் தேடுமாற்போல் யாரையோ தேடுகின்றதோ? கேட்க நா துடித்தது. அதன் கூரிய பற்களைப் பார்த்த பின்பு என் முடிவினை மாற்றிக்கொண்டேன். பிறகொருநாள் அதன் பல்லெல்லாம் கொட்டுப் பட்ட பின்னர் கேட்கலாம் என்று எனது மனசைச் சமாதானப்படுத்திக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;..........&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;பகுதி ஒன்றுக்கு &lt;/span&gt;&lt;a href="http://kanitham.blogspot.com/2005/06/blog-post_111819097599502002.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இங்கே&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt; செல்க.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111936166400462614?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111936166400462614/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111936166400462614' title='51 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111936166400462614'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111936166400462614'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/06/2_21.html' title='நாய் கடிக்கும் கவனம் (பகுதி 2)'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>51</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111930395492679680</id><published>2005-06-20T17:50:00.000-04:00</published><updated>2005-06-21T09:52:02.066-04:00</updated><title type='text'>அந்நியன் ஆனேனே</title><content type='html'>இரண்டு கல்யாணங்களுக்குப் போய் நன்றாய் உண்டுங் கண்டும் வீடு திரும்பும் போது அந்நியன் படம் பார்க்க நண்பர்கள் திட்டமிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒரே அசதியாய் இருந்தது. படம் பார்க்கவே அன்று விருப்பம் இருக்கவில்லை. அதனைவிட நானொரு கஞ்சன். அநியாயமாய் ஒரு படத்திற்கு 15$ செலவழிக்க நானொருபோதும் விரும்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;10$ தான் இம்முறை என்று நண்பன் சொன்னபோது மறுப்பேதும் சொல்லமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு திரையரங்கிற்குப் போனால் அங்கு house fullஆம். சரியென்றுவிட்டு இன்னொரு திரையரங்கிற்கு பெருந்தெரு ஊடாகப் பயணஞ் செய்து போயாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு இருக்கைகளுக்கு இலக்கம் இல்லை. யாரும் எங்கும் இருக்கலாம். வெளியில் பார்வையாளார்களை வரிசையாக நிற்க வைக்கக்கூட அந்தப் புண்ணியவான்கள் முயற்சி செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவாறு முண்டியடித்துப் படம் பார்க்க இருந்தாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தத் திரையரங்கின் ஒலியமைப்பு சரியான கேவலம். ஒலியினளவைக் கூட்டி விட்டிருந்தார்கள். நானொன்றும் பாதி செவிடில்லை என்று சொல்லி திரையரங்கின் உரிமையாளரின் பிடரியில் ஒரு சாத்து சாத்த முடியாதா என்று மனசு வன்முறையாய்ச் சிந்திச்சது.&lt;br /&gt;&lt;br /&gt;ச்சை...அஞ்சு சதத்துக்கு உதவாத ஒரு திரைப்படத்திற்காக நானேன் வன்முறையாய்ச் சிந்திப்பான். என்னிலேயே எனக்கு வெட்கம் எழுந்தது. பக்கத்தில் இருக்கும் தோழன் சொன்னான் "perfect volume" என்று. ஒருவேளை என்னில்தான் பிழையோ?&lt;br /&gt;&lt;br /&gt;எப்படா படம் முடியும் என்றிருந்தது. ஒரு கட்டத்தில் வெளியே போய் நண்பர்கள் படம் பார்த்து முடியும் வரை காத்திருக்கலாமோ என்றும் யோசித்தேன். அவர்களது இன்பத்தை நான் ஏன் குலைப்பான் என்றுவிட்டு அமைதியாய் படம் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் முடிந்து வெளியே வரும்போது முடிவு செய்தேன். இனி திரையரங்கிற்குச் சென்று தமிழ்ப்படம் பார்க்ககூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனைவிட முக்கியமாய் என்னுள் ஒரு கேள்வியெழுந்தது. ஏன் என்னால் என் நண்பர்களைப்போலிருக்க முடியவில்லை? நான் ஏன் அந்நியனானேன்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111930395492679680?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111930395492679680/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111930395492679680' title='61 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111930395492679680'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111930395492679680'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/06/blog-post_20.html' title='அந்நியன் ஆனேனே'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>61</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111901539343846070</id><published>2005-06-17T09:35:00.000-04:00</published><updated>2005-06-17T09:36:33.446-04:00</updated><title type='text'>இலக்கணம் பிழைக்குதடி  தலைக்கனம் குறையுதடி</title><content type='html'>நேற்று வருவதாக நாளைக்குச் சொல்கின்றாயே. &lt;br /&gt;&lt;br /&gt;ஏன் வருவாள் என்றுவிட்டு வராமல் இருப்பாய்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111901539343846070?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111901539343846070/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111901539343846070' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111901539343846070'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111901539343846070'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/06/blog-post_17.html' title='இலக்கணம் பிழைக்குதடி  தலைக்கனம் குறையுதடி'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111895674155654584</id><published>2005-06-16T17:13:00.000-04:00</published><updated>2005-06-16T17:19:01.563-04:00</updated><title type='text'>அக்கா சொன்ன நான்கு வரிக்கதை</title><content type='html'>ஆடு ஒன்றின் காலிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.   அதற்குப் பக்கதிலிருந்து ஒருவன்  அழுது கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வழியால் வந்த அவனது  நண்பன்,  "இது உன்னுடைய ஆடு அல்லவா.  என்ன நடந்தது. யார் அதன் காலை முறித்தார்?"  என்று கேட்டான்&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அந்த ஒருவன் சொன்னான்:&lt;br /&gt;"விருந்தினர்கள் வருகின்றார்கள் இன்று.   அவர்களுக்கு ஆட்டுக்கறி என்றால் ரொம்பப் பிடிக்குமாம்.  அன்பாக நான் வளர்த்த ஆடு இது.   ஒரேயடியாய் எப்படி நான் அதைக் கொல்வேன்.. அதுதான் கொஞ்சங் கொஞ்சமாய்க் கொல்லுறன்".&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;....&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:78%;"&gt;இக்கதையிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் நீதி? அதை உங்களிடம் விட்டுவிடுகின்றேன்.&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111895674155654584?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111895674155654584/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111895674155654584' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111895674155654584'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111895674155654584'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/06/blog-post_111895674155654584.html' title='அக்கா சொன்ன நான்கு வரிக்கதை'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111886435568928846</id><published>2005-06-15T15:36:00.000-04:00</published><updated>2005-06-15T16:10:14.646-04:00</updated><title type='text'>தமிழாக்களின்ரை முகத்திலை எண்ணை வழியுமாம்</title><content type='html'>தமிழர்களை எப்படி அடையாளங் காண்பது என்ற பேச்சு வந்தபோது தொடர்புசாதனத்தைச் சேர்ந்த ஒருவர் சொன்னர்:&lt;br /&gt;"முகத்திலை எண்ணை வழியும்; லிப்டில் போனால் கத்தரிக்காயும் மீன் பொரியலும் மணக்கும்".&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சொல்லக்கூடும் தான் நகைச்சுவையாகத்தான் சொன்னதாக.&lt;br /&gt;&lt;div align="center"&gt;......&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;கனடாவில் ஒரு தமிழ் வகுப்பு. வாத்தியார் சொன்னார் பொதுவா திராவிடர்கள் கறுப்பென்று. எல்லா மாணவர்களும் ஆளையாள் பார்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி கரவெட்டியின் சுட்டெரிக்கும் வெய்யிலே...ஆம் நான் மட்டுமே பொதுவா திராவிடன்.&lt;br /&gt;&lt;br /&gt;(ஆச்சரியப்பட வேணாம். அதொரு சின்ன வகுப்பு).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111886435568928846?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111886435568928846/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111886435568928846' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111886435568928846'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111886435568928846'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/06/blog-post_111886435568928846.html' title='தமிழாக்களின்ரை முகத்திலை எண்ணை வழியுமாம்'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111885530483319199</id><published>2005-06-15T13:08:00.000-04:00</published><updated>2005-06-15T13:09:58.686-04:00</updated><title type='text'>பாட்டியொருத்தி பேரனில் கோபங் கொண்டாள்</title><content type='html'>நான் சுட்ட வடையை சுட்ட காக்காவே,&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் பொறு இங்கு கனடாவில் என் பேரன் உள்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;நாளை வந்து உனை சுடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கே இப்ப தன் சோதரங்களை சுட்டு பயிற்சி எடுக்கிறான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111885530483319199?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111885530483319199/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111885530483319199' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111885530483319199'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111885530483319199'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/06/blog-post_15.html' title='பாட்டியொருத்தி பேரனில் கோபங் கொண்டாள்'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111862232749016460</id><published>2005-06-12T20:23:00.000-04:00</published><updated>2005-06-12T20:25:27.496-04:00</updated><title type='text'>நன்றி வாங்கலையோ நன்றி வாங்கலையோ</title><content type='html'>இந்த மேடை நிகழ்வுகளுக்குப் போனால் எனக்குப் பிடிக்காத விடயங்கள் மூன்று இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;1) பிரதம விருந்தினர் உரை&lt;br /&gt;2) விசர் வரச் செய்யும் ஒலியமைப்பு&lt;br /&gt;3) நன்றியுரை&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குரிய காரணங்களை உங்களுக்கு நான் சொன்னால் பிறகு அந்த உரைகளுக்கும்,  எனது இந்த 'நன்றியுரைக்கும்' வித்தியாசம் இல்லாமற் போய்விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;மறக்க முதல் ஒண்டைச் சொல்ல வேணும்.   'முதலிரவு' என்ற பதிவை நானிட்ட நாளில் எனது வலைப்பதிவிற்கு வருவோரின் எண்ணிக்கை 25% ஆல் கூடியது.    இது தற்செயலான நிகழ்வென்று எண்ணத்தான் விரும்புகின்றது மனசு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நட்சத்திர வாரத்திலையிருந்து நான் சில படிப்பினைகளைப் பெற்றிருக்கிறன்.   அதனைச் சொல்லி உங்கள் (மற்றும் என்) மனசினை நோகடிக்க எனக்கு விருப்பமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் நிறைய எழுதியிருக்கலாமோ என்று இப்ப சத்தியமா நான் வருந்தேல்லை எண்டதையும் நான் வருத்தத்தோடு பகிர்ந்து கொள்ளுறன்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னூட்டமிட்ட, வாக்கிட்ட, எனது பதிவினை வாசித்த யாவருக்கும் நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111862232749016460?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111862232749016460/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111862232749016460' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111862232749016460'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111862232749016460'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/06/blog-post_111862232749016460.html' title='நன்றி வாங்கலையோ நன்றி வாங்கலையோ'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111843371491099519</id><published>2005-06-12T00:16:00.000-04:00</published><updated>2005-06-12T00:20:53.150-04:00</updated><title type='text'>பிரிவே என்னைப் பிரிந்து போ</title><content type='html'>'ஒண்டின்ரை அருமை அது இருக்கேக்கை தெரியாது; பிரிந்து போன பின்புதான் தெரியும்' என்று சொல்லிக் கொண்டே எல்லாவற்றையும் பிரிந்து போகச் செய்யும் அதிசயமான இரண்டுகால் பிராணிகள் நாங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'இருக்கேக்கையே அருமை தெரியேல்லையாம்; பிரிந்து போன பின்பா தெரியப் போகின்றது' என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சொந்தங்களையும், பிராணிகளையும், பொருட்களையும் பிரிவதைத்தான் பிரிவென்று யாவரும் சொல்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது அடையாளங்களை நானே இழந்துபோவது பிரிவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;என்னை நானே பிரிவது பிரிவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;எனது சின்னஞ்சிறு பிராயத்தை விலகி மூப்படைந்து செல்வது பிரிவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;பரிவுக்குரிய ஒன்றை விலகிச் செல்வது கட்டாயம் பிரிவாகத்தான் இருக்க முடியும். சின்னஞ்சிறு பிராயத்தை நினைச்சுப் பார்க்கவே என் சந்தோச வானத்தில் பட்டம் பறக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிகூடத்துக்கு கள்ளம் போட்டுவிட்டு, அம்மா ஏசப் போகின்றாவே என்ற பயத்தில் அம்மாவுடன் சேர்ந்து சட்டி பானை கழுவி, வீடெல்லாம் துப்பரவு செய்து, அம்மாவுக்கு ஐஸ் வைத்தது ஏன் இப்போ கரைந்து போயிற்று?&lt;br /&gt;&lt;br /&gt;சீனிப் போத்தலைத் திறக்க முடியாமல் அதனை உடைச்சு சீனி தின்ற அந்த இனிப்பான பொழுதுகள் ஏன் உடைந்து போயின?&lt;br /&gt;&lt;br /&gt;அக்காளுடன் அடிபட்டு அடிப்பாளே என்ற பயத்தில் வேப்பமரத்தில் நாள் முழுக்க ஏறியிருந்த பொழுது ஏன் இறங்கிப் போயிற்று?&lt;br /&gt;&lt;br /&gt;அழகமக்காத்தை வீட்டுக் காணியிலை சும்மா விழுந்து கிடந்த ஒற்றை மாங்காயை எடுத்துக் கொண்டு ஓடிவர, அது களவு என்று கடிந்த அக்கா இன்று கனடாவில் சொல்கின்றாள், "தம்பி, உனக்கொன்றும் தெரியாதடா. பிடிபட்டால்தான் களவு; மற்றபடி களவில்லை". அக்காவை மாற்றியது எது? காலமா? குளிரா? பணமா? மற்ற மனங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;பிரிந்து போன சின்னஞ்சிறு பிராயமே, நீ திரும்ப வாராயோ?&lt;br /&gt;&lt;br /&gt;சின்னனிலை மனசிலை கள்ளமில்லை; வஞ்சமில்லை. பிள்ளையார் எண்டு சொன்னாலே மூன்றுமுறை தோப்புக்கரணம் போடுவம். இன்று...? இன்று பிள்ளையார் பால் குடிக்கின்றார் என்று பகிடிவதை செய்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வஞ்சனை. மனசுபூராவும் வஞ்சனை இன்று. பொய், களவு, ஏமாற்று, காட்டிக் கொடுத்தல், முன்னே நின்று அனுதாப மொழிபேசிப் பின்னே அவன் அப்படியாம் இவள் இப்படியாம் என்று புறம் பேசுகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது சந்தோசமா? மற்றவரின் துன்பத்தில், இழப்பில், குறைபாடுகளில் சிரிப்பது ஆனந்தமா? ச்சை...என்ன மனிதர்கள் நாங்கள். புண்ணைச் சொறிவதில் எவ்வளவு பேரின்பம் எமக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;கெட்ட எண்ணங்களே, வஞ்சகப் பொழுதுகளே, தீய கனவுகளே யாவும் என்னைவிட்டுப் போங்கள். கெட்டவை விலகுவது பிரிவில்லைத்தானே.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிந்த உறவுகளே! இன்னும் 10, 20 அல்லது முப்பது ஆண்டுகளின் பின் நாம் சந்திக்கலாம்; சந்திக்காதும் போகலாம். ஒருவேளை சந்திச்சாலுங்கூட அடையாளம் மாறி அடையாளங் காண மாட்டோம். இவரை முந்தி எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று யாரைப் பார்த்தாலும் தோன்றுவது போல யாரோ ஒரு நபர் என்றி விலகிச் செல்வோமோ யாரறிவார்.&lt;br /&gt;&lt;br /&gt;சேர்ந்து பிரிவதும்&lt;br /&gt;சேராமே பிரிவதும்&lt;br /&gt;பிரியாமலே பிரிவதும்&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;எங்கே, எப்போ, யாருக்கு, எவருடன், ஏன் நடக்கும் என்று தெரியாத காரணத்தால்...&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111843371491099519?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111843371491099519/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111843371491099519' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111843371491099519'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111843371491099519'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/06/blog-post_12.html' title='பிரிவே என்னைப் பிரிந்து போ'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111841638964865974</id><published>2005-06-11T11:08:00.000-04:00</published><updated>2005-06-11T11:08:22.006-04:00</updated><title type='text'>சில லூசுகள் சீதனம் வாங்க மாட்டினமாம் (பகுதி 2)</title><content type='html'>சுதந்திரம் இல்லையெண்டு கூச்சலிடும் அளவுக்கு நான் அவளுக்கு என்ன குறைதான் வைக்கப் போறன்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாத் தமிழ திரைப்படங்களுக்கும் கூட்டிப் போவன். சித்தி, மங்கை, சக்தி, கோகிலா எங்கை போறாள், அர்ச்சயா, ஆலயம், குடும்பம், குப்பம், யன்னல், அலுமாரி என வரும் எல்லா நாடகங்களையும் பார்க்க வாங்கிக் கொடுப்பன்.&lt;br /&gt;&lt;br /&gt;படையப்பா சாறி, குஷி சாறி, பூவேலி சாறி, அமர்க்களம் சாறி, மின்னலே சாறி, முழக்கமே சாறி எண்டு எல்லாச் சாறிகளும் வாங்கிக் கொடுப்பன். CTR, CTBC, கீதவாணி எண்டு எல்லா 24 மணிநேர வானொலிகளும் இழுக்கின்ற வானொலி 110 டொலருக்கு வாங்கிக் கொடுப்பன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது மனைவியை வானொலியில் நேயர் விருப்பங் கேட்க விடுவன். சில கணவன்மார் அதுக்கே அனுமதி கொடுப்பதில்லையாம். பாட்டுக் கேட்கவே சுதந்திரம் கொடுக்காத மிருகங்கள். உவ்வளவு சுதந்திரம் கொடுக்கிற என்னை அவள் பூப்போட்டு கும்பிட வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவுக்கு மேலை உவளுக்கு வேறை என்ன சுதந்திரம் வேணும். ஊரிலை புழுதி மண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு கனடாவையே காட்டப் போற எனக்கு அவள் உண்மையிலேயே அடிமையாக இருக்க வேணும். ஆனால், நான் அப்படியெல்லாம் அவளை அடிமையாக வைச்சிருக்கமாட்டன். ஏனென்டால் நான் பெண்களை மதிக்கிறவன்.&lt;br /&gt;&lt;br /&gt;சில ஆண் சிங்கங்கள் இருக்கினம்...தங்கடை சொந்த மனிசிமாரை கார் முன் சீற்றிலை இருக்க விடமாட்டினம். பெண்களே விண்வெளிக்குப் போறா இந்தக் கம்பியூட்டர் காலத்திலை உவங்கள் உப்பிடி எல்லாம் செய்யலாமோ? நான் எனது மனைவியை முன் சீற்றிலை இருக்கவிடுவன். ஆனால். அதுக்காண்டி கார் ஓட எல்லாம் விடமாட்டன். எனக்குத் தெரிஞ்ச சிலபேர் தங்கடை மனிசிமார் சொண்டுக்குப் பூசுவதையெல்லாம் தேசியப் பிரச்சினை எண்டு நினைச்சுக் கொண்டிருக்கினம். ஆனால் நான் மனைவிக்கு சிவப்பு, ரோஸ், ஏன் அவள் விரும்பினால் பச்சைக் கலரிலை கூட வாங்கிக் குடுப்பன். அவளுக்கு நான் அவ்வளவு சுதந்திரம் கொடுப்பது ஏன் தெரியுமோ? நான் பெண்களின் உணர்வுகளை மதிக்கிறவன். என்ரை அம்மாவும் ஒரு பெண்தானே! பெண்களின் உணர்வுகளை மதியாதிருப்பது தாயையே மதியாதிருத்தல் போலல்லோ.&lt;br /&gt;&lt;br /&gt;என்ரை இவர் பான்ஸ் போட விடுவாரோ, அல்லது சேலைதான் கட்டிகொண்டு மாரடிக்க வேணுமோ என்ற கேள்வியே எழாத வண்ணம் நான் கனடாவுக்கு ஏற்ற மாதிரி விதம்விதமா பான்ஸ் எல்லாம் போடவிடுவன். கனடாவிலை பொட்டுப் போடுறது, போடாமல் விடுவது பெரிய விடயமாப் போச்சு இப்ப. அதிலை எனக்கொரு பிரச்சினையும் இல்லை. நான் பெண்களது சுதந்திரத்துக்கு முன்னுரிமை கொடுக்கிறவன். அவள் பொட்டுப் போடலாம், போடாமல் விடலாம். அது அவளின்ரை தனிப்பட்ட விருப்பமல்லோ.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பவும் நான் சொல்லுறன். வீட்டிலை எல்லா வேலையும் அவள்தான் செய்யவேணும். நான் ஒரு துரும்புமே தொடமாட்டன். என்ரை அம்மா என்னை இராசா போலை வளர்த்தவா. நான் இராசா...சிங்கக்குட்டி. எல்லாத்துக்கும் மேலாலை நான் ஒரு தமிழன் எல்லோ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;(முற்றும்...மேடைப் பேச்சு மட்டுமே)&lt;/div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;....................................................&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கனடாவில் நிகழ்ந்த "வீரம்" என்ற மேடை நிகழ்வில் இது வாசிக்கப்பட்டது (2000இல் எண்டு நினைக்கிறன்). பகுதி ஒன்றுக்கு &lt;/span&gt;&lt;a href="http://kanitham.blogspot.com/2005/06/1.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இங்கே&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt; செல்லவும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111841638964865974?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111841638964865974/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111841638964865974' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111841638964865974'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111841638964865974'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/06/2.html' title='சில லூசுகள் சீதனம் வாங்க மாட்டினமாம் (பகுதி 2)'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111841630606874229</id><published>2005-06-10T11:20:00.000-04:00</published><updated>2005-06-10T11:22:03.496-04:00</updated><title type='text'>சில லூசுகள் சீதனம் வாங்க மாட்டினமாம் (பகுதி 1)</title><content type='html'>தமிழ் என் உயிருக்கு நேர். ஆம் நான் ஒரு தமிழன். எமக்கென்று சில கலாச்சாரக் கூறுகள் உள்ளன. அவற்றை எமது அடுத்த சந்ததிக்கும் எடுத்துச் செல்வேன். ஒவ்வொரு தமிழனதும் கடமையிது என்பதனை உரத்துச் சொல்வோம் உலகுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணடிமை, பெண்ணியம், சீதனம் பற்றி இன்று இலக்கிய ஆக்கங்கள் தொட்டு இருபத்துநான்கு மணி நேர வானொலி தாண்டி, இலவசப் பத்திரிகை வரை எல்லாம் தம்மால் முடிந்தவரைக்கும் முழக்கமிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இது பற்றிய விழிப்புணர்வு இன்றைய இளைஞர்களிடையே இல்லாமல் போனதன் நிமித்தம் நான் இன்று இந்தச் சபையோருக்கு சீதனம் பற்றியும், பெண்ணடிமைத்தனம் பற்றியும் சற்றுச் சொல்லலாம் என்று வந்திருக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உன்னாணைக் கேக்கிறன் சீதனம் வாங்கிறதிலை என்ன பிழை இருக்கு? என்ரை அம்மா சாணகம் அள்ளி, மிளகாய்க்கண்டு வைச்சு என்னைப் படிப்பிச்சவா. என்னை இப்படி ஒரு டாக்குத்தராக்குவதற்கு எவ்வளவு கஸ்ரப்பட்டிருப்பா என்று எனக்கு மட்டும்தான் தெரியும். அப்படியான எனது அம்மா கேட்கும் சீதனத்தை எனக்கு வாறவள் தாறதுதானே நியாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில லூசுகள் சீதனம் வாங்க மாட்டினமாம். பாவம் அவை. பிழைக்கத் தெரியாததுகள். நான் நினைக்கிறன்அவையளுக்கு சீதனம் வாங்கிற அளவுக்குத் தகுதியில்லைப் போலை.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றது கதையோடை கதையா எனக்கு ஒரு வடிவான, வெள்ளை நிறப்பெண்தான் மனைவியாக வர வேண்டும். வெள்ளை நிறத்திலை பெண்ணெடுக்கிறது அப்படியொன்றும் பெரிய காரியமில்லைப் பாருங்கோ. ரொறன்ரோவிலை ஒரு தமிழ்ப் பத்திரிகைக்கு 20 டொலர் கொடுத்தால் இன்ன நிறத்திலை இன்ன சாதிப் பெண் வேண்டுமென்ற மணமகள் தேவை விளம்பரம் போடுவினம். சொன்னா நம்புங்கோ, அந்தப் பத்திரிகை 20 டொலர் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் போடும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கொஞ்சம் கறுப்புத்தான். இப்ப அதுக்கு என்ன எண்டுறன். ஆணுக்கு கறுப்புத்தான் வடிவென்று உவையளுக்குத் தெரியாதாக்கும். வாறவள் கறுப்பெண்டாலும் பரவாயில்லை; என்ன கொஞ்சம் சீதனம் கூடத் தர வேண்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐயோ சொல்ல மறந்து போட்டன். வாறவள் படிச்சிருக்கக் கூடாது. படிச்சவைதான் பெண் சுதந்திரம் என்று சும்மா குடும்பத்திலை குழப்பத்தைக் கொண்டு வருகினம். கல்யாணங் கட்டினாப் பிறகு அவள் தன்ரை தாய் தகப்பனை ஸ்பொன்ஸர் பண்ணுற வேலையெல்லாம் இருக்கக்கூடாது. அதுகள் கிழடுகள்...இங்கை வந்து வீட்டிலை கரைச்சல், அதுகளுக்கும் கரைச்சல்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் வேலைக்குப் போறன் எண்டாலும் எனக்குப் பரவாயில்லை. இங்கை பருங்கோ, நாங்கள் பெண்களின் உணர்வுகளை மதிக்கப் பழக வேண்டும். ஏனெண்டால் அதுகள் ஏற்கனவே பலவீனமானவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் வேலைக்குப் போனால் அந்தக் காசிலை என்ரை தங்கைச்சிக்கு நல்ல இஞ்சினியர் மாப்பிள்ளையா கட்டிக் கொடுக்கலாம். என்ரை அம்மா, அப்பா பாவம். அவையளையும் ஸ்பொன்ஸர் பண்ணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கதையோடை கதையா வேலைக்குப் போனாலும் அவள்தான் சமைக்க வேணும். தங்கைச்சியின் கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளே இவள் வேலைக்குப் போறதை நிப்பாட்ட வேணும். சொந்தமா நாலு காசு உழைச்சா இவளவைக்கு திமிர் வந்திடும். சொல்ல மறந்து போனன்...நான் பெண்களை மதிக்கிறவனாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு பற்றி எமது சங்க கால இலக்கியங்கள் திரும்பத் திரும்பச் சொன்னதை இவள் கட்டாயம் திரும்பத் திரும்பக் கடைப்பிடிக்க வேணும். வேறொரு ஆண்மகனை அவள் ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது. பெடியங்கள் நாங்கள் என்னவும் செய்யலாம். எங்கடை அரசர்கள் எத்தினை மகாராணிகளை வைச்சிருந்தார்கள் என்று உந்தப் பெண்களிற்குத் தெரியாதாக்கும். ஏன், எல்லாம் வல்ல எம்பெருமான் முருகன்கூட வள்ளி, தெய்வானை என் இரண்டு பெண்களைத் திருமணஞ் செய்தானே. மகேசன் எவ்வழி மக்கள் அவ்வழி. இரண்டு ஆண்களைத் திருமணஞ் செய்த பெண் கடவுள் இருந்தல் சொல்லுங்கோ...நான் இப்பவே மன்னிப்புக் கேட்கிறன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;(தொடரும்)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;....................................................&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கனடாவில் நிகழ்ந்த "வீரம்" என்ற மேடை நிகழ்வில் இது வாசிக்கப்பட்டது (2000இல் எண்டு நினைக்கிறன்).&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111841630606874229?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111841630606874229/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111841630606874229' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111841630606874229'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111841630606874229'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/06/1.html' title='சில லூசுகள் சீதனம் வாங்க மாட்டினமாம் (பகுதி 1)'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111819257131636965</id><published>2005-06-10T09:01:00.000-04:00</published><updated>2005-06-10T11:23:06.076-04:00</updated><title type='text'>முற்றுமா முற்றாதா?</title><content type='html'>காலத்தைத் தெளிவாகக் காட்டின்&lt;br /&gt;தெரிநிலை வினையாம்.&lt;br /&gt;குறிப்பாகக் காட்டின்&lt;br /&gt;குறிப்புவினையாம்.&lt;br /&gt;நீ தெரிந்து தாக்குகின்றாய்&lt;br /&gt;குறிவைத்தும் தாக்குகின்றாய்.&lt;br /&gt;நீ யாரோ எனக்குச் செய்த செய்வினையா?&lt;br /&gt;அன்றில்எந்தனது ஊழ்வினையா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111819257131636965?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111819257131636965/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111819257131636965' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111819257131636965'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111819257131636965'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/06/blog-post_10.html' title='முற்றுமா முற்றாதா?'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111834868708494986</id><published>2005-06-09T16:15:00.000-04:00</published><updated>2005-06-09T16:24:47.090-04:00</updated><title type='text'>முதலிரவு</title><content type='html'>வாழ்க்கையில்&lt;br /&gt;மேடு பள்ளம் இருக்குமென்று&lt;br /&gt;அந்த ஒரு இரவில்தான்&lt;br /&gt;புரிந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(யாவும் கற்பனையே)&lt;br /&gt;&lt;br /&gt;...............................&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நானும் கவனிச்சுக்கொண்டுதான் இருக்கிறன்.    வேறையொரு பால்வீதியிலை தொலைஞ்சு போன நட்சத்திரமா உணர்கின்றேன்.   அத்துவானக் காட்டிலையிருந்து நான் புல்லாங்குழல் வாசிக்கின்றேன்...கேட்பவர் எவருமில்லை.    அந்தக் கொதியிலைதான் மேலையுள்ள வரைவிலக்கணத்தைப் பதிஞ்சன் எண்டதை தயவு செய்து மறக்க வேண்டாம்.   யாவும் கற்பனையே எண்டதுக்குக் கீழை அடிக்கோடிடவும். &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111834868708494986?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111834868708494986/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111834868708494986' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111834868708494986'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111834868708494986'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/06/blog-post_09.html' title='முதலிரவு'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111826753896598951</id><published>2005-06-08T17:46:00.000-04:00</published><updated>2005-06-09T11:15:52.253-04:00</updated><title type='text'>வேலைதேடு படலம்</title><content type='html'>... சற்று வளர்ந்து அந்நிய மண்ணில் திசைகளெதுவும் தெரியாமல் திகைத்து நின்றது கொஞ்சக் காலம். பின் மற்றவரின் தடம் பற்றி படித்துப் பட்டம் பெற, தொடங்கியது கவலைதரு(ம்) படலம். அது வேலை தேடு(ம்) படலம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வேலைதேடு படலம் பற்றிச் சற்றுச் சொல்வேன் கேள்மின்:&lt;br /&gt;&lt;br /&gt;பட்டமளிப்பு விழாவுக்கு பாட்டியும் வந்து தன்ரை பொக்கைவாயாலை கொஞ்சி பெருமைப்பட்டதுவும்,&lt;br /&gt;&lt;br /&gt;"...சான்றோன்" எனக்கேட்டு அன்னை என்னை அரவணைத்து நின்றதுவும்,&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா பரிசாய்த் தந்த நாற்சக்கர ஊர்தியும்,&lt;br /&gt;&lt;br /&gt;எஞ்சினியர் மாப்பிள்ளை! எந்த ஊரிலையும் இனி சம்மந்தம் பேசலாம் என்ற அக்காவின் நிலத்தில் நிற்காத கால்களும்&lt;br /&gt;&lt;br /&gt;என்று எல்லாம் நன்றாய்த்தானிருந்தது தற்போது வேலை எடுக்கிறது "கொஞ்சம்" கஸ்ரம் என்று என் பாழாய்ப்போன உள்ளறிவு புரிந்து கொள்ளும்வரைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கால்மேலே கால்போட்டு வீட்டிலே நானிருக்க, "தயவு செய்து எங்களது நிறுவனத்திலை வேலை செய்ய வாங்கோ" என்று ஒரு ஆங்கிலேய முதலாளியும் என்வீட்டுக் கதவு தட்டிக் கெஞ்சப் போவதாகக் கனவு காணவில்லைத்தான். அத்துடன், இருநூற்றியைந்து வேலைக்கு முயன்று ஒரு வேலைதனினும் கிடைக்காமல் போகுமென்றும் நான் கனவிலும் நினைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டியும் பாவம். இப்பதான் உலகம் விளங்கியிருக்கும்... "மோனை எனக்கு எப்ப உளைச்சுத் தரப் போறாய்?" என்று ஒரு பேச்சுக்குத்தானும் கேட்பதில்லை இப்போ.&lt;br /&gt;&lt;br /&gt;ஈன்ற பொழுதில் பெரிது உவந்த அன்னைகூட இப்போ சாப்பாடு போட்டுத் தருவதில்லை. வேலையில்லாமல்தானே இருக்கிறான் பெடியன்; போட்டுச் சாப்பிட்டா என்ன என்று அவவும் நினைத்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சும்மா வீட்டிலை இருப்பதாயும், தன்ரை மனிசிக்கு பேருந்தில் பயணஞ்ச் செய்யகளைப்பதாயும் சொல்லி பெருமையாத் தந்த ஊர்தியின் திறப்பினை தனக்குத் தெரிந்த நாகரீகமான முறையில் கேட்டான் என் அன்பான அண்ணா.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவும் எத்தனை காலம்தான் ஓடாய்த்தானுழைப்பார். தனக்குத் துணையாய் வேலைக்கு ஒருநாள் வாவென்றார். பின்னர், படிச்ச படிப்புக்கொரு வேலை கிடைக்குமட்டும் தன்னோடு வரச் சொன்னார். என்ரை பொடியன் எண்டைக்கும் ஒரு எஞ்சினியர் என்ற அன்னையும் பெரிதாகவோ சிறிதாகவோ ஆட்சேபிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்ப படிக்கிறேல்லைத்தானே. உன்ரை அறையை எனக்குத்தா". தங்கையும் தான் படிப்பதாய் என்னை "வாழும் அறையின்" ஓரத்திற்கு ஒருவறாய் என்னை அனுப்பி வைத்தாள். மகிழ்ச்சிப் பெருநதி ஆரோகரித்தோடியது... தங்கைச்சியும் வளர்ந்திட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"வாழும் அறையில்" நான் பட்டம் வாங்கும் படத்தைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள் அக்கா. இப்ப அதிலை பாபா பக்தியோடு நிற்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேலை தேடுவதே இப்போ வேலையாகி போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"வேலை கிடைச்சிட்டுதோ?" என்று வேலைமினக்கெட்டு கேட்பவரிடமிருந்து தப்பிக்கவாவது அவசரமாய் வேலை வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;"** அண்ணாவுக்கே வேலை கிடைக்கேல்லையாம்; எங்கடை கெதி என்னவோ" என்கின்ற அடுத்த வருடம் பட்டம் வாங்கப் போகும் தம்பிகளின் தங்கைகளின் பெருமூச்சைக் குறைக்கவேனும் எனக்கொரு வேலை வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓய்விலிருக்குமொரு பொருள் புறக் காரணிகளால் தூண்டப்படும்வரை ஓய்விலேயே இருக்குமாம். இவ்வளவு புறக் காரணிகள் என்னைத் தீண்டியும் நான் இன்னும் ஏன் "சும்மா ஓய்வில்" இருக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திடங்களிற்கு மட்டுமே அது பொருந்துமா? அல்லது படிச்ச விதியே பிழையா? அல்லது படிச்சதே தப்பா?&lt;br /&gt;&lt;br /&gt;விடையெதுவும் கிடைக்கவில்லை. விடை கிடைக்கும்போது எவையெவையெல்லாம் இழக்கப்பட்டிருக்குமோ!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111826753896598951?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111826753896598951/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111826753896598951' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111826753896598951'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111826753896598951'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/06/blog-post_111826753896598951.html' title='வேலைதேடு படலம்'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111825270253848494</id><published>2005-06-08T13:31:00.000-04:00</published><updated>2005-06-08T13:46:06.313-04:00</updated><title type='text'>குஞ்சுகள் (சிறுகதை)</title><content type='html'>இருட்டுப் போர்வை பூமியை மூட ஆரம்பித்த மாலை வேளை. வானத்தில் நிலவும், நட்சத்திரங்களும் மட்டுமே மீதியாக இருந்தன. ஆனால் காற்றோ இப்பவும் சூடாகவே வீசிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"எணை அப்பு...! என்ரை செல்லத்தைக் காணேல்லை. நீ கண்டனியோணை?" அரக்கப்பரக்க ஓடிவந்து கேள்வி கேட்ட என் பேரனிற்கு பதிலளிப்பதற்காய் வாய்க்குள் குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலைச் சாற்றினைத் துர உமிழ்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை ராசா. நான் காணேல்லை. கொஞ்சம் முன்னந்தானே நீ மடியிலை வைச்சுக் கொஞ்சிக் கொண்டிருந்தனீ..." அவனது தலையை ஆதரவாகத் தடவி கொடுத்தவாறே கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓமணை அப்பு. பவுடர் பூசி, ஒட்டுப் பொட்டும் வைச்சுப்போடு விட்டனான். அதுக்குன்னம் காணைல்லை" என்று விம்மத் தொடங்கிய எனது பேரனுக்கு வாற ஆவணி மாசம் பதினான்கு வயசாகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கோழிக்குஞ்சுகள் வளர்ப்பதென்றால் அவனுக்குக் கொள்ளை ஆசை. பள்ளிக்கூடத்தால் வந்து நேரே கோழிக்கூட்டிற்குத்தான் செல்வான். அவை பெருகப் பெருக அவற்றை விற்று உண்டியலில் காசு சேர்ப்பான்.&lt;br /&gt;கோழிக்குஞ்சென்றால் உயிரோ அன்றி அவற்றால் வரும் பயனுக்காக வளர்க்கின்றானோ என்று அறுபத்திரண்டு வயசுக் கிழம் என்னால் இன்னுமே புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் முட்டை வித்த காசைக் கொண்டுபோய் வல்லிபுரக் கோயில் திருவிழாவிலை விளையாட்டுச் சாமான், சமயப் புத்தகங்கள் எல்லாம் வாங்குவான்.&lt;br /&gt;&lt;br /&gt;படிப்பு, வீட்டுவேலை, கோழிக்குஞ்சுகள் இவைகள் மட்டுந்தான் இவனது வாழ்க்கை. தான் படித்து பெரிய ஒரு டாக்குத்தராக வரவேண்டும் என்று எப்பொதும் சொல்லிக் கொண்டிருப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாட்களாக கோழிக்குஞ்சுகள் அடிக்கடி காணாமல் போயின. மனசு நிறைய அன்போடு, பவுடர் பூசி, ஒட்டுப்பொட்டு வைச்ச அந்த சாம்பல் நிறக் கோழிக்குஞ்சுதான் இப்போது காணாமல் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அழுவதைத் தவிர வேறு ஒன்றுமே செய்யத்தோன்றாமல், எவ்வளவுதான் மன்றாடிக் கேட்டும் சாப்பிடவே விரும்பாமல் இருந்த அவனைப் பார்க்கையில் என் நெஞ்சுக்குள் எங்கோ வலித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"எடை மோனை... போயும் போயும் ஒரு அற்பக் கோழிக்குஞ்சுக்கோ அழுது கொண்டு இருக்கிறாய்! வேணுமெண்டா சொல்லு ராசா... உனக்கு நான் நாளைக்கே நூறு குஞ்சுகள் வாங்கித் தாறன். இப்ப சாப்பிடு மோனை. படுக்கைக்கு வெறும் வயித்தோடை போகக்கூடாது." என்று அவனை நான் ஆசுவாசப்படுத்த, அது எடுத்த எடுப்பிலேயே தோல்வியில் முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏனணை அப்பு... நான் திடீரெனச் செத்துப் போனா, வேறை வீட்டிலை இருந்து ஒரு பிள்ளையை வாங்கி வளப்பீங்களோ? என்னை அதுக்குன்னம் மறந்து போவீங்களோ...?" அந்தப் பிஞ்சின் கேள்விக் கணைகளை எதிர்க்க முடியாமல் வாயடைத்து போய் ன்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு முழுவதும் என்ரை செல்லம்...என்ரை செல்லம் என்று அனுங்கிக் கொண்டிருந்தான். காலையில் சற்றுப் பிந்தியே எழும்பினான். அவனது கண்கள் அளவிற்கு மீறிச் சிவந்திருந்தன. இண்டைக்கு பள்ளிக்கூடத்திலை சோதினைக்கு வாங்கில், மேசை அடுக்குறது எண்டு பொய் சொல்லி பள்ளிக்கூடத்திற்கு போகாதுவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;கோழிக் குஞ்சுகளை மேயவிட்டு, ஒளித்து ன்று அவன் பார்த்துக் கொண்டிருக்க, குஞ்சுகளிற்கு என்ன நடக்கிறது என்று அறியும் ஆவலில் நானும் அவனைச் சேர்ந்து கொண்டேன். மணி பத்தாகியும் குஞ்சுகளிற்கு ஒன்றுமே நடக்கவில்லை. தன் முயற்சியில் சற்றுமே மனந் தளராத விக்கிரமாதித்தன் போல என் பேரனும் மனந்தளரவில்லை. மத்தியான வெய்யில் தன் அகோரத்தை காட்டிய வேளையில், முருகேசர் வீட்டு கறுப்புப் பூனை பதுங்கிப் பதுங்கி வந்து ஒரு குஞ்சை லபக் என்று வாயால் கெளவியபடி ஒரு கண நேரத்தில் ஓடி மறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குஞ்சு போனாலும் அந்தப் பிஞ்சின் முகம் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது. தன் குஞ்சுகளைக் கவருகின்ற இயமனைக் கண்டு கொண்டதால்தான் அந்த மகிழ்ச்சி என்று என்னால் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்தது.&lt;br /&gt;அன்று பிந்நேரம் வீட்டால் வெளிக்கிடாமல் ஒரு மூலைக்குள் ஒடுங்கிக் கொண்டிருந்தான். முகமெல்லாம் வேர்த்துக் கிடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன ராசா... ஏதேனும் வருத்தமோ? என் உப்பிடி இருக்கிறாய்? விளையாடப் போகேல்லையோ?" என்று அவனது தலையைத் தடவிக்கொடுத்தவாறே கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பிஞ்சு நாலு பக்கமும் பார்த்துவிட்டு,&lt;br /&gt;"ஒருத்தருக்கும் சொல்லாதையணை அப்பு... என்ரை கோழிக்குஞ்சுகளை பிடிக்கிற பூனைப்பிள்ளம் சின்னம்மா வீட்டுக்குப் பின்னாலை நல்ல நித்திரையாகக்கிடந்தார். ஒரு கொங்கிறீற்றுக்கல்லை எடுத்து அவருக்கு மேலை போட்டுட்டன். அவர் ஆடாமல், அசையாமல் கிடக்கிறார்; நான் ஓடியந்திட்டன். எணை அப்பு, பூனையின்ரை ஒரு மயிரை கொட்டினால் ஆறு பிராமணர்களைக் கொன்ற பாவங்கிடைக்கும் எண்டு பள்ளிக்கூடத்திலை பெடியள் எல்லாம் சொல்லுறவங்கள். அது உண்மையோணை?"&lt;br /&gt;பயந்து பயந்து கேட்ட பேரனைப் பார்க்கும்போது எனக்கு ஒரே நேரத்தில் பாவமாகவும் இருந்தது; சிரிப்பாகவும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்கே மோனை நீ உப்பிடி யோசிக்கிறாய்? வாய் பேசாப் பிராணிகளை தொந்தரவுபடுத்தக் கூடாது எண்டு உப்பிடித்தான் எங்கடை பழைய ஆக்கள் கதையளை பரப்பிப்போட்டினம். ஆபத்துக்குப் பாவமில்லை! சரி ராசா... நீ விளையாடப்போ. கட்டையன் உன்னை தேடிக்கொண்டிருந்தவன். நான் போய் அந்தப் பூனை செத்துப்போச்சோ இல்லையோ எண்டு பார்த்து கொண்டு வாறன். "என்று சமாளித்தபடி அங்கு போனபோது கல்லுமட்டுந்தான் கிடந்தது; பூனையைக்காணவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிரவு சுடுதண்ணிக் கேத்திலோடு எங்கேயோ ஓடினான். மறுநாள் அந்த பூனையின் தோல் பொசுங்கி இருந்ததைக்கொண்டு என்ன நடந்தது என்று என்னால் ஊகிக்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இவன் இவ்வளவு ஆக்கினைகள் செய்தும் அந்தப்பூனை மீண்டும் ஒரு குஞ்சை பிடித்துவிட்டது. வயசு போன காலத்திலை என்னால் மட்டும் என்ன செய்ய முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;"உவருக்கு இண்டைக்கு நான் நல்ல பாடம் படிப்பிக்கிறன். அடியாத மாடு படியாது" என்று முணுமுணுத்துக்கொண்டு வெளியே போனவன் ஏழெட்டுப் பெடியளோடை வீட்டுக்கு வந்தான். அவனையும், அவனது சிநேகிதர்களையும் பார்க்கும்போது காரணம் புரியாமல் சிரிப்பு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓடியோடித்திரிந்து காலமை வெளிக்கிட்டவர்கள் மத்தியானம் போல் அந்தப்பூனையோடு வந்தார்கள். பூனைக்காக ஊரெல்லாம் அலைந்திருக்கிறார்கள் என்பதற்குச் சாட்சியாக அவர்களது உடல்களில் புழுதி மணல் அப்பிக் கிடந்தது. ஒரு பெடிப்பிள்ளையார் என்னிடம் ஓடிவந்து,&lt;br /&gt;"எணை அப்பு... உன்ரை பேரன் ஒரு பழைய சாக்கு வாங்கிவரட்டாம்" என்று கேட்டார். என்னதான் நடக்கப் போகின்றது என்று அறியும் ஆவலில் நானும் அவர்கள் கேட்டதைக் கொடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விறு, விறு என்று பூனையை சாக்குக்குள் போட்டுக்கட்டினார்கள். எல்லாப் பெடியளும் கைதட்டிக் கொண்டிருக்க என்ரை பேரன் ஒரு கையால் நழுவிக் கொண்டிருந்த காற்சட்டையை இழுத்துப்பிடித்தவாறே அந்தச்சாக்கை வேம்போடு சேர்த்து அடிக்கத்தொடங்கினான். என்ன செய்தும் அவனை தடுக்கேலாது எண்டபடியால் நானும் பேசாமல் இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவனது கண்களோ சிவந்திருந்தன. உடலில் இருந்து வேர்வை ஆறாக ஓடத்தொடங்கியது. பூனை கீச்சிட்டு அலறுவது இப்போது பெரிதாகக்கேட்டது.&lt;br /&gt;"எடே...! என்ரை குஞ்சுகள்தான் சத்தம் போடுதுகள். அடியாத மாடு....இல்லை இல்லை; அடியாத பூனை படியாது" குரலை உயர்த்தியவாறே பூனையைக்கொன்றுவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;நேரே என்னிடம் ஓடிவந்து, "அப்பு! என்ரை குஞ்சுகளிலை இனி ஒருத்தரும் கைவைக்கேலாது!" உரத்துக் கூக்குரல் இட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;இது நடந்து கிட்டத்தட்ட இரண்டு மாசங் கழித்து, வழமையைப்போலவே சூரியன் கிழக்கே உதித்த நாளொன்றில் சிறீலங்கா இராணுவத்தின் குண்டு வீச்சுவிமானம் போட்ட குண்டில் பதினாறு குஞ்சுகள் ஒரேயடியாக செத்துப்போயின.&lt;br /&gt;&lt;br /&gt;குஞ்சுகளின் சிதிலங்கள் விசிறிக்கிடக்க, செட்டைகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. பேரனிற்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று நான் கவலையோடு யோசித்துக்கொண்டு அவனது முகத்தைப் பார்த்தேன். அன்று அந்தப்பூனையை கொன்ற போதும் உப்பிடித்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"சாப்பிடன் ராசா..! படுக்கைக்கு வெறும் வயித்தோடை போகக்கூடாது".&lt;br /&gt;"எனக்கு பசிக்கேல்லை...!"&lt;br /&gt;சிணுங்கியவாறே சொன்னவன் அந்த விடயத்தைப்பற்றி ஒன்றுமே கதைக்காமல் விட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காவோலை ஒன்று விழுஞ்சத்தம் கேட்க, அந்த நேரத்திலும் காகம் ஒன்று கரைந்து விட்டுப்போனது.&lt;br /&gt;&lt;br /&gt;காலமை எழும்பியவுடன் அவனது முகத்தைப்பார்த்தேன். இரவு முழுவதும் அழுதிருக்கிறான் போலை; முகம் கன்றிப்போய் இருந்தது. "அப்பு..." என்று ஏதோ சொல்லவந்தவன் ஒன்றுமே கூறாமல் பள்ளிகூடம் போனான். போனவன் திரும்பி வரவில்லை. முருகேசரின்ரை பேரப்பெடியள் எல்லாம் வந்துட்டுதுகள்; இவனை மட்டுங் காணவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"எணை அப்பு...! உன்ரை பேரன் இயக்கத்திற்கு போட்டானாம்." பக்கத்துவீட்டுப் பெடியன் சொல்லிவிட்டுப்போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ரை ராசா..." எனக்கு மெய் சிலிர்த்தது. கூடவே பெருமிதமாகவும் இருந்தது. பிஞ்சுகளிற்கு உள்ள ரோசம், மானம், துணிவு கூட எனக்கு இல்லாமல் போய் விட்டது. அடியைப்போல் அண்ணன் தம்பி உதவமாட்டான் என்பது எவ்வளவு உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;என் முதுகைப்போலவே என் உள்ளமும் கூனிக்குறுகி இருந்தது. மனசுக்குள்ளும் வெளியேயும் ஒரே நேரத்தில் புழுக்கமாக இருக்க, வீட்டைவிட்டு வெளியே வந்தேன். முற்றத்தில் நின்ற வேப்பமரத்தை தாண்டி வருங்காற்று தண்ணென்றிருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;(யாவுங் கற்பனையல்ல)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;...........................................................................&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இக்கதை எட்டு வருடங்களிற்கு முன்னால் (1997) எழுதப்பட்டது. மேலும், இதுவே எனது முதலாவது சிறுகதை. unicode அறிமுகமாத காலத்தில் முரசு அஞ்சல் மூலம் தட்டச்சு செய்து பின்னர் webTamil எழுத்துருவுக்கு மாற்றித்தான் வைத்திருந்தேன். தற்போது எழுத்தெல்லாம் மாறியிருக்கின்றது. XPக்கு webTamilஐப் பிடிக்கவில்லை என்று நினைக்கின்றேன். எனவே எழுத்துப் பிழைகள் இருந்தால் என்னை மன்னித்து XPஐச் சாடவும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111825270253848494?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111825270253848494/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111825270253848494' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111825270253848494'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111825270253848494'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/06/blog-post_08.html' title='குஞ்சுகள் (சிறுகதை)'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111819097599502002</id><published>2005-06-07T20:32:00.000-04:00</published><updated>2005-06-08T09:32:24.650-04:00</updated><title type='text'>நாய் கடிக்கும் கவனம்</title><content type='html'>நாய் ஒரு அமைதியான மிருகம். எந்தவீட்டு நாய் என்று தயவு செய்து கேட்க வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாய் வள் வள் என்று சத்தமிடும்; நேரங்கெட்ட நேரத்திலை ஊளையிடும். என்ன காரணம் என்று அதற்கு மட்டுமே புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்வரூபன் ரதியக்காவுக்கு ஏதோ கடிதங் கொடுக்க அவா அவரை "நாயே, நீ உதுக்கெல்லாம் நீ ஒருகாலம் அனுபவிப்பாய்" என்று திட்டிச் சாபமிட்டார். அதே ரதியக்காவை அதே செல்வரூபன் கல்யாணங் கட்டி இப்ப நல்லா கஸ்ரப்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;குரைக்கிற நாய் கடிக்காது; கடிக்கிற நாய் குரைக்காது. ஆனால், செல்லமக்காவீட்டு நாய் மட்டும் விதிவிலக்கு. என் காலே இதற்குச் சாட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;நாய் ஒரு நன்றியுள்ள மிருகம். ஆனால், செல்லமக்காவீட்டு நாய் மட்டும் விதிவிலக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;நாய் வித்த காசு குலைக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைப் பிள்ளைக்கும் குட்டிநாய்க்கும் செல்லங் கொடுக்கக் கூடாதென்று சில &lt;a href="http://kanitham.blogspot.com/2004/07/blog-post_13.html"&gt;சொறி நாய்கள் வவ்வும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111819097599502002?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111819097599502002/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111819097599502002' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111819097599502002'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111819097599502002'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/06/blog-post_111819097599502002.html' title='நாய் கடிக்கும் கவனம்'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111818925744852066</id><published>2005-06-07T20:05:00.000-04:00</published><updated>2005-06-07T20:37:13.326-04:00</updated><title type='text'>சின்னதாய் சில வரிகள்</title><content type='html'>சோகத்தை மனசுக்குள் புதைக்கின்றேன்.&lt;br /&gt;அது இடமில்லாமல்&lt;br /&gt;கண்களால் கசிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பிறப்பிலாவது&lt;br /&gt;சேர்வோம் என்றவளே,&lt;br /&gt;போன பிறப்பிலும்&lt;br /&gt;இதைத்தானே சொல்லியிருப்பாய்.&lt;br /&gt;&lt;br /&gt;சனியனே,&lt;br /&gt;சனியனே என்றெவரையும்&lt;br /&gt;ஏசாதே.&lt;br /&gt;&lt;br /&gt;பல்லைக் கடித்துக் கொஞ்ச நாள்&lt;br /&gt;கவலையை மறக்க முயல்;&lt;br /&gt;பின்னர்?&lt;br /&gt;பல்லுக் கொட்டுப்பட்டுப் போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111818925744852066?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111818925744852066/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111818925744852066' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111818925744852066'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111818925744852066'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/06/blog-post_111818925744852066.html' title='சின்னதாய் சில வரிகள்'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111818803831686041</id><published>2005-06-07T19:45:00.000-04:00</published><updated>2005-06-07T19:47:18.323-04:00</updated><title type='text'>போரின்றிப் போனால்...?</title><content type='html'>ஈழவிடுதலைப் போராட்டம் மலர்ந்திருக்காவிடின், சிறிலங்காவின் கல்வித் திணைக்களத்தால் வெளியிடப்படும் பாடப் புத்தகங்கள் மாற்றி எழுதப்பட்டிருக்கும். சிறீலங்காவின் வடக்குக் கிழக்குப் பகுதியில் "தெமிலர்" என்ற காட்டுவாசிகள் இருந்தார்கள்; அவர்கள் மனிதர்களைப் பிடித்துத் தின்பவர்கள். அந்த இடத்தை முதலாம் பராக்கிரமபாகு தனது ஏழாவது சின்னவீட்டின் நான்காவது பிள்ளைக்கு பரிசாக வழங்கினான் என்றவாறெல்லாம் பாடப் புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மளமளவென்று வடபகுதியெல்லாம் பௌத்த விகாரைகள் கட்டுவார்கள். பின்னர், அதனை இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள மன்னன் ஒருவன் கட்டியதாகப் பூச்சுற்றியிருப்பார்கள். கந்தரோடை ஒன்றே அதற்குச் சாட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்...&lt;br /&gt;&lt;br /&gt;பிறகென்ன, உலகமும் ஆகா...ஓகோ என்று தாளம் போட்டிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;நல்ல காலம் அப்படியெல்லாம் நடக்கவில்லை. போர் இல்லாதிருந்தால் பாவம் மனிதநேயம் பற்றிக் கதைப்பவர்கள்...அவர்களுக்கு ஒரு பேசுபொருளும் இல்லாமல் போயிருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111818803831686041?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111818803831686041/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111818803831686041' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111818803831686041'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111818803831686041'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/06/blog-post_07.html' title='போரின்றிப் போனால்...?'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111810579116778581</id><published>2005-06-06T20:50:00.000-04:00</published><updated>2005-06-07T09:31:04.083-04:00</updated><title type='text'>ஒரு கூரையும், இரண்டு படிகளும்</title><content type='html'>பனையால் விழுந்தவனை மாடேறி மிதிச்சது போல்&lt;br /&gt;போரால் நொந்தவரை கடலேறிக் கொன்றதுவே.&lt;br /&gt;&lt;br /&gt;......&lt;br /&gt;&lt;br /&gt;சொந்தமாய் ஒருவீடு வேண்டுமென்பதே -எம்&lt;br /&gt;சொந்தங்களின் கொள்கையாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;......&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து பத்தாய் மிச்சம் பிடிச்சு&lt;br /&gt;கந்து வட்டிக்கு கடனும் வாங்கி&lt;br /&gt;கட்டி வைத்தார் வீடொன்று.&lt;br /&gt;இன்று சுனாமி வந்து&lt;br /&gt;தன் கோர முகங்காட்ட&lt;br /&gt;இடிந்து போனது அவர் வீடுகள் மட்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;......&lt;br /&gt;&lt;br /&gt;வீடென்பது வெறும் வீடல்ல.&lt;br /&gt;வீடென்பது மழையிலும், வெய்யிலிலும் இருந்து&lt;br /&gt;எம்மவரைப் பாதுகாக்கும்&lt;br /&gt;ஒரு வதிவிடம் மட்டுமல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;......&lt;br /&gt;&lt;br /&gt;என்வீடு என்பதற்குள் என் வாழ்வே நிறைந்துள்ளது.&lt;br /&gt;என் வீட்டுச் சுவரில் நான் கிறுக்கி வைத்தேனே&lt;br /&gt;அதைப் பார்த்து என் அம்மா அன்னை அடிக்க வந்தாவே.&lt;br /&gt;நான் பயந்து என் அப்பா பின் ஒளிந்து நின்றேனே.&lt;br /&gt;அந்த ஞாபகமும் கடலோடு போயிற்றே.&lt;br /&gt;&lt;br /&gt;மரித்துப்போன பாட்டியின் பழைய படமொன்றை&lt;br /&gt;சுவாமியறையில் மாட்டி வைத்தோமே.&lt;br /&gt;அதனையும் கடல் அடித்துப் போயிற்றே.&lt;br /&gt;&lt;br /&gt;......&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்... வீடென்பது வெறும் சீமெந்தும், மணலும் கொண்டு&lt;br /&gt;கட்டப்பட்ட ஒரு கட்டடம் அல்ல.&lt;br /&gt;அது இரத்தமும் சதையுங் கொண்ட ஒரு உயிர்ப்பான ஒரு உறைவிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவீடு ஓர் ஈழத்து வறிய தந்தையின் 25 வருட உழைப்பின் பயன்.&lt;br /&gt;ஒரு தியாகத்தின் பயன்.&lt;br /&gt;&lt;br /&gt;......&lt;br /&gt;&lt;br /&gt;எமக்கு ஒரு மாளிகை வேண்டாம்&lt;br /&gt;வீடுகள் கட்டித் தருவோம் என்ற&lt;br /&gt;சிறீலங்கா அரசின்பொய்யான வாக்குறுதிகள் வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் கேட்பது ஒரு கூரையும், இரண்டு படிகளும்.&lt;br /&gt;தருவீரா... எம் தொப்புள்கொடி உறவுகளே.&lt;br /&gt;தருவீரா... எம் கனேடியத் தமிழ் உறவுகளே!&lt;br /&gt;&lt;br /&gt;......................................................&lt;br /&gt;*அடுத்த ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் &lt;a href="http://kanitham.blogspot.com/2005/05/blog-post_31.html"&gt;நடைபவனிக்காக&lt;/a&gt; இது கனேடியத் தமிழ் வானொலியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை வாசிக்கப்பட்டதன் ஒரு பகுதி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111810579116778581?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111810579116778581/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111810579116778581' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111810579116778581'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111810579116778581'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/06/blog-post_111810579116778581.html' title='ஒரு கூரையும், இரண்டு படிகளும்'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111807279362055213</id><published>2005-06-06T11:39:00.000-04:00</published><updated>2005-06-06T11:46:33.626-04:00</updated><title type='text'>நான் + நீ =?</title><content type='html'>நான் + நீ =?&lt;br /&gt;நாலு நாளாய் நான் முயன்றும்&lt;br /&gt;நல்ல பதில் கிடைக்கவில்லை.&lt;br /&gt;நல்லதம்பி வாத்தியாரும்&lt;br /&gt;இல்லைக் கணிதஞ் சொல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;சயன்ஸ் படிக்கிற தம்பியும்&lt;br /&gt;நயண்டையாய்ச் சிரிக்கின்றான்.&lt;br /&gt;அண்டை வீட்டுப் பெட்டையிடம்&lt;br /&gt;ஒண்டியாய் போய்க்  கேட்கட்டாம்.&lt;br /&gt;வண்டி வண்டியாய் ஆவலுடன்&lt;br /&gt;நான் + நீ =? என வினவ&lt;br /&gt;நாசமாய்ப் போவாய் என்று -அந்த&lt;br /&gt;பேயே சொன்னதையோ!&lt;br /&gt;&lt;br /&gt;நான் வணங்கும் முருகனிடம்&lt;br /&gt;நான் + நீ =? என்றேன் -அவனோ&lt;br /&gt;வள்ளி, தெய்வானை நோக்கி&lt;br /&gt;நான் + நீர் =? என்றான்.&lt;br /&gt;வள்ளி நிலம் பார்க்க,&lt;br /&gt;தெய்வானை எனை முறைக்க&lt;br /&gt;ஐயோ தெய்வக் குற்றமெல்லோ!&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்துவீட்டுப் பாட்டியிடம்&lt;br /&gt;பாக்குச் சில கொடுத்து&lt;br /&gt;நான் + நீ யாதென்றேன்.&lt;br /&gt;பாட்டி முகஞ் சிவந்து&lt;br /&gt;தாத்தாவின் முகம் பார்க்க&lt;br /&gt;தாத்தா பதில் சொன்னார்.&lt;br /&gt;தான் + பாட்டி என்றால்&lt;br /&gt;நான்கு பெடியங்களும்,&lt;br /&gt;மூன்று பெட்டையளும்,&lt;br /&gt;இன்னுங்கொஞ்ச மோகமுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ரை கடவுளே&lt;br /&gt;என்ரை கடவுளே...&lt;br /&gt;நான் + நீ என்றால்&lt;br /&gt;இதுதானோ மெய்யர்த்தம்?&lt;br /&gt;நாசமாய்ப் போற தம்பி&lt;br /&gt;நில்லடா உனக்கிருக்கு!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111807279362055213?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111807279362055213/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111807279362055213' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111807279362055213'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111807279362055213'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/06/blog-post_06.html' title='நான் + நீ =?'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111807081500668774</id><published>2005-06-06T11:08:00.000-04:00</published><updated>2005-06-06T11:13:35.013-04:00</updated><title type='text'>நான்...?</title><content type='html'>எனக்கு சின்னனிலை இருந்தொராசை. எப்படியாவது ஒரு சினிமா நட்சத்திரமா வரவேண்டுமென்று. அது நடவாது என்று திண்ணமாகத் தெரிந்த போது நம்பிக்கை நட்சத்திரமாக என்றாலும் வரவேண்டுமென்று கொஞ்ச நாள் முயன்று பார்த்தேன். கடைசியாய் அதுவும் போய், ஒருவாறு தமிழ்மணத்தின் இவ்வார நட்சத்திரமாக வந்திருக்கின்றேன். பராக்! பராக்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப நான் என்னைப் பற்றிச் சற்றுச் சொல்லியாக வேண்டும். நான் எப்போது பிறந்தேன் என்பதிலிருந்து ஆரம்பிக்கவா?&lt;br /&gt;&lt;br /&gt;நான் பிறக்கேக்கை சரியான சின்னக் குழந்தை. அதனாலை எப்ப பிறந்தநான் எண்டதை சரியா ஞாபகம் வைச்சிருக்க முடியாமல் போச்சு. அதை தெரிஞ்சு வைச்சு நீங்களும் என்னதான் செய்யப் போறீங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;நான் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கரவெட்டியென்னும் ஊரிலை 1995ஆம் ஆண்டுவரை வாழ்ந்து, 1995 சித்திரை மாசத்திலை கனடாவுக்குக் குடிபெயர்ந்தேன். எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலையிருந்து படிச்சுக் கொண்டிருக்கிறன்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது University of Western Ontarioவில் புள்ளிவிபரவியல் துறையிலை பட்டப்படிப்பைத் தொடர்கின்றேன். காட்டுத்தீயை இலாபகரமாக* அணைப்பது எப்படி என்பது சம்பந்தமாகவே எனது ஆராய்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கிய உலகில் இளைத்த என் பாதங்களை எப்போது பதித்தேன் என்பதனை இளகிய மனம் படைச்ச உங்களுக்குச் சொல்கின்றேன்...யாவரும் கேளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் கலைபண்பாட்டுக் கழகமானது மாணவர்களிற்கு இடையில் வருடாந்தம் கவிதைப் போட்டியொன்றினை ஒழுங்கு செய்யும். எமது தமிழாசிரியர் கேட்டார் யாருக்கு கவிதைப் போட்டியில் பங்குபற்ற விருப்பமென்று. பக்கத்திலை இருந்தவன் "கிஸோ தன்ரை பெயரைப் போடட்டாம்" என்று பகிடியாகச் சொல்ல அதுவே வெற்றியாகி போனது (யாருக்கு?). அந்தக் கவிதைப் போட்டியில் மூன்றாம் இடத்தை (1994?) பெற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் கவிதைக்கே மூன்றாம் பரிசு கிடைச்சால், மூன்றாம் கவிதைக்கு எத்தனையாவது பரிசு கிடைக்கும் என்று கணக்குப் பார்த்தேன். இப்படியாக ஆஆஆஆ ரம்பமானது எனது எழுத்துலக வாழ்க்கை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tinypic.com/5n6syb"&gt;இந்தப் படம்&lt;/a&gt; மக்மாஸ்ரர் பல்கலைக்கழக தமிழ் மாணவர் மன்ற நிகழ்வொன்றில் - 2 வருடங்களுக்கு முந்தி - ஒரு சிறுஉரையினை வழங்கியபோது எடுக்கப்பட்டது. அந்த உரையில் நான் இறுதியாய்ச் சொன்னது:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;மிச்சம் ஏதுமின்றி -எம்&lt;/div&gt;&lt;div align="center"&gt;                     இருப்புகள் போனாலும்&lt;/div&gt;&lt;div align="center"&gt;                            கொச்சை மொழியொன்றாய் -தமிழ்&lt;/div&gt;&lt;div align="center"&gt;                           உருக்குலைந்து போகாது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111807081500668774?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111807081500668774/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111807081500668774' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111807081500668774'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111807081500668774'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/06/blog-post.html' title='நான்...?'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111757129722815405</id><published>2005-05-31T16:21:00.000-04:00</published><updated>2005-05-31T16:31:42.596-04:00</updated><title type='text'>அறிவித்தல்: மாபெரும் நடைபவனி</title><content type='html'>"ஒருவீடு செய்ய ஒருவாழ்வு செலவழித்தோம் -அதை&lt;br /&gt; ஒருநொடியில் கடலடித்துச் செல்ல இனியாது செய்வோம்" &lt;p&gt;மாபெரும் நடைபவனி&lt;br /&gt;&lt;br /&gt;சுனாமியால் தமது வீடுகளை இழந்த எம்மக்களுக்கு மீள வீடுகளை அமைத்துக் கொடுக்க நிதி சேகரிக்கும் முகமாக மாபெரும் நடைபவனி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ctcc.ca/"&gt;கனேடிய தமிழ் வர்த்தக சம்மேளனமும்&lt;/a&gt;,&lt;br /&gt;&lt;a href="http://www.mactga.org/"&gt;மக்மாஸ்ரர் பல்கலைக்கழக தமிழ் பட்டதாரிகள் மன்றமும்&lt;/a&gt;&lt;br /&gt;இணைந்து நடாத்தும் மாபெரும் நடைபவனி.&lt;br /&gt;&lt;br /&gt;காலம்: யூன்12 ஞயிற்றுக்கிழமை, காலை 8.00 தொடக்கம் மதியம் 12.45வரை&lt;br /&gt;&lt;br /&gt;இடம்: Kids Town Water Park&lt;br /&gt;3159 Birchmount Road&lt;br /&gt;(Birchmount and McNicol சந்திப்பில்)&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரது பங்களிப்பும் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;தாயகத்தை கட்டியெழுப்ப ஒன்று திரண்டு வாரீர்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புகளுக்கு:&lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;(416) 335 - 9791 &lt;/li&gt;&lt;li&gt;(416) 321 - 3333&lt;/li&gt;&lt;li&gt;(416) 559 - 4706&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111757129722815405?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111757129722815405/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111757129722815405' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111757129722815405'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111757129722815405'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/05/blog-post_31.html' title='அறிவித்தல்: மாபெரும் நடைபவனி'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111661759548479041</id><published>2005-05-20T15:32:00.000-04:00</published><updated>2005-05-20T15:33:15.490-04:00</updated><title type='text'>சாபம்</title><content type='html'>காதலிற்கு வேலியில்லை&lt;br /&gt;காதலிற்கு சாதியில்லை&lt;br /&gt;பரம்பொருளே சொல்லும்போது&lt;br /&gt;பரதேசிகள் உங்களுக்கு&lt;br /&gt;இன்னும் என்ன பிடிவாதம்?&lt;br /&gt;&lt;br /&gt;நிலவினில் கால் பதித்து&lt;br /&gt;செவ்வாய்க்கு வண்டி அனுப்பி&lt;br /&gt;விஞ்ஞானத்தை வளர்த்தோம்-ஆனால்&lt;br /&gt;மெஞ்ஞானத்தை வளர்த்தோமா?&lt;br /&gt;&lt;br /&gt;மலைச்சாதி வள்ளியை&lt;br /&gt;எம்பெருமான் முருகன்&lt;br /&gt;ஓடி ஓடிக் காதலித்த கதை கேட்டு&lt;br /&gt;கைதட்டி மெய்சிலிர்த்த நீங்கள்&lt;br /&gt;மானிடக் காதலுக்கேன்&lt;br /&gt;மண்ணை அள்ளிப் போடுகின்றீர்?&lt;br /&gt;&lt;br /&gt;காதலிற்கு குறுக்கே நிற்போர்&lt;br /&gt;குறுக்காலே போகட்டும்.&lt;br /&gt;காதலரை எதிர்ப்பவர்கள்&lt;br /&gt;நரகத்திற்கு போகட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதிகள் இல்லையடி பாப்பா!&lt;br /&gt;ஆதியிலே சொன்ன கவிஞன்&lt;br /&gt;பாடையிலே போய்விட்டான்.&lt;br /&gt;பாடையிலே போனது&lt;br /&gt;அவன் மட்டும்தானா?&lt;br /&gt;&lt;br /&gt;காதலில் உவர்கள்&lt;br /&gt;சாதிகள் பார்க்கும் மட்டும்&lt;br /&gt;ஊழிக்காற்று வீசட்டும்;&lt;br /&gt;ஊமத்தங்குருவி&lt;br /&gt;ஊரெல்லாம் அலறட்டும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111661759548479041?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111661759548479041/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111661759548479041' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111661759548479041'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111661759548479041'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/05/blog-post_20.html' title='சாபம்'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111628188498869862</id><published>2005-05-16T18:15:00.000-04:00</published><updated>2005-05-16T18:18:04.990-04:00</updated><title type='text'>தொலைந்த இரவுகள்</title><content type='html'>ஒற்றை ஆலமரம்&lt;br /&gt;பிள்ளையார் கோவிலடி&lt;br /&gt;நட்சத்திரக் குழந்தைகளோடு நிலவம்மா.&lt;br /&gt;எல்லாம் பார்த்தபடி&lt;br /&gt;உன்னை எதிர்பார்த்தபடி&lt;br /&gt;நான் இன்னும் காத்திருக்கிறேன்...!&lt;br /&gt;&lt;br /&gt;ஆசையுள்ள ஆன்மா&lt;br /&gt;அழிவதில்லையாம்.&lt;br /&gt;ஆதலால்தான் இன்னும்&lt;br /&gt;காதலோடு கை கோர்த்து&lt;br /&gt;காலங் கழிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திருவிழாப் பொழுது&lt;br /&gt;சப்பரத் திருவிழா...&lt;br /&gt;திருமுழுக்கு முடித்து&lt;br /&gt;சுவாமி கோவில் சுத்துவார்.&lt;br /&gt;கையோடு கை கோர்த்து&lt;br /&gt;நாமும் சுத்துவோம்- அப்போ&lt;br /&gt;"இப்படியே உயிர் போக வேண்டும்" என&lt;br /&gt;நீ ஏதோ வாய் குழறுவாய்.&lt;br /&gt;இப்போதும் திருவிழாவருகிறது...&lt;br /&gt;சாமியும் கோவில் சுத்துகிறார்&lt;br /&gt;நீ மட்டும் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை இழந்ததனால்&lt;br /&gt;என்னையே இழந்து போனேன்.&lt;br /&gt;ஆனால் இன்னும்&lt;br /&gt;கொஞ்சத் தாடியும்&lt;br /&gt;கொஞ்சூண்டு சோகமும்&lt;br /&gt;நாலைஞ்சு கவிதையும்&lt;br /&gt;எச்சமாய் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;*அடிக்குறிப்பு: நீண்ட காலத்திற்கு முன்பு எழுதியது. இதில் வரும் சம்பவங்கள்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111628188498869862?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111628188498869862/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111628188498869862' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111628188498869862'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111628188498869862'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/05/blog-post_16.html' title='தொலைந்த இரவுகள்'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111593840607516881</id><published>2005-05-12T18:45:00.000-04:00</published><updated>2005-05-12T18:53:26.083-04:00</updated><title type='text'>மருமகளுக்கு ஒரு கடிதம்</title><content type='html'>&lt;div align="right"&gt;கனடா&lt;/div&gt;&lt;div align="right"&gt;வைகாசி 4, 2001&lt;/div&gt;&lt;br /&gt;அன்புள்ள மருமகள் சந்தியாவிற்கு உன் மாமாச்சி சின்னக்குட்டி எழுதும் அன்பு மடல் இது.   நீ எப்பிடிப் பிள்ளை இருக்கிறாய்?   என் சுகத்திற்கென்ன... நீயிருக்கும் வரைக்கும் எனக்கென்ன குறை வரப் போகின்றது?&lt;br /&gt;&lt;br /&gt;மாமாச்சிக்கு லூசு.   ரெலிபோனிலை கதைக்கிறதை விட்டிட்டு கடிதம் எழுதுறான்  எண்டு இம்மடல் பார்த்ததும் நீ சொல்லுவாய் என்று எனக்குத் தெரியும்.   நான் ரெலிபோனிலை கதைப்பதை உன்னால் திரும்பவுங் கேட்க முடியுமோ?   ஆனால்  கடிதத்தை நீ கிழவியானாப்பிறகும் வைச்சு வாசிக்கலாம் எல்லோ.&lt;br /&gt;&lt;br /&gt;நீ கள்ளி... "படிச்சு டொக்டராக வந்து உனக்குத்தான் மாமாச்சி உழைச்சுத் தருவன்"  எண்டு எனக்குச் சொல்லி, என்ரை பொக்கற்றுக்கை உள்ள காசு எல்லாத்தையும் எடுப்பாய்.   பிறகு உன் கொப்பாவிடம் போய், மாமாச்சி கள்ளன்; அவனுக்கு ஒரு சதமுமே குடுக்கமாட்டன்.   எல்லாக் காசும் என்ரை அப்பாக் குட்டிக்குத்தான் எண்டு சொல்லுவாய்.   உது நியாயமோ...? தர்மமோ? உனக்கு மனச்சாட்சியே இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;கொம்மாவோடை வேலை செய்யிற கமலாக்கா உங்கள் வீட்டுக்கு வந்தபோது, அவவுக்கு முன்னாலை நிண்டுகொண்டு,  "அம்மாவோடை வேலை செய்யிற குண்டம்மா வந்திட்டாள்" எண்டு சொன்னியாம்.   மொக்கு...மொக்கு!   உப்பிடி வயசுக்கு மூத்த ஆக்களைச் சொல்லலாமோ?   சரி, சொன்னதுதான் சொன்னாய்... அதோடை நிறுத்தி இருக்கலாம்தானே.   மாமாச்சிதான் சொல்லித்  தந்தவன் எண்டு ஏனடி என்னை மாட்டி விட்டாய்?   உனக்கு ஆனா, ஆவன்னா சொல்லித் தந்ததைத் தவிர வேறென்ன பாவம் நான் செய்தேன்...?&lt;br /&gt;&lt;br /&gt;விடுமுறை நாட்களில் உன்னைப் பார்க்கவந்து ஓய்வாக அமர்ந்திருக்கும் பொழுதுகளில் நான் பாட்டுப் பாடுவதில் நீ அப்படி என்ன இமாலயத் தவறைக்கண்டுவிட்டாய்?   நான் பாடும்போது, "அழு...அழு! மாமாச்சி,நல்லா அழு" என்று நீ சொல்லலாமோ? அழுகைக்கும், பாட்டுக்கும் வித்தியாசம் தெரியாத ஜீவன் நீ! உனக்கு எங்கே என்  பாடலின் இனிமை தெரியப் போகின்றது?&lt;br /&gt;&lt;br /&gt;நான் எஞ்சினியரிங் படிக்கிறன் பிள்ளை. உனக்கு சொக்கா விக்கிற கடையே வாங்கித்தருவன்... தயவு செய்து "என்ரை மாமாச்சி இங்கிணிங்கிணி படிக்கிறான்" எண்டு ஆக்களுக்குச் சொல்லித் திரியாதை.   போன கிழமை சுதன் அண்ணை என்னைக் கண்டதும், "டேய் சின்னக்குட்டி... ஒழுங்காக  இங்கிணிங்கிணி படிக்கிறியோ?" எண்டு கேட்டார்.   எல்லாம் உன்னால்தான்  வந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;உன்னோடை படிக்கிற அபிராமியின் தோட்டை கழட்டிக் கொண்டு வந்திட்டாய் எண்டு அந்தப் பிள்ளையின்ரை தாய் வந்து முறைப்பாடு செஞ்சது எண்டு கேள்விப்பட்டன்.  சந்தோசம்... மிக மிகச் சந்தோசம். "ஏனடி பிள்ளை அபிராமியின்ரை தோட்டைக் கழட்டிக்கொண்டு வந்தனீ?" என்று கொம்மா     கேட்டபோது "அந்த மூஞ்சைக்கு தோடு வடிவே இல்லை" என்று நீ சொன்னதைஅந்தப் பிள்ளையின்ரை தாய் கேட்டிருந்தால் அன்று ஒரு பூகம்பமே நிகழ்ந்திருக்கும். நல்லவேளை! மாமாச்சிதான் கழட்டிக்கொண்டு வரச் சொன்னவன் என்று நீ சொல்லவில்லை.   அதுக்காக நான் வாழ்நாள் முழுவதும் உனக்கு நன்றிக்கடன்பட்டிருக்க வேண்டும் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு என்னோடு படிக்கும் ஒரு நங்கை ஒவ்வொரு நாளும் சொக்கா  கொண்டு வருவார்.   நான் "என்ரை மருமகளிற்கும் ஒரு சொக்கா தாங்கோ" எண்டால் அந்த நல்ல மனசு  படைச்சவர் உனக்கென ஒன்றுமே தரமாட்டார். நீ நல்ல வடிவென்று அதுக்கும் பொறாமை தெரியுமோ!   அத்துடன்நான் உன்னில் வானளாவிய அன்பு வைத்திருக்கின்றேன் என்று எல்லாருக்கும் தெரியும். எப்போதும் உன்னைப் பற்றியே அவர்களிற்குச் சொல்லிக் கொண்டிருப்பேன். உனது படத்தைக் காட்டுமாறு கேட்பார்கள்.   நாவூறு பட்டிடுமே என்ற பயத்தில் நான் காட்டவே இல்லை. "சரி, எப்பிடி உங்கள் மருமகள் இருப்பாள்? அதையாவது சொல்லுங்கோ" என்பவர்களிற்கு நான் என்ன பதிலளிப்பேன் தெரியுமா? "நீங்கள் எப்பவாவது தேவதை பார்த்திருக்கிறீங்களோ? அந்த தேவதைகள் எல்லாம் எனது மருமகளின் அழகு கண்டு, பிரமித்துப் பூச்சொரியும்" என்பேன்.   அதுக்கு அவையள் "உங்கடை மருமகள் ஒரு குட்டிப்பிசாசு!  நீங்கள் ஒருபெரிய பிசாசு" என்பார்கள்.   பாவம் அவை! வீட்டிலை கண்ணாடி இல்லைப்போலை கிடக்கு.     &lt;br /&gt;&lt;br /&gt;நான் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் வந்தமர்ந்தால் "போடா மாமாச்சி! போய் மரியாதையா புத்தகத்தை எடுத்துப் படி" என்று எனக்குக் கட்டளை இடுவாய்.   சொந்த மாமாவையே 'டா' போட்டுக் கதைக்கும் நீ மரியாதை பற்றிக் கதைக்கிறாய்.  அவளவை உன்னை குட்டிப் பிசாசு என்று   சொன்னதும் சரிதான் போலை கிடக்கு.   அடுத்த முறை உங்கை வரும்போது பெடியளோடை வருவன்.   அவங்களுக்கு முன்னாலை என்னை நீ 'டா' போட்டுக் கதைச்சியெண்டால் உனக்கு இருக்கு.   &lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளை இண்டைக்கு என்ன படிச்சது எனக்கேட்டால், தமிழ் வகுப்பிலை ஆ, பே, சே படிச்சனாங்கள்;  டேக்கெயாரிலை ஆனா, ஆவன்னா  படிச்சனாங்கள் என்று சொல்லுவாய்.   தமிழ் வகுப்பிலை போய் பிரெஞ்சும்,    பிரெஞ்சு வகுப்பிலை தமிழும் படிக்கிற ஒரேயொரு ஆள் நீதான்.   அது சரி, நீ இரண்டு வருசமா ஆனா, ஆவன்னாவோ படிக்கிறாய்? ஏன் உங்கடை ரீச்சருக்கு அதுக்கு மேலை ஒண்டுமே தெரியாதோ?   ஒருவேளை உன் அறிவுக்கு ஆனா, ஆவன்னா தவிர வேறொன்றும் எட்டவில்லையோ?    &lt;br /&gt;&lt;br /&gt;நீ கெலிப்பிடிச்சவள்.  என்ன வாங்கினாலும் அது உனக்குத்தான் சொந்தமாகவேண்டும்.   எல்லாமே நீதான் செய்ய வேணும்.  இல்லையெண்டால் அபியின்ரை பிறந்தநாளுக்குப்போய் நான்தான் கேக்கு வெட்டுவன் என்று  அடம் பிடித்திருப்பாயோ?&lt;br /&gt;&lt;br /&gt;நீயும் மற்றவர்போல் நல்லவள்தான்.   என்ன, சின்னதொரு வித்தியாசம்! எல்லாரும்உயிர்களிடத்தில் அன்பு வைப்பார்கள். நீயோ சடப்பொருட்களில்  அன்பு வைக்கின்றாய்.   தொலைபேசிக்கு தேத்தண்ணி பருக்கிய ஒரேயொரு மனிதப்பிறப்பு இந்த உலகத்தில் நீ மட்டும்தானே.   பாரதி இருந்திருந்தால்  உன்னை வைத்துக் காவியமே வரைந்திருப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;வேறென்ன சொல்ல.   குழப்படி செய்யாமல், அம்மாவுக்கு சமையலில் "உதவி" செய்யாமல் நல்ல பிள்ளையாக இரு.   எனது படிப்புகள் வாற மாச நடுப்பகுதியில் முடியும்.   அப்போது உன்னைக்காண நான் நேரில் வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிற்குறிப்பு:   இம்மடல் கண்டதும் உடன் பதில் போடவும் என்று உனக்குச்  சொல்ல முடியாது.   நீதான் ஆனா, ஆவன்னாவைத் தாண்ட மனம் இல்லாமல் இருக்கின்றாயே.  ஆனா, ஆவன்னாவை  அவ்வளவு தூரம் (இரண்டு வருசம்) நேசிக்கின்றாயா?&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;உனது மாமாச்சி,&lt;br /&gt;சின்னக்குட்டி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111593840607516881?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111593840607516881/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111593840607516881' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111593840607516881'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111593840607516881'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/05/blog-post_12.html' title='மருமகளுக்கு ஒரு கடிதம்'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111592829936843756</id><published>2005-05-12T15:57:00.000-04:00</published><updated>2005-05-12T16:04:59.376-04:00</updated><title type='text'>Typoglycemia</title><content type='html'>என் நண்பர் ஒருவர் எனது மின்னஞ்சலுக்கு forward செய்தது இது: &lt;br /&gt;&lt;br /&gt;Don't delete this because it looks weird. Believe it or not,you can read it ..... I cdnuolt blveiee taht I cluod aulaclty uesdnatnrd waht I was rdanieg.  The phaonmneal pweor of the hmuan mnid Aoccdrnig to rscheearch taem at Cmabrigde Uinervtisy,  it deosn't mttaer in waht oredr the ltteers in a wrod are, the olny iprmoatnt tihng is taht the frist and lsat ltteer be in the rghit pclae. The rset can be a taotl mses and you can sitll raed it wouthit a porbelm. Tihs is bcuseae the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a wlohe. Such a cdonition is arppoiately cllaed Typoglycemia :)-&lt;br /&gt;&lt;br /&gt;Amzanig huh?&lt;br /&gt;&lt;br /&gt;Yaeh and yuo awlyas thought slpeling was ipmorantt.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111592829936843756?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111592829936843756/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111592829936843756' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111592829936843756'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111592829936843756'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/05/typoglycemia.html' title='Typoglycemia'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111583725356065022</id><published>2005-05-11T14:40:00.000-04:00</published><updated>2005-05-11T14:47:33.566-04:00</updated><title type='text'>பட்டம் பறக்குது</title><content type='html'>&lt;div align="left"&gt;வா &lt;/div&gt;&lt;div align="left"&gt;இளைய கவிஞனே வா!&lt;/div&gt;&lt;div align="left"&gt;உன் கவியை நான் புகழ்வேன்&lt;/div&gt;&lt;div align="left"&gt;என் கவியை நீ புகழ்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;என்னநான் கவியெழுதவில்லையா? &lt;/div&gt;&lt;div align="left"&gt;காரியமில்லை;&lt;/div&gt;&lt;div align="left"&gt;பேரறிஞன் பட்டமாவது தா.&lt;/div&gt;&lt;div align="left"&gt;.&lt;br /&gt;இந்தியாவிலிருந்து&lt;/div&gt;&lt;div align="left"&gt;வந்தால் எவரும்&lt;/div&gt;&lt;div align="left"&gt;காலில் விழு;&lt;/div&gt;&lt;div align="left"&gt;மாலை போடு.&lt;/div&gt;&lt;div align="left"&gt;என்ன அது எஸ்.எஸ். சந்திரனா? &lt;/div&gt;&lt;div align="left"&gt;எவரெனில் உனக்கென்ன?&lt;/div&gt;&lt;div align="left"&gt;பெயர்தானே உன்னிலக்கு.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;.&lt;/div&gt;&lt;div align="left"&gt;யாரங்கே என் புகழ்பாடி &lt;/div&gt;&lt;div align="left"&gt;கவிதை யாப்பது?&lt;/div&gt;&lt;div align="left"&gt;ஓ நீயா?&lt;/div&gt;&lt;div align="left"&gt;நான் விபுலானந்தராம்;&lt;/div&gt;&lt;div align="left"&gt;நீயென் சீடனாம்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;சொல்லு...&lt;/div&gt;&lt;div align="left"&gt;உனக்கு யாது வேண்டும்?&lt;/div&gt;&lt;div align="left"&gt;மன்னி,&lt;/div&gt;&lt;div align="left"&gt;குட்டி நாய்க்கெல்லாம்&lt;/div&gt;&lt;div align="left"&gt;பட்டந் தரமுடியாது...&lt;/div&gt;&lt;div align="left"&gt;கூட்டிவா வளர்ந்த பின்பு.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;.&lt;/div&gt;&lt;div align="left"&gt;புகழ் வேணுமா?&lt;/div&gt;&lt;div align="left"&gt;அதுக்கேன் நாணம்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;நீ கவிஞன்;&lt;/div&gt;&lt;div align="left"&gt;நிமிர்ந்து நில்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;கடைத் தேங்காய் எடு;&lt;/div&gt;&lt;div align="left"&gt;வழிப் பிள்ளையாருக்கு அடி.&lt;/div&gt;&lt;div align="left"&gt;அரச மானியம் பெறு;&lt;/div&gt;&lt;div align="left"&gt;ஆரிடமும் ஆக்கங் கேள்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;மாசாமாசம் மலர் அடி.&lt;/div&gt;&lt;div align="left"&gt;வருசாவருசம் போட்டி வை;&lt;/div&gt;&lt;div align="left"&gt;பெரியப்பாவின் பெருசுக்கோ&lt;/div&gt;&lt;div align="left"&gt;மனிசியின்ரை மாமாக்கோ&lt;/div&gt;&lt;div align="left"&gt;பரிசு கொடு.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;.&lt;/div&gt;&lt;div align="left"&gt;வீட்டிலை நீ&lt;/div&gt;&lt;div align="left"&gt;சும்மாதானே நிக்கிறாய்?&lt;/div&gt;&lt;div align="left"&gt;வா, சங்கம் தொடங்குவம்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;இந்த முறை நான் தலைவர்&lt;/div&gt;&lt;div align="left"&gt;நீ உறுப்பினன்;&lt;/div&gt;&lt;div align="left"&gt;வாற வருசம் நீ தலைவர்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;ஒற்றுமையே எமது பலம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;உண்டியிலை உப்புத் தவிர்&lt;/div&gt;&lt;div align="left"&gt;மானம் ரோசம்&lt;/div&gt;&lt;div align="left"&gt;உனைக் கேளாமலே சேர்ந்திடும்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;மானமா புகழா?&lt;/div&gt;&lt;div align="left"&gt;இன்றே முடிவு செய்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;காலம் பொன்னானது&lt;/div&gt;&lt;div align="left"&gt;காலம் புகழானது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;.&lt;/div&gt;&lt;div align="left"&gt;தொலைபேசி உனக்கும்&lt;/div&gt;&lt;div align="left"&gt;இலவசம்தானே,&lt;/div&gt;&lt;div align="left"&gt;வருசம் தவறாமல்&lt;/div&gt;&lt;div align="left"&gt;வானொலிக்காரருக்கு -புது&lt;/div&gt;&lt;div align="left"&gt;வருச வாழ்த்துச் சொல்லு.&lt;/div&gt;&lt;div align="left"&gt;வண்டியும் ஒருநாள்&lt;/div&gt;&lt;div align="left"&gt;படகினில் ஏறும்;&lt;/div&gt;&lt;div align="left"&gt;படகும் ஒருநாள் &lt;/div&gt;&lt;div align="left"&gt;வண்டியில் ஏறும்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;யாரேனும் ஒருவரை &lt;/div&gt;&lt;div align="left"&gt;கையுக்கை வைச்சிரு.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;.&lt;/div&gt;&lt;div align="left"&gt;செய்ந்நன்றி &lt;/div&gt;&lt;div align="left"&gt;கொன்றார்க்கு உய்வில்லை.&lt;/div&gt;&lt;div align="left"&gt;உனக்கு நான் சொறிந்தேன் -இனி&lt;/div&gt;&lt;div align="left"&gt;எனக்கு நீ சொறி.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111583725356065022?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111583725356065022/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111583725356065022' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111583725356065022'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111583725356065022'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/05/blog-post_11.html' title='பட்டம் பறக்குது'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111524751893183611</id><published>2005-05-04T18:51:00.000-04:00</published><updated>2005-05-04T19:12:36.943-04:00</updated><title type='text'>விடை தேடும் வினாக்கள்</title><content type='html'>&lt;div align="left"&gt;கறுப்பியின் &lt;a href="http://karupu.blogspot.com/2005/05/blog-post_04.html"&gt;பதிவைப்&lt;/a&gt; படிச்சதும் எழுதியது இது. அவரது பதிவுக்கும், எனது இந்தப் பதிவிற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று...(இந்த வரியினை நீங்களே முடிச்சுக் கொள்ளுங்கள்).&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;........&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;.&lt;/div&gt;&lt;div align="left"&gt;ஒரு தமிழாசிரியரிடம் கேட்டேன் தமிழர்கள் என்றால் யார் என்று. அவர் சொன்னார் தமிழ் மொழி பேசுகின்ற, தமிழ்க் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் என்று. நான் கேட்டேன், எனது குழந்தை இங்கு கனடாவில் தமிழ் கதைக்காமல் (அதாவது கதைக்கத் தெரியாமல்) தனியே ஆங்கிலம் மட்டுமே கதைத்தால் அது தமிழ்க்குழந்தை இல்லையா என்று. அவர் சொன்னார் "நீர் தமிழ்தானே, அப்ப குழந்தையும் தமிழ்தான்". நல்லது, அப்ப தமிழனுக்கு/தமிழிச்சிக்குப் பிறந்த குழந்தை மட்டும்தான் தமிழா? கட்டாயம் இருவரும் தமிழர்களாக இருக்க வேண்டுமா? எனக்கு திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என்பதைக்காட்டிலும் எதிர்க்கேள்விகளால் சுக்குநூறாக்கப்படக்கூடிய பதில்களே எனக்குக் கிடைத்தன என்று சொல்வதே மிகச்சரியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி இருக்கட்டும்; மற்ற விடயத்துக்கு வருவோம். தமிழ்க் கலாச்சாரம்/பண்பாடு என்றால் என்ன? ஊரிலை மூண்டாம் நாலாம் வகுப்புகளிலை படிக்கேக்கை எங்களுக்குக் கிடைச்ச் சமூகக்கல்விப் புத்தகத்திலை தமிழர்கள் என்றுவிட்டு சேலையுடன் ஒரு பெண்ணை (அம்மா) காட்டுவார்கள். அவருக்குப் பக்கக்திலை வேட்டி சால்வையுடன் ஒரு ஆணை (தந்தை?). பிறகு இரண்டு பிள்ளைகள். அந்தப் பிள்ளைகள் என்ன அணிந்திருந்தார்கள் என்பதனை மறந்துபோனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓ, அப்ப சேலையணியும் பெண் தமிழிச்சி; வேட்டி சால்வை அணியும் ஆண் தமிழன். கனடாவில், பூச்சியத்துக்குக் கீழை 30 பாகை செல்ஸியஸாக இருக்கும்போது கட்டாயம் வேட்டிதான் கட்ட வேண்டும் என்று சொல்ல நான் ஒன்றும் மொக்கனுமில்லை; காட்டுமிராண்டியுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வேட்டி கட்டுவதில்லை. (அக்காவின் கல்யாணத்துக்கும், பல்கலைக்கழகத்திலை நடந்த ஒன்றிரண்டு நிகழ்விலையும்தான் வேட்டி கட்டினான்). ம்ம்ம்...நாசமாப் போக...நானும் அப்ப தமிழில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பு நான் படிச்ச பல்கலைக்கழகத்திலை நடக்கும் தமிழ் மாணவர் மன்றத்தின் நிகழ்வுகளிலை ஆரம்ப காலங்களிலை தமிழ் மாணவிகள் பொட்டு வைக்கிறேல்லை; தமிழ்ப்பண்பாட்டைப் பின்பற்றுவதில்லை என்று ஆக்கபூர்வமான(?) விவாதத்திலை ஆண்சிங்கங்கள் ஈடுபடும். அவளவையும் சும்மா இல்லை. நீங்கள் வேட்டி கட்டிக்கொண்டு வாங்கோ, நாங்கள் பொட்டு வைச்சுக்கொண்டு வாறம் எண்டுவினம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சொல்ல வாறன்? ஓ சொல்ல மறந்து போனன், பொட்டு வைச்சால்தான் தமிழெண்டுமில்லை; பொட்டு வைக்காட்டா தமிழில்லை எண்டுமில்லை என்பதுதான் பெரும்பான்மையானவரின் கருத்தாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாப் பாருங்கோ, இந்த மனிதர்களே விசித்திரமானவர்கள். தண்ணியடிக்கும்வரைக்கும் தண்ணியடிப்பது பிழையென்று ஒருவர் சொல்லுவார். புகைப்பிடிக்கும்வரை புகைப்பிடிப்பது புற்றுநோய்த் தப்பென்று இன்னொருவர் சொல்லுவார். தான் பொட்டு வைச்சுக் கொண்டிருக்கும்வரை, பொட்டு வைக்கும் பெண்கள்மட்டும்தான் தமிழெண்டு ஒரு மாணவி சொல்லுவார். ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களோடு பாலியலுறவு கொள்ளும்வரைக்கும் ஒருவர் சொல்லுவார், "ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையைத் தன் வாழ்விலும் எவர் கடைப்பிடிக்கின்றாரோ அவர்தான் உண்மையான தமிழர். (உம், அப்பிடிப் பார்த்தால், ஒருத்தியுமே இல்லாமல் வாழ்ந்தால் தமிழில்லையோ? இது சும்மா இந்தப் பதிவை ஞனரஞ்சகமாக்க).&lt;br /&gt;&lt;br /&gt;(இந்த விவாதங்கள் தந்த பாதிப்பிலை நானும், "இங்கு ஒவ்வொரு நாளும் சோறும் இடியப்பமும் சாப்பிட்டுக் கொண்டு, தமிழ்ப்படம் பாக்கிறவையெல்லாம் தாங்களும் தமிழர் எண்டு நினைச்சுக் கொண்டிருக்கினம்" என்று முழங்கினேன் பல்கலைக்கழக தமிழ் நிகழ்வுகளில். அதெல்லாம் ஒரு காலம்...)&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சொல்ல வாறன் எண்டு யாருக்காவது புரிஞ்சால் ஆனந்தம். என் கேள்விகளுக்கு கொஞ்சமேனும் ஏற்றுக்கொள்ளக் கூடிய/அறிவுபூர்வமான பதிலை யாரும் தந்தால் இன்னும் ஆனந்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் தெளிவா என் கேள்விகளை நான் சொல்லேல்லை எண்ட மாதிரி ஒரு நினைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி 1: இவர்தான் தமிழ் என்று திட்டவட்டமாகச் சொல்லல் கூடிய ஏதாவது வரையறை இருக்கின்றதா?&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி 2: அப்படி வரையறை இருந்தால், அந்த வரையறை என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி 3: தமிழ்க் கலாச்சாரம் என்று நாம் குறிப்பிடுவது எதனை?&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி 4: கலாச்சாரமும், பண்பாடும் வெவ்வேறு பதங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி 5: நாலாவது கேள்விக்குப் பதில் ஆம் எனில், கலாச்சாரம் என்றால் என்ன? பண்பாடென்றால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி 6: தமிழ்ப் பண்பாடுகள் யாவன?&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி 7: ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையினை தமிழர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமா? அப்படிக் கடைப்பிடிக்காவிடின், தமிழரில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி 8: நான் இன்று தமிழன் என்றால், என் மறைவு வரைக்கும் தமிழனா? அல்லது இடையில் நான் தமிழனன்றிப் போவேனா? எதனைப்பின்பற்றாவிட்டால் அப்படி நடக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி 9: எனது வினாக்கள் நியாயமான கேள்விகளா?&lt;br /&gt;&lt;br /&gt;..........................................................................&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;இவற்றை நான் ஏன் கேட்கின்றேன் என்று கட்டாயம் சொல்லியாக வேண்டும். கனடாவிலை எனது காலத்திலை வாழுற அனைத்துத் தமிழர்களும் தமிழ் கதைக்க வேண்டுமென்பது எனது ஆசை. அதற்கு என்னால் முடிந்த முயற்சியை நான் இன்னும் செய்யவில்லை. ஆனாலும், ஒருசில முயற்சிகளைச் செய்து அவை வெற்றிகளாயின. இப்படியாகப் பேராசைப்படும் நான் கட்டாயம் அந்த ஒன்பது கேள்விகளுக்கும் பதிலை அறிந்து வைச்சிருக்க வேண்டும் அல்லவா!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111524751893183611?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111524751893183611/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111524751893183611' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111524751893183611'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111524751893183611'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/05/blog-post_04.html' title='விடை தேடும் வினாக்கள்'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111524669843749227</id><published>2005-05-04T18:44:00.000-04:00</published><updated>2005-05-04T18:44:58.443-04:00</updated><title type='text'>ஒன்றுமே இல்லை</title><content type='html'>ஒன்றுமே இல்லை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111524669843749227?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111524669843749227/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111524669843749227' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111524669843749227'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111524669843749227'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/05/blog-post.html' title='ஒன்றுமே இல்லை'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111403658904177703</id><published>2005-04-20T18:35:00.000-04:00</published><updated>2005-04-20T18:36:29.043-04:00</updated><title type='text'>வேதனையான நகைச்சுவைகள் + தகவல்கள்</title><content type='html'>சார்லி சாப்ளின் மாதிரி நடித்துக் காட்டும் போட்டியில் சார்லி சாப்ளினுக்கு மூன்றாவது பரிசு கிடைத்ததாம்.&lt;br /&gt;&lt;br /&gt;யதார்த்தமான கிராமத்தான் பாத்திரத்தில் நடிக்க ஒருவர் தேவையென்று இயக்குநர் பாரதிராஜா கிராமம் கிராமமாய் அலைந்தாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவிலுக்குப் போய் என் அக்கா கடவுளை வணங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் ஆசைகளைத் துறக்க வேண்டுமென்று புத்தர் ஆசைப்பட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை வாசிக்கும் நீங்கள் ஒரு அறிவாளி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111403658904177703?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111403658904177703/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111403658904177703' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111403658904177703'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111403658904177703'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/04/blog-post_20.html' title='வேதனையான நகைச்சுவைகள் + தகவல்கள்'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111256803951859223</id><published>2005-04-03T18:36:00.000-04:00</published><updated>2005-04-03T21:11:25.693-04:00</updated><title type='text'>கனவு</title><content type='html'>நிறைவேறத் தயாராகும் அல்லது நிறைவேறத் தகுதியில்லாத அடிமனசின் விருப்புகள் மெல்லக் கண்திறந்து கண்மூடியிருக்க வருதல் கனவென்று மேலெழுந்தவாரியாகவும், கீழெழுந்தவாரியாகவும் இலக்கணஞ் சொல்வார் அறிவுடையார் (யார் என்று நானறியேன்).&lt;br /&gt;&lt;br /&gt;எப்பவாவது வானவில் வருமாற்போல் சில கனவுகள் நனவில் நிறைவேறியதுமுண்டு. அவை பலவேளை கனலாகவும், சிலவேளை தென்றலாகவும் எழும்.&lt;br /&gt;&lt;br /&gt;கனல் சுடுமென்றாலும் வருக்கும் கனவு பிடிக்கும்; கனவு காணப் பிடிக்கும். மற்றவரின் கனவினில் வரப் பிடிக்கும்; குறைந்தது, கனவில் வந்தாய் என்று மற்றவள்/ன் பொய் சொல்லிக் கேட்கப் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தென்றலாய் வீசுகின்ற கனவுகள் வருகையில், இது கனவாக அல்லாது நனவாக இருக்க வேண்டுமென்று மனசு ஆதங்கப்படும். கனலாக எழுகின்ற கனவுகள் முள்ளுக்கரண்டியாய் இதயத்தைப் பிராண்டும். "ஐயோ இது கனவாக இருக்க வேண்டும்" என்று அந்தக் கனவிலேயே மனங்கேவும். இது கனவுதானா என்று உறுதிப்படுத்த வலது கையினால் இடது காலினில் கிள்ளி...இப்போது வலி... கால்களில் மட்டுமல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன வயசில் அடிக்கடி ஒரு பெரிய கனவு. அந்த ஒரு கனவில் எங்கள் ஊரின் ஒரேயொரு பள்ளிக்கூடத்தின் ஒரு மூலையிலை ஒரேயொரு பாம்பு படமெடுத்தபடி சீறி நிற்கும் (அவ்வளவு படங்களையும் வைத்து ஒரு புகைப்படக் கண்காட்சியே நடாத்தலாம்). எல்லா மாணவர்களும் (கம்பீரமான அதிபரும் சேர்ந்து) பயந்து ஓடுவார்கள். எனது கால்கள் மட்டும் தமது தொழிற்பாட்டை மறந்தனவாய்... நரம்புத்தளர்ச்சியெண்டால் இப்படியான கனவுகள்தான் வருமெண்டு அம்மம்மா சொல்லுவா (அவா எல்லாத்துக்கும் ஒரு மருத்துவக் காரணி வைச்சிருப்பா).&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதெல்லாம் அந்தக் கனவு வருவதில்லை. ஒருவேளை அந்தப் பாம்பு செத்துப் போயிருக்கலாம். அல்லது எனது நரம்புத் தளர்ச்சி தளர்ச்சியுற்றுப் போயிருக்கலாம் (மேலதிக விளக்கஞ் சொல்ல அம்மம்மாவும் இப்ப உயிருடன் இல்லை).&lt;br /&gt;&lt;br /&gt;அதே சின்ன வயசில் (நிறையச்) சிலவேளை ஒரு கனவு. அது இன்றும் ஈரமான நினைவொன்றாய் என்னோடு. அது யாதெனில், ஒண்டுக்கு இருக்கிறது மாதிரிக் கனவு. இடையிலை திடீரெனப் பயம் வரும். ஐயையோ...இது கனவில்லைப் போல. சீச்சீ...கனவுதான். விடியலில் தூக்கங் கலைகையில்தான் கனவும் நனவும் சங்கமித்தோடியது புரியும். காற்சட்டையை அவசரமாய் மாத்திக்கொண்டு, "அம்மா! இண்டைக்கும் தம்பி படுக்கையிலை ஒண்டுக்குப் போட்டான்" என்பேன். பாவம் தம்பி...ஒண்டுமே தெரியாதவனாய் ஏதோ கனவு கண்டுகொண்டிருப்பான். தம்பி உடையான் ஒண்டுக்கு(ம்) அஞ்சான். அம்மா எவ்வளவுதான் திட்டினாலும் வெறித்து வெறித்துப் பார்ப்பான்...என்னை. ஒரு அன்புத் தம்பியாய் உள்ளவன் இதற்கும் உதவாவிடின் பிறகெப்போதுதான் உதவுவான்? (தம்பி! தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளு).&lt;br /&gt;&lt;br /&gt;அது என்னவோ தெரியவில்லை, கொஞ்சம் வளர்ந்த பின் கனவுகளும் வளரத் தொடங்கின. அபோதைய கனவுகள் யாவிலும் நான்தான் கதாநாயகன். நாலு பேரைப் புரட்டிப் போடும் பலங் கொண்டவனாய்... சின்ன வயசில் தமிழ்ச்சினிமாவை அளவுக்கதிகமாய் நேசித்ததன் பக்க விளைவோ பயங்கர விளைவோ யாதென்று நானறியேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பருவ வயசில் பருவக்கனவுகள்தான் (அடிக்கடி) வருமென்று நல்ல மற்றுங் கெட்ட கதைகளில் படிச்சதுண்டு. அப்படியான கனவுகள் எனது கனவுகளில்கூட வந்தாதாய் எனக்கு ஞாபகமுமில்லை; தங்களுக்கு வந்ததாய் ஊரில் எவருமே (வெட்கத்தில்?) சொல்லவுமில்லை. அதனைப்பற்றியெல்லாம் சிந்திக்க எங்கு நேரமிருந்தது எமக்கு? உயர்தரம் படிக்கையில் கனவுகள் உயர்ந்தன. படிச்சுப் பேரெடுக்க வேண்டுமென்ற சொந்தங்களின் விருப்பே எனது (மற்றும் நண்பர்களதும்) கனவாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ட கனவெல்லாம் நனவாகிப் போகுமெண்டால் பாம்பு கடிச்சு எப்போதோ செத்துப் போயிருப்பேனே. ஆம், படிப்புக் கனவுகள் புலம் பெயர்தலோடு புலம்பெயர்ந்தாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;அந்நிய நாட்டில், இது பகலா இரவா என்று வெளியில் பார்த்து சொல்ல முடியாத இரவுகளில் வரும் கனவுகள்: படித்த வகுப்பறைகள்... கிளித்தட்டி விளையாடியது... துவிச்சக்கரவண்டியில் பெடியளோடை வீதியுலா வந்தது....&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய கனவுகளைக் காணும்போதே தெரியும் அது கனவென்று. ஊர்சார்ந்த மகிழ்ச்சியான பொழுதுகள் இனி எனக்குச் சொந்தமில்லையென்பது கனவில்கூட எனக்குத் தெளிவாய் தெரிந்திருக்கிறது. கிளித்தட்டு விளையாடத் தயாராகின்றார்கள். கிளித்தட்டென்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம். இருந்தும் நான் அவர்களோடு விளையாடமல் பார்வையாளனாக இருக்கத் தீர்மானிக்கின்றேன். எனக்குப் பயம், எங்கை விளையாட்டிலை கிளியிடம் அடிவாங்கி கனவு கலைந்துவிடுமோ என்று. இன்றைக்காவது இந்தக் கனவை கூட நேரங் காணவேண்டுமென்று அடிமனசு கெஞ்சும். யாரோ ஒருவன் 'பழம்' என்று ஒன்பது ஊருக்குங் கேட்குமாற்போல் கத்துவான் (கொஞ்சம் மெதுவாய் பழம் எடுத்தால் என்னவாம்). பிறகென்ன...நான் பயந்தது போலவே என் கனவும் குலைந்து போயிற்று. பிறகெங்கு தூக்கம் வரும். படுக்கையில் புரளும் நானாய் ஞாபகங்களும்...&lt;br /&gt;&lt;br /&gt;நிறையக் கனவு காணவேண்டுமென்றும், அவை யாவும் மெய்ப்பட வேண்டுமென்றும் முன்பெல்லாம் நிறையவே அவா இருந்தது. இப்ப...? ஒன்றுமே இல்லை. ஆசைப்படுமளவிற்கு அப்படியொன்றும் இங்கு அதீத இன்பம் மற்றும் இறுமாப்புத் தருவனவாயில்லை. பிறகேன் மினக்கெட்டுக் கனவு காணுவான்?&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது எது கனவு? நாம் தூங்கும் போது தான் விழிக்குமே அது கனவா? அன்றி, விழித்திருக்கும்போது விழிப்பது கனவா? வாழ்வில் நிறைவேறத் தவறிய மற்றும் இடையிலே பறிபோன யாவுங் கனவுகளே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111256803951859223?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111256803951859223/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111256803951859223' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111256803951859223'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111256803951859223'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/04/blog-post_03.html' title='கனவு'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111248739371371249</id><published>2005-04-02T19:11:00.000-05:00</published><updated>2005-04-02T19:16:33.716-05:00</updated><title type='text'>தெற்காசிய  பேராசிரியர்</title><content type='html'>பல்கலைக்கழகத்தில் எனக்கென்று ஒதுக்கப்பட்ட அறையினை ஒட்டி ஒரு hall way உள்ளது. கிட்டத்தட்ட அது கட்டடத்திற்குள் அமைந்துள்ள ஒரு நடைபாதை போல.   அந்த hall wayஇல் அன்று போய்க்கொண்டிருந்த போது ஒரு தெற்காசிய பேராசிரியர் தனது மாணவன் ஒருவனுக்கு பரீட்சை பற்றி அறிவுறுத்திக்கொண்டிருந்தார்.   வழமையைப் போல நாகரீகமான முறையில் ஒட்டுக் கேட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் நடந்தது. அந்த மாணவன் அந்தப் பரீட்சையை முதல் வாரமே எல்லா மாணவர்களுடனுஞ் சேர்ந்து எழுதியிருக்க வேண்டும்.   ஆனால், ஏதோ காரணத்தால் அவனால் அப்படி எழுத முடியாமல் போக, இந்த நாளன்று தனிய பரீட்சை எழுத வந்துள்ளான். &lt;br /&gt;&lt;br /&gt; பேராசிரியரும் பாவம்...overtime ஊதியம் இல்லாமலே இந்த மாணவன் பரீட்சை எழுதுவதை மேற்பார்வை செய்ய வேண்டுமே.    அந்த ஒரு மாணவனுக்கென்று ஒரு பரீட்சை அறையினை ஒழுங்கு செய்தால் முழுநேரமும் தானும் அங்கு நிற்கவேண்டுமே.   அதுதான் அந்த hallஐத் தெரிவு செய்தார்.    அது ஒரு மறைவான இடமில்லையென்பதனால் அங்கு மேற்பார்வை செய்யத் தேவையில்லை என்பது அவரது எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கென்றல் அவர் செய்வது பிழையாகத் தெரிந்தது.   அப்பாதையால் போகின்றவர்களால் மாணவனின் கவனஞ்  சிதறுமல்லவா!    அந்த மாணவன் இதனை மேலிடத்தில் முறையிட்டால்...?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"விறாந்தையில் பரீட்சை எழுதச் சொன்னால் முறையிடுவார்களே"&lt;br /&gt;&lt;br /&gt;"என் மடியில் இருந்து எழுதச் சொன்னாலும் மடி ஆடியது என்று முறையிடுவார்கள். எப்படியோ முறையிடத்தான் போகின்றார்கள்.     இந்த முறைப்பாடு பரவாயில்லை. எதிர்பாராத முறைப்பாட்டை விட எதிர்பார்த்திருக்கும் முறைப்பாடு பரவாயில்லை."&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ எக்கச்சக்கமா அவர் நொந்து போனது போல அவரது வார்த்தைகள் வந்து விழுந்தன. என்ன நோவென அறிய கேள்வியொன்றைத் தொடுத்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;கிறிஸ்மஸ் இரவொன்றின் இடைவிடாத பனிதூவலாய் அவர் பேசத் தொடங்கினார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஆங்கிலம் எனக்கு இரண்டாம் மொழிதான்.   ஆனால் நான் புரிந்து கொண்ட விடயத்தை மற்றவருக்குப் புரிய வைக்க அது என்றும் தடையாய் இருந்ததில்லை.   தாங்கள் பரீட்சையில் நன்றாகச் செய்தால் வந்து சொல்வார்கள் நான் ஒரு திறமை மிக்க பேராசிரியர் என்று.   பரீட்சையில் கோட்டைவிட்டால்,   மேலிடத்தில் போய் முறையிடுவார்கள் நான் கதைக்கும் ஆங்கிலம் தங்களுக்கு விளங்கவில்லையென்று.   இதிலை வேதனை என்னவெண்டால் வெள்ளைக்கார மாணவர்களைவிட தெற்காசிய மாணவர்கள்தான் கூடுதலாக இப்படிப் பிரச்சினை கொண்டுவருவார்கள்.    அவர்களது (தெற்காசிய) பெற்றோரைவிட எனது ஆங்கிலம் மிகச்சிறந்தது என்று சொல்லவேண்டும் என்று ஆசை.   ஆனால் நான் அப்படிச் சொன்னால் அதையே இன்னுமொரு பிரச்சனையாகக் கொண்டுவருவார்கள்.    மேலிடத்திலை உள்ளவர்களுக்கு என் புலமை தெரியும்.   எனவே, மேற்குறிப்பிட்ட முறைப்பாடுகளால் எனக்கு இதுவரை ஒரு பிரச்சனையும் வந்ததில்லை.   எனினும், இப்ப ஒலிவாங்கியின் உதவியோடுதான் வகுப்பு நடத்துறனான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வகுப்புகளிலை படிப்பிக்க விடமட்டுதுகள்.   கதைக்குங்கள். அஞ்சு நிமிசத்துக்கொருக்கால் கைத்தொலைபேசி அடிக்கும்.   சிலவேளை சத்தம் போடுறவர்களை வகுப்பைவிட்டுக் கலைத்திருக்கின்றேன்.   எல்லா மாணவர்களுக்கும் முன்னாலை நான் தங்களை நாகரீகக் குறைவாக ஏசிப் போட்டேன் என்று ஒரு முறைப்பாடு.    வெள்ளையின பேராசிரியர் எண்டால் எவ்வளவு அமைதியா இருக்குங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்பிடித்தான் multiple choice கேள்விகளுக்குரிய விடைத்தெரிவுகளைக் கொடுத்தாலும்,  அதுக்குள்ளை சரியான விடை இல்லையென்பார்கள்.   அதனாலை,   இப்ப  "None of the above" என்ற தெரிவை ஐந்தாவதாகப் போடுறனான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டல் கழித்தலிலேயே பிழைவிடுவார்கள்.   ஒரு step பிழையெண்டால் அதுக்குப் பிறகு வாற எல்லாம் நான் வைத்திருக்கும் பதிலைவிட வேறானதாகத்தானே இருக்கும்.   அதனாலை அந்தப் பிழையான கூட்டல் கழித்தலுக்கு புள்ளிகளை எடுப்பேன்.   உடனே,   இது கூட்டல் கழித்தலை சோதிக்கும் பாடம் இல்லையென்று பெரிய கருத்துரையே நடாத்துவார்கள்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாக அவர் சொல்லிமுடிக்க எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.   நான் என்னமோ நினைச்சிருக்க இந்தாள் என்னன்னமோ சொல்லுது.   இதனைவிட வேறென்ன பிரச்சனைகள் இருக்கும் என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்றைய பேராசிரியர்களோடு உணவுச் சாலைக்குச் சென்று மதிய உணவு கொள்ளும் போது அவர்களுடைய சம்பாசணையில் தானும் இணைவது லேசுப்பட்ட காரியம் இல்லையாம்.  தனிய தெற்காசிய செய்திகளை மட்டும் வாசிக்காமல்,  கனேடிய/அமெரிக்க/ உலகச் செய்திகளையும் நாங்கள் வாசித்திருக்க வேண்டுமாம்.   பிடிக்காட்டிலுங்கூட தென்னமெரிக்க விளையாட்டுகள் பற்றியும், அந்த விளையாட்டு வீரர்களின் ஊதியம் பற்றியும் கொஞ்சமெண்டாலும் தெரிஞ்சிருக்க வேணுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு நானென்ன புத்தி சொல்ல முடியும்.   ஆறுதலாக நாலு வார்த்தை சொன்னேன்.   அந்த நாலு வார்த்தையை எனக்குஞ் சொல்லிக்கொண்டேன்.   யாரறிவார், அந்த வார்த்தைகள் எனக்கும் ஒருநாள் தேவைப்படுமோ என்னவோ!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111248739371371249?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111248739371371249/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111248739371371249' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111248739371371249'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111248739371371249'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/04/blog-post_02.html' title='தெற்காசிய  பேராசிரியர்'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-111170669608080862</id><published>2005-03-24T18:10:00.000-05:00</published><updated>2005-03-24T18:33:46.056-05:00</updated><title type='text'>மௌனம் தவிர்ந்த ஒரு மொழியில் சொல்லிவிட்டுப் போ...</title><content type='html'>&lt;p align="justify"&gt;உங்களிற்குப் பிடித்த விடயம் பற்றிச் சற்றுச் சொல்லலாம் என்றால், உங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதனைக் கண்டு பிடிக்கவே ஒரு ஜென்மம் பிடிக்கும் போலுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே உங்களில் ஒருவருக்காவது பிடித்த விடயம் பற்றிச் சற்றுச் சொல்வேன் கேளுங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;முன்பெல்ல்லாம் அன்னமக்கா வீட்டு நாய்க்குட்டியாய் நீ என்னையே சுற்றிச் சுற்றி வருவாய். அந்த உறவுக்கு ஸ்நேகம் என்று பெயரும் வைத்தோம். என் காதல் சொன்ன அன்றிலிருந்துதான் நீயென்னில் பிடிப்பின்றி வாழ்கின்றாய்.&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை எனக்கு நிறையப் பிடிக்கும் என்பதனால் உனக்கு என்னைப் பிடிக்கவில்லையா? அல்லது பிடிப்பின் மீதே உனக்குப் பிடிப்பில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண் பிடித்தல் மட்டும் என் காதலில்லை; பிடித்த ஒருத்தியைப் பிடிக்கச் செய்வதே என் காதல்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இப்படிக் கதைப்பது உனக்குப் பிடிக்காதென்று எனக்குத் தெரியும். உண்மையில் உனக்குப் பிடிக்காதவற்றையே இன்னும் செய்ய எனக்குப் பிடிக்கின்றது. அப்படியாவது நீ என்னை வெறுத்து வெறுத்து இறுதியில் அந்த வெறுப்பின்மீதே வெறுப்பு வந்து இறுதியில், போனால் போகுது...இவனைக் காதலிச்சுத் தொலைப்போம் என்று உனக்கு என்னில் பிடிப்பு வராதா என்ற விருப்பு இன்னும் நெருப்பாக...&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பிடிப்பை ஏன் எனக்குப் பிடிக்கும் என்பதனைச் சொல்ல சிறிது நேரம் பிடிக்கும். என்ன பரவாயில்லை? சரி! உனக்குப் பிடித்ததனால் சொல்கின்றேன்:&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று வயசில் தவண்டு உடும்பு பிடித்தது...&lt;/p&gt;&lt;p&gt;குழப்படி செய்தால் பேய் வந்து பிடிக்கும் என்று அக்கா(ப்பேய்) சொன்னது...&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;10 வயசில் அடிச்சு பிடித்து விளையாடியது...&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;15 வயசிலும் அம்மாவின் கரம் பிடித்து நடந்தது...&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;பள்ளிக்கூடத்திலை காதல்கலை புரிந்த மல்லிகா ரீச்சரையும், மார்க்கண்டு சேரையும் அதிபரிடம் பிடித்துக் கொடுத்கது...&lt;/p&gt;&lt;p&gt;மழையென்றால் எனக்குச்சளி பிடித்ததும், சளிக்கு என்னைப் பிடித்ததும்...&lt;/p&gt;&lt;p&gt;வெள்ளிக்கிழமைகளில் கால் கடுக்க நின்று "பிடியதனுருவுமை" எனத் தேவாரம் பாடப் பிடிக்காமல் காய்ச்சல் பிடித்தது போல் நடித்து பள்ளிக்குக் கள்ளம் அடிச்சதுவும்...&lt;/p&gt;&lt;p&gt;எனக்கு வணக்கம் சொல்லாமல் போன ஓணானை எலிப்பொறி கொண்டு பிடித்ததும்....&lt;/p&gt;&lt;p&gt;அறுவடையான வயல்களில் கண்ணி வைத்துப் புறா பிடித்ததும்...&lt;/p&gt;&lt;p&gt;இப்படியாக எல்லாம் தந்த பயிற்சியில் கன்னியுன் கரம் பிடிக்கலாம் என பிடிமானங் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பிடிக்காமலே என்னைப் பிடிச்சதாக நீ சொல்ல வேண்டாம்... ஆனால், பிடித்துக் கொண்டே பிடிக்கவில்லை என்று சொல்ல வேண்டாம் என்பதனையே இந்த விநாடியிலும் சொல்லிக்கொள்ளப் பிடிக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதென்றும், அதனால்தான் பிடிப்பையே இன்று பிடித்துக் கொண்டிருக்கின்றேன் என்றும் ஒரு முடிவுக்கு வரவே உனக்குப் பிடிக்கும் என்பதனைப் புரியாமல் போக நான் ஒன்றும் லூசு பிடிச்சவனல்லன்.&lt;br /&gt;&lt;br /&gt;உன்னையே பிடித்தாகிவிட்டதாம், இனி இதுக்குமேல் பைத்தியம் பிடிச்சென்ன; பிடிக்காது விட்டென்ன. எல்லாம் பிடித்தாகிவிட்டது; இனி எஞ்சி இருப்பது உன் கரமும், சனியனும்தான். &lt;/p&gt;&lt;p&gt;மேற்சொன்னவற்றில் நான் எதைப் பிடிப்பது உனக்குப் பிடிக்கும் என்பதனையாவது உனக்குப் பிடிச்ச (மௌனம் தவிர்ந்த) ஒரு மொழியில் சொல்லிவிட்டுப் போ...&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-111170669608080862?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/111170669608080862/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=111170669608080862' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111170669608080862'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/111170669608080862'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/03/blog-post.html' title='மௌனம் தவிர்ந்த ஒரு மொழியில் சொல்லிவிட்டுப் போ...'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-110912611569960240</id><published>2005-02-22T21:17:00.000-05:00</published><updated>2005-02-22T21:35:15.710-05:00</updated><title type='text'>கணபதிப்பிள்ளை வாத்தியாருக்கு ஒரு கடிதம்</title><content type='html'>&lt;div align="right"&gt;சின்னக்குட்டி&lt;/div&gt;&lt;div align="right"&gt;கனடா&lt;/div&gt;&lt;div align="right"&gt;மாசி 22, 05&lt;/div&gt;&lt;div align="right"&gt;--------&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;திரு. கணபதிப்பிள்ளை &lt;/div&gt;&lt;div align="justify"&gt;துன்னாலை தெற்கு&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கரவெட்டி&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தமிழீழம்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-----&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span&gt;&lt;/span&gt;என்றும் அன்பும், பண்பும், பிரம்பும் கொண்ட கணபதிப்பிள்ளை வாத்தியார் அவர்களுக்கு, என்றும் உங்கள் மேல் பயமும், பக்தியும், இன்னும் பயமும் கொண்ட கடை மாணாக்கன் சின்னக்குட்டி எழுதும் அன்பு மடல் இது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் என்று ஆரம்பிக்க, நீங்கள் காரணமில்லாமல் எங்களுக்கு மேலுங் கீழும் அடிச்ச வலி(மை)யான பொழுதுகள் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கின்றன... இன்னுமே தொலையாமல்!&lt;br /&gt;&lt;br /&gt;அவளைத் தொடுவானேன்; கவலைப்படுவானேன் என்று உங்கள் கல்யாணம் முடிந்த அடுத்த வாரம் நீங்கள் வகுப்பிலை அடிக்கடி சொல்வதன் அர்த்தம் எனக்கு இன்னுமே புரியவில்லை. ஒருவேளை நானும் கல்யாணம் செய்தால் புரியுமோ என்னவோ!&lt;br /&gt;&lt;br /&gt;வர வர மாமியார் கழுதை போலானார் என்று அடிக்கடிசொல்வீர்கள். நாங்கள் வரவர மொக்குகளாய் வாறம் எண்டு சொன்னீர்களோ அன்றி உங்களது புது மாமியார் பற்றிச் சொன்னீர்களோ அதுவும் தெரியாது. கனடாவாக இருந்திருந்தால் கேட்டிருப்போம். நீங்களும், "இது உங்களுடைய வணிகம் இல்லை" என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;நியாயமான காரணத்துடன் எப்பவாவது ஒருநாள் நாங்கள் பள்ளிக்கூடம் வராதுவிட்டால், "எனக்கு எல்லாம் தெரியும். தம்பி பள்ளிக்கூடத்திற்குக் கள்ளம் அடிச்சுப் போட்டு எங்கையெங்கையெல்லாம் சுத்தினவர் எண்டும் தெரியும்; தம்பி எத்தினை வயசிலை அரைஞாண் கொடி கட்டினவர் எண்டுந் தெரியும்" என்று பொழுது போக்காய் அடிக்கும் எல்லாம் தெரிந்த உங்களுக்கு உங்களையும் சரஸ்வதி ரீச்சரையும் இணைத்துக் கக்கூசுச் சுவரிலை (வரலாற்றுப் பதிவாய்) கிறுக்கி வைத்தது யாரென்று தெரியாமல் போனது மட்டும் அதிசயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் மட்டும் பெரிய அறிவுக் கடலோ! இவரும் இஞ்சினியரிங் கிடைக்காமல்தானே வாத்தியாராக வந்தவர் என்று நாங்கள் எங்களுக்குள் கதைத்து உங்களைப் பழி வாங்குவதுண்டு. ஆனால் உங்கள் மாணவப் பருவத்தில் நீங்கள் அதிகாலை நான்கு மணி தொட்டு காலை ஏழுவரையும், மாலையில் நான்கு மணிதொட்டு இரவு எட்டுமணிவரை தோட்டத்தில் உங்களது ஐயாவிற்கு உதவியாய் இருந்ததை நாங்கள் கணக்கில் எடுப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட நாட்களுக்குப் பிறகு ஊருக்கு வந்தேன். உங்களையும், எனது பழைய நண்பர்களையும் சந்திக்க வேண்டுமென்ற ஆர்வத்தோடு பயணமானேன். சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் போது நீங்கள் உங்களது இரண்டு கால்களையும் இழந்து போனதாய் அங்கு வந்த போதுதான் அறிந்தேன். நிமிர்ந்த நடை. பார்ப்பவரைக் கூசச் செய்யும் கூரிய பார்வை. நிரந்தரமானதாய் நெற்றியில் அழகாய் ஒரு திருநீற்றுப் பூச்சு. மில்க்வைற் சவர்க்காரத்திற்கு விளம்பரங் கொடுக்குமாற் போல் என்றும் பளிச்சிடும் வேட்டி. இவைகள் எதுவும் இல்லாமல் அழுக்குப் பிடித்த சாரத்துடன் ஊன்றுகோலின் உதவியுடன் வாழும் உங்களைப் பார்க்கும் தெம்பு எனக்கு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு ஒரு நாடு இருந்திருந்தால் என்றும் போல கம்பீரமான வாத்தியாராகவே நீங்கள் இருந்திருப்பீர்கள் என்ற உண்மை என்னை வாட்டுகின்றது. இதற்காய் நானும் என்ன செய்யப்  போகின்றேன்.  இம்மடலை எழுதிவிட்டு மீண்டும் என் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திடுவேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="right"&gt; &lt;/div&gt;&lt;div align="right"&gt;(தொடரும்...)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-110912611569960240?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/110912611569960240/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=110912611569960240' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/110912611569960240'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/110912611569960240'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/02/blog-post_22.html' title='கணபதிப்பிள்ளை வாத்தியாருக்கு ஒரு கடிதம்'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-110765871186385891</id><published>2005-02-05T21:50:00.000-05:00</published><updated>2005-02-05T22:00:50.663-05:00</updated><title type='text'>ஆசிரியர்கள் வாழ்க!</title><content type='html'>நானொரு ஆராய்ச்சி மாணவன். &lt;br /&gt;&lt;br /&gt;தமக்கென வாழ்க்கையும், குடும்பமும் உள்ள சக மாணவர்கள் தமது வீட்டிலேயே தங்கி இன்புற்றிருக்க, ஆராய்ச்சியின் மூலம் எதையாவது இப்பிறப்பில் கண்டுபிடித்தாகிவிட வேண்டுமென்ற ஆர்வக் கோளாற்றால் பீடித்திருக்கும் என்னைப் போன்ற சில பேர் மட்டுமே வாராந்த இறுதிகளில் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;அதைவிட இன்றைக்கு வேலையுமாகிப் போய்விட்டது. என்ன வேலை? TA (teaching assistant) வேலை. ஆனால் எல்லாம் செய்ய வேண்டும். சில முதலாம் ஆண்டு வகுப்புகளில் 700ற்கு மேற்பட்ட மாணவர்கள் படிப்பார்கள். அவ்வளவு பெரிய தொகையினருக்கு சனிக் கிழமைகளில் பரீட்சை வைப்பதுதான் வசதி. சனிக்கிழமையில் வகுப்புகள் இல்லாத காரணத்தால் எந்த வகுப்பறைகளிலும் (lecture halls) பரீட்சையை வைக்கலாம் என்ற காரணம்தான். என் வேலை அவர்கள் நியாயமான முறையில் பரீட்சை எழுதச் செய்வதுதான் (invigilation / proctoring).  மாணவர்களுக்கு ஒண்டுக்கு/இரண்டுக்கு வந்தால் பத்திரமாக மலசல கூடத்திற்கு அழைத்துச் சென்று பின்னர் இலேசாக வரும் அவர்களை பரீட்சை அறைக்குக் கொண்டு வருவதும் அதனில் அடக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;இதனைவிட இன்னுமொரு வேலையுமுண்டு. Tutorial நடாத்துவது.  பேராசிரியர் வீட்டுவேலை (assignment) கொடுப்பார் ஒரு வகுப்புக்கு. அவர்களது வீட்டுவேலையில் உதவுவதும், மற்றும் பாடப் புத்தகத்திலிருந்து அவர்கள் கேட்கும் ஏனைய கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டியதுமுண்டு. அவர்களாது பாடப் புத்தகத்தில் chapter 5 இல் 5.1இல் இருந்து 5.52 வரை வினாக்கள் இருக்கும். 5.1, 5.2,...,5.10 போன்ற கேள்விகள் சுலபமாகவும், 5.50, 5.51, 5.52 என்பன கடினமாகவும் இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சிலர் வருவார்கள். வினா 5.51 என்ன விடையென்று கேட்பார்கள். நானென்னத்தைச் சொல்ல. சில வேளைகளில் புத்திசாலித்தனமாய் விடை கொடுப்பதும், புத்திசாலித்தனமாய் பின்வாங்குவதும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கடந்த கிழமை முட்டாள்தனமாய் மாட்டுப் பட்டுப் போனேன். அதுவே பெருங்கதை. நிற்க! ஆசிரியர்கள் மீதுள்ள மரியாதையும், மதிப்பும் அன்று என்னையறியாமலே கூடின. நாங்கள் கேட்கும் மொக்குத்தனமான கேள்விகளுக்கு அமைதியாகவும், அறிவுத்தனமாகவும் , கிட்டத்தட்ட எல்லா வேளைகளிலும் சரியாகப் பதில் சொல்வது என்ன அவ்வளவு சுலபமா! ஆசிரியர்கள் வாழ்க! &lt;br /&gt;&lt;br /&gt;--- ---- --------- &lt;br /&gt;தெற்காசிய நாடொன்றினைச் சார்ந்த பேராசிரியர் ஒருவர் தனது கற்பித்தல் அனுபவத்தைச் சொன்னார் இன்று. ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் கனடாவில் கற்பிக்கும் போது எதிர்நோக்கும் பிரச்சினைகளைச் சொன்னார். உண்மையில் அதனைப் பற்றித்தான் பதிய வந்தேன். பின்னர் என் கதையைப் புலம்பிவிட்டேன். சிலவேளை அடுத்த வாரம்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-110765871186385891?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/110765871186385891/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=110765871186385891' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/110765871186385891'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/110765871186385891'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/02/blog-post.html' title='ஆசிரியர்கள் வாழ்க!'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-110627460242457350</id><published>2005-01-20T21:27:00.000-05:00</published><updated>2005-01-20T21:30:02.423-05:00</updated><title type='text'>யார் வந்து நிறுத்த</title><content type='html'>...பிறகு எனது பொருட்களும்,  அவனது பொருட்களுங் களவு போயின. அவையாவன:&lt;br /&gt;&lt;br /&gt;1. கணனி&lt;br /&gt;2. CD player&lt;br /&gt;3. shirts&lt;br /&gt;4. சுவிங்கம்&lt;br /&gt;5. உண்டியல்&lt;br /&gt;6. பாதணிகள்&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து வீட்டுக்காரர்கள் வேற்றினத்தவர்கள்.   அவர்கள் சொன்னார்கள், எங்கடை பெடியள்தான் கொஞ்சப்பேர் குப்பைபோடும் பைகளில் கட்டி என்னவோ எல்லாம் மத்தியானம் போலை கொண்டு போனாங்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;என் உடமைகள் களவு போன கவலை போய், என் தமிழ்ச் சோதரர்கள் பணத்திற்காய் மானங்கெட்டு சோரம் போன கவலையே என்னை வாட்டியது மிகவுங் கொடிதாய்.&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் ஒரு டொலர் பெறுமதியான சுவிங்கத்தினைக்கூட அவர்கள் அற்பராய்க் களவாடியது எம்மினத்தைத்துரத்தும் கேவலங்களில் ஒன்றன்றிப் பிறிதென்ன!&lt;br /&gt;&lt;br /&gt;காப்புறுதி வருமென்றார்கள்.  என் நண்பனுக்குக் கொஞ்சங் கிடைத்தது. எனக்கு அதுவுமில்லை. அது பற்றிய கவலையும் எனக்கில்லை.  என் கவலையெல்லாம்....&lt;br /&gt;&lt;br /&gt;லண்டனிலையிருந்து தெரிந்தவர் ஒருவர் தங்கடை நகைகள் களவு போய்விட்டதாகச் சொன்னார்.   முதன்நாள் ஒரு கல்யாணத்திற்குப் போனவையாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் எதனை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றோம்?&lt;br /&gt;&lt;br /&gt;இளைய சமுதாயத்தில் பாதிப் பேர் எமது தாயகத் துயர் நீக்கத் தம்மால் முடிந்தவரை உழைச்சுக் கொண்டிருக்க,   கொஞ்சப் பே(ய)ர் தனிமனித அற்ப சந்தோசங்களுக்காக களவாடுவதை,  தவறான பாதைகளில் செல்வதினை யார் வந்து நிறுத்த...?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-110627460242457350?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/110627460242457350/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=110627460242457350' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/110627460242457350'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/110627460242457350'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/01/blog-post_110627460242457350.html' title='யார் வந்து நிறுத்த'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-110567626292402923</id><published>2005-01-13T23:06:00.000-05:00</published><updated>2005-01-13T23:17:42.923-05:00</updated><title type='text'>சுனாமியும் அந்நிய உறவுகளும்</title><content type='html'>எனது பேராசிரியர் ஒருவர் மின்னஞ்சல் செய்திருந்தார்.  சாரம் இதுதான்:&lt;br /&gt;&lt;br /&gt;"அன்புள்ள கிஸோ,&lt;br /&gt;&lt;br /&gt;நீ சிறீலங்காவின் தமிழ்ப்பகுதியைச் சேர்ந்தவன் அல்லவா.  உனது குடும்ப அங்கத்தவர்கள் யாவரும் பாதுகாப்பாக உள்ளார்களா?   உனக்கு ஒரு பிரச்சினையும் இல்லையென்று நம்புகின்றேன்.   அந்தப் பேரழிவால் உனது படிக்கும் திறனுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?   என்னால் முடிந்தளவிற்கு உதவத் தயாராகவுள்ளேன்.   உனக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் தயவு செய்து என்னைக் கேட்கவும்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"எனது குடும்பத்தவர்கள் தற்போது மொன்றியால் நகரினில் வசிப்பதனால் அவர்கள் நலமே.  ஆனால் எனது குடும்பத்தவரை இழந்தால் எவ்வளவு கவலையுறுவேனோ அவ்வளவு கவலையுறுகின்றேன்.   சுனாமி ஏற்படுத்திய வேதனையைவிட சிறீலங்கா அரசின் பாரபட்சமான நடவடிக்கைகளே என்னை மிகவும் காயப்படுத்துகின்றன"  என்று எழுதினேன்.  (அப்போதுதான் சுனாமியினால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பகுதிகள் மீதான சிறீலங்கா அரசின் மனிதநேயமற்ற செய்கைகள் பற்றிய செய்தியொன்றினை வாசித்திருந்தேன்.)   மேலும்,  சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள "அக்கறையையும்" அதனது மோசடிகளையும் சுருக்கமாக விளக்கினேன்.   நிவாரண நிதி சேகரிப்புப் பற்றிய தகவலையும் வழங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் உடனேயே பதிலளித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு ஐரிஷ் பின்னணியும் இருப்பதானால் உனது நாட்டு நிலமையினை ஓரளவிற்கு விளங்கிக் கொள்ள முடிகின்றது.  நடந்து முடிந்த இயற்கை அனர்த்தம் இரு பகுதியினரையும் சமாதானத்திற்குக் கொண்டுவருமென்று முட்டாள்தனமாக நம்பிவிட்டேன்.   அது நடக்காது என்பது எவ்வளவு வேதனையான விடயம்!   கனடாவின் DART எந்தப் பகுதிக்குச் செல்கின்றது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;இதற்கிடையில் உனது குடும்பத்தவர்கள் யாவரும் பாதுகாப்பாக உள்ளார்கள் என்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.  நாளைக்குச் சந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;                                       -------*--------*----------*--------&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;இதெல்லாம் பெரிய விடயமில்லை.  ஈழத்தவர்கள் வேலைசெய்யும் வேலைத்தளங்களின் மேலதிகாரிகள்,  முகாமையாளர்கள்,  முதலாளிகள்  தமது பெயர் குறிப்பிடாமல் TROவிற்குப் பங்களிப்புச் செய்ததனை எப்படி மறக்க!&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt; எமது குஞ்சுகள் விடுமுறை நாட்களில் அந்நியரின் கதவினைத் தட்டிப் பங்களிப்புக் கேட்டபோது தம்மாலான நிதியும், தாகத்திற்கு நீரும் வழங்கிய அவர்களின் இளகிய மனசினை எப்படி மறக்க! &lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;இவர்களுக்கு எப்படி நாம் கைம்மாறு செய்யப் போகின்றோம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;blockquote&gt;&lt;div align="left"&gt;அந்த வெள்ளையின இளைஞன்&lt;/div&gt;&lt;div align="left"&gt;என்னைப் பார்த்தான்...&lt;/div&gt;&lt;div align="left"&gt;முருகேசர் வீட்டு சொறிநாயை நான் &lt;/div&gt;&lt;div align="left"&gt;அருவருப்பாய்ப் பார்ப்பது போல.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;என்றவாறு பொருள்படும்படி நாம் எழுதிய கவிதைகள்,  கதைகள் எல்லாம் ஞாபகத்துக்கு வருகின்றன.   எமது பார்வையில்தான் இதுவரை தவறுகளா? ஒன்றிரண்டு இடங்களில் இடம்பெறும் இனத் துவேசச் செயல்களை நாங்கள்தான் உள்ளங்கையில் வைத்துப் பார்க்கின்றோமோ? &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;blockquote&gt;&lt;div align="left"&gt;கனடாவின் &lt;/div&gt;&lt;div align="left"&gt;நிறவாதத்தைக்கண்டனஞ் செய்தபடியே&lt;/div&gt;&lt;div align="left"&gt;கறுப்பன், சப்படையன் என&lt;/div&gt;&lt;div align="left"&gt;ஏளனஞ் செய்யும் &lt;/div&gt;&lt;div align="left"&gt;எமது சமூகத்தின்....&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;என்ற இளங்கோவின் வார்த்தைகளில் பொய்யில்லைத்தான்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-110567626292402923?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/110567626292402923/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=110567626292402923' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/110567626292402923'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/110567626292402923'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2005/01/blog-post.html' title='சுனாமியும் அந்நிய உறவுகளும்'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-110256296367636946</id><published>2004-12-08T22:24:00.000-05:00</published><updated>2004-12-08T22:29:23.676-05:00</updated><title type='text'>பாட்டிக்கு ஒரு கடிதம்</title><content type='html'> அன்புள்ள பாட்டிக்கு உன் அருமைப் பேரன் சின்னக்குட்டி எழுதும் அன்புமடல் இது.  நீ எப்படிப் பாட்டி இருக்கிறாய்?  என்ரை சுகத்துக்கென்ன... பனி வந்தால் மட்டும் மூக்குக்கு என்னமோ எல்லாம் நடக்குது பாட்டி.  ஏலுமண்டால் என்ரை  மூக்கின்ரை பேரிலை எங்கடை நுணுவில் பிள்ளையாருக்கு ஒரு அருச்சனை செய் பாட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் உனக்கு என் கடிதங்கள் கிடைத்திருக்காது.  போட்டால்தானே கிடைப்பதற்கு...  அப்படித்தானே பாட்டி?  உனக்கு விழிப்பாக இருக்கும்... உந்தப்பெடியன் ஊரிலை இருக்குமட்டும் அம்மம்மா என்று விளித்துவிட்டு, கனடாவைக் கண்டதும் பாட்டி என்று அழைக்கின்றானே என்று.  உனக்கு ஒன்றுமே தெரியாது பாட்டி.  அம்மம்மா என்று சொல்வதைவிட பாட்டி என்பதில்தான் நிறைய பாசமும், கிக்கும் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;உன்னோடை பகிர்வதற்கு என்று நிறைய இருக்குது பாட்டி.  ஆனாலும் அவற்றை எல்லாஞ் சொல்லி உன்னை ஏன் வீணாகக் கவலையடையச் செய்ய வேண்டும் என்ற ஆதங்கத்தில் சிலதைச் சொல்லாமலே விடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப நான் முந்தி மாதிரி இல்லைப் பாட்டி... அப்பவெல்லாம் எங்கடை ஊர் நாய்கள் எல்லாம் எனக்கெதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானங் கொண்டுவரும் அளவுக்கு நான் அதுகளுக்குக்  கல்லாலை எறிந்து ஆக்கினை கொடுப்பன்.  மடித்துக் கட்டியும் நிலத்தை சாறம் முட்டும்.  இப்ப நான் வளந்திட்டன்.   மீசையும், ஆசையும் முளைத்து இப்ப ஆம்பிளையாக வந்திட்டன்.  உனக்குத்தான் என்னை இப்பிடிப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையோ என்னவோ...&lt;br /&gt;&lt;br /&gt; "உந்தப் பெடியன் எல்லாரையும் மறந்து போச்சு" எண்டு போன வருசம் ஊருக்கு வந்த மாமாவுக்கு நீ சொன்னதாக அறிந்தேன்.  கனடாவிலை வாழ்ந்தாலும் நான் ஒண்டும் உன்னை மறக்கேல்லைப் பாட்டி! கனடாவுக்கு வந்ததும் அரைஞாண் கொடியைத்தான் அறுத்து எறிஞ்சனான்... தொப்புள் கொடி உறவை எப்படிப் பாட்டி அறுக்க முடியும்....?&lt;br /&gt;&lt;br /&gt; உனக்கு ஞாபகம் இருக்கோ பாட்டி....?  சின்னக்காடரின்ரை தேவன்ரை கலியாண வீட்டுக்கு எல்லாரும் போக, நீயும் நானும் மட்டும் வீட்டை இருந்தம்.  நான், "எனக்கு குழல்புட்டு பசிக்குது... எனக்கு குழல்புட்டு பசிக்குது" என்று சிணுங்கினேன்.  உடனே நீ, "சரி ராசா.  அவிச்சுத்தல்லாம், அழாதை" எண்டுபோட்டு, மாவைக் குழைச்சு குழலுக்கை போடப்போட அது நிரம்பவே இல்லை. "இது என்னடா மாயமாக் கிடக்கு" எண்டு நீ குழலை இறக்கிப் பார்க்கத்தான் தெரிஞ்சுது  நீ குழலுக்கை தட்டுப் போட மறந்து போனாய் எண்டு.  "உதை ஒருத்தருக்கும் சொல்லாதை ராசா,  நான் வல்லிபுரக் கோவில் திருவிழாவுக்கு உனக்கு இருபது ரூபா தருவன்" எண்டு சொன்னியே பாட்டி... அதை எப்ப தரப் போறாய்....?&lt;br /&gt;&lt;br /&gt;முத்தையன்கட்டிலை கள்ளுக் குடிக்கக் காசு தரேலை எண்டு அம்மப்பா உனக்கு அடிக்க, உன்ரை காது பிஞ்சு தோடு தொலைஞ்சதாவது உனக்கு ஞாபகம் இருக்குதோ பாட்டி?  "உவனுக்கு இடி விழாதோ?" என்று நீ அம்மப்பாவைத் திட்டி ஒரு கிழமையாலை அவருக்கு மலேரியாக் காய்ச்சல் வந்து படுத்து அனுங்கியபோது, அவரது காலைப் பிடிச்சுக்கொண்டு நீ கண்ணீர் விட்டாயே பாட்டி... உன்னை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளைக்காரத் துரைமார் தேங்காய் மூட்டை தரச் சொல்லிக் கேட்க, பூசணிக்காய்களை சாக்கில் போட்டு அம்மப்பா கொடுத்தாராம்.  அண்டேலை இருந்து அவருக்கு "உலகப்பிரட்டி" என்று வெள்ளைக்காரர் பட்டம் வைச்சதாக அம்மப்பா சொல்லுவார்.  ஆனால் வெள்ளைகாரருக்கு தமிழ் தெரியாதே.   அம்மப்பா எனக்கு நல்லாவே புழுகிப் போட்டார்.  அப்படித்தானே பாட்டி.....?&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாம் பிறை படத்தைப் பற்றி யாராவது கதைத்தால் எனக்கு உன் ஞாபகம்தான் வரும்.  மூத்தக்காவின்ரை கல்யாண வீட்டண்டு மூன்றாம்பிறை படம் பார்த்தம்.  கன நாட்களுக்குப் பிறகு அந்தப்படம் பற்றிக் கதைக்கேக்கை, "கமலும் , சிறீதேவியும் கடைசியாக ஒன்று சேரவே இல்லை" என்று அம்மா சொன்னா.  உடனே நீ, "சீச்சீ, யார் சொன்னது?  நான் சின்னத்தங்கம் வீட்டை ஒரு படம் பார்த்தனான்.  அதிலை இரண்டு பேரும் கல்யாணம் கட்டுகினம்" எண்டு சொன்னாயே பாட்டி... அந்தப் பொழுதுகள் மீண்டும் வராதா?&lt;br /&gt;&lt;br /&gt;இங்கை என்னோடை படிக்கிற பொடியள் எல்லாருக்கும் அவங்கடை வீட்டிலை பாட்டி இருக்கிறா.  நான் மட்டும்தான் உன்னைப் பிரிந்து இருக்கிறன்.  பாட்டி வடை சுட்ட கதையைத் தங்களது பாட்டிமார் அடிக்கடி சொல்வதாக "லெவல்" அடிப்பாங்கள்.  நான் என்ன சொல்வது பாட்டி... அந்த பாட்டி வடை சுட்ட கதையிலை வாற பாட்டியே எனது பாட்டிதான் எண்டு சொல்லுவன்.  வயித்தெரிச்சல் பிடிச்சவங்கள் நான் சொல்லுறதை நம்புறதே இல்லை. "நான் பாட்டிக்குக் கடிதம் எழுதுறன்" எண்டு சொன்னால் உவங்கள் சிரிக்கிறாங்கள்.  நான் என்ரை "பார்ட்டிக்குத்தான்" கடிதம் எழுதுறன் எண்டு சொல்லுறாங்கள்.  இந்தக் கடிதம் உனக்குக் கிடைக்கும் எண்டு எனக்கே நம்பிக்கை இல்லைப் பாட்டி. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அழகமக்காத்தை வீட்டு அலம்பல் வேலியிலை நிற்கிற தும்பியைப் பிடிச்சு, அதன் வாலை அறுத்துப்போட்டு, நூல் கட்டி கடிதம் எண்டு சின்னனிலை அனுப்புவம்.  அப்படிச் செய்யலாம் எண்டால் இங்கை தும்பிகூட இல்லைப் பாட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை ஒண்டு கேக்க வேணும் பாட்டி.  நீ குமரியாக இருக்கேக்கை நல்ல வடிவாம்.  அந்தக்காலப் பெடியள் எல்லாம் உனக்குப் பின்னாலேயே வருவாங்களாம்.  இப்பவும் நீ வடிவுதான் பாட்டி.  தலை நரைத்தாலும் உன் அழகு இன்னும் நரைக்கவில்லைத்தானே.   உன் அழகின் மர்மம் என்ன பாட்டி...?&lt;br /&gt;&lt;br /&gt;சந்தைப்பக்கம் போனால் பார்வதி விலாஸிலை நீ எனக்கெண்டு வாப்பன் வாங்கி வருவாய்.  எனக்கு வாப்பன் நிறையப் பிடிக்கும் எண்டு உனக்கு மட்டும் எப்படித் தெரியும் பாட்டி?&lt;br /&gt;&lt;br /&gt;நீ பாவம் பாட்டி.  எங்கள் கல்வீட்டிலை தங்காமல் கொட்டில்லைதான் இருந்தாய்.  காலமை ஏழு மணிக்கு மூக்குப் பேணியுடன் தேத்தண்ணி வேணுமெண்டு அம்மாவிடம் வருவாய்.   "நான் கொண்டுவந்து தருவன்தானே.  ஏன் பிச்சைகாரி மாதிரி அலையுறாய்?"  என்று அம்மா அக்கறையுடன் கத்துவா.  அப்பவெல்லாம் நீ மௌனித்து நிலம் பார்க்கும் பொழுதுகளில் என் நெஞ்சில் அமிலம் தெறித்தது போல் இருக்கும் பாட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு நடந்த ஒப்பிரேசன் பற்றிக் கேள்விப்பட்டு இரண்டு நாட்களாகச் சாப்பிடாமல் கிடந்தாய் எண்டு பெரியம்மா ஃபோனிலை சொன்னவா.  எனக்கு இப்ப பரவாயில்லைப் பாட்டி.  "ஒப்பிரேசனை இந்தப் பாலன் எப்படித் தாங்கும்?" என்று மனங் கலங்கினாயாம்.  சொன்னால் நம்பமாட்டாய் பாட்டி.... ஒப்பிரேசன் பெரிதாக எனக்கு வலிக்கவில்லை.   அதன் மூலம் நான் கண்டு "களித்த" உறவுகளினதும், சினேகிதங்களினதும் வேசமும், பாசமுந்தான் என்னை மெய்சிலிர்க்கச் செய்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;என் இப்போதைய ஆசை என்ன தெரியுமா பாட்டி...?  நான் ஊரிலை இருந்துகொண்டு உனக்கு ஒவ்வொரு நாளும் காலையிலை தேத்தண்ணி போட்டுத் தரவேணும்.  ஒவ்வொரு நாளும் பெரியம்மா வீட்டுக் கிணத்திலை நீ குளிக்க நான் தண்ணி அள்ளித் தரவேணும்.  இது மற்றவர்களுக்குப் பேராசை மாதிரித்தான் தெரியும்.  ஆனால் நீயே சொல்லு பாட்டி...  எனது ஆசை நியாயமானதுதானே....?&lt;br /&gt;&lt;br /&gt;போன மாசம் மொன்றியாலிலை இருந்து மூத்தக்கா ஃபோன் எடுத்தாள். அண்டைக்குப் பிந்நேரம் தன்ரை மகள் என்ன தமிழ்ச்சொல் சொன்னாள் என்பதை ஒப்புவித்துவிட்டு, " அம்மம்மாவின்ரை அந்தியேட்டிக்கு தங்கமக்கா போகேல்லையாம்"  என்று ஏதோ சொன்னாள்.  எனக்கு இதயமே விறைச்சுப் போனது மாதிரி இருந்துச்சுப் பாட்டி.   நீ செத்துப் போனாயாம்.  தங்களுக்கு ஆறு மாசத்துக்கு முன்பே தெரியுமாம்.   சின்னம்மா சொல்லியிருப்பா என்று நினைச்சுத்தானாம் தான் எனக்குச் சொல்லவில்லையாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒண்டுமே விளங்கேல்லைப் பாட்டி.  என்னைத் தனிய விட்டுப் போக உனக்கு எப்படி மனசு வந்தது பாட்டி....?  என்ரை பிள்ளையளுக்கு நீ எனக்குச் சொல்லாத கதையெல்லாம் சொல்லவேணும் எண்டு எவ்வளவெல்லாம் ஆசைப்பட்டன் தெரியுமோ பாட்டி....?&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டி....பாட்டி,  சாகமுதல் என்னைப்பற்றி பெரியம்மா ஆக்களிடம் ஏதாவது கேட்;டனியோ?   சாகும் பொழுதில் என் முகம் உனக்கு ஞாபகம் வந்ததோ பாட்டி...? இப்ப என்ரை மனசு பூராவும் குற்ற உணர்வு பாட்டி. உன்னைப் பராமரிக்கவில்லையே என்ற கவலை இந்தக் கணப்பொழுதிலும் என்னை வாட்டுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;உன்னைப் பராமரிக்காத காரணத்தால் நான் நரகத்திற்குத் தான் போகமுடியும்.  நீயோ சொர்க்கத்தில் இருக்கிறாய்.  நான் உன்னைப் பார்க்க வேணும்.  பாட்டி, நரகத்தில் இருந்து சொர்க்கத்துக்குப் போக ஏதாவது பாலம் இருக்குதோ எண்டு கேட்டுச் சொல்லுறியோ...?&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டி...நான் பகிடிக்குத்தான் கேட்டனான்.  அந்த இருபது ரூபா நீ எனக்குத் தரத் தேவையில்லை.  ஆனால் அதற்குப் பதிலாக நீ ஒன்று செய்ய வேண்டும்.  என் கனவில் எப்பவாவது வந்து, நீ சாகும்போது என்னை நினைத்ததாக (பொய்யாவது) சொல்லிவிட்டுப் போ...&lt;br /&gt;&lt;br /&gt;வேறென்ன பாட்டி... கனவில் உன்னைக் கண்டதும் மறுமடல் தொடரும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;உன் பேரன்,&lt;br /&gt;சின்னக்குட்டி.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-110256296367636946?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/110256296367636946/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=110256296367636946' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/110256296367636946'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/110256296367636946'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2004/12/blog-post_08.html' title='பாட்டிக்கு ஒரு கடிதம்'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-110256228754542920</id><published>2004-12-08T22:12:00.000-05:00</published><updated>2004-12-08T22:31:04.166-05:00</updated><title type='text'>அகராதி</title><content type='html'>&lt;strong&gt;கனவு: &lt;/strong&gt;சென்ஸாருக்குப் போகாத, செலவே இல்லாத ஒரு குறும்படம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புண்ணியம்:&lt;/strong&gt; நாளைய சொர்க்கத்திற்கு இன்றைய இலஞ்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காதல்: &lt;/strong&gt;ஒருவகைக் களவு; என்று பிடிபடுவோம் என்ற பயம் என்றைக்குமே&lt;br /&gt;இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மனசு: &lt;/strong&gt;ஞாபகங்களைப் போட்டு வைக்கும் ஒருவகைப் பெட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கண்:&lt;/strong&gt; காதல் பிறக்கும் இடம்; கண்ணீரின் சொந்த இடம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புதுக்கவிதை: &lt;/strong&gt;ஒருவகைப் புயல்; ஆனால் அழிவு இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மரபுக் கவிதை:&lt;/strong&gt; ஒருவகைத் தென்றல்; ஆனால் ஒரு அறுப்பும் விளங்காது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சொர்க்கம்:&lt;/strong&gt; இல்லாத ஒன்று; நாம் இறக்கின்ற போதே இருக்கும் என்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நண்பன்/நண்பி: &lt;/strong&gt;நாம் புழுகுவதையெல்லாம் நம்புகின்ற அல்லது நம்புமாற்&lt;br /&gt;போல் நடிக்கும் ஒரு ஜீவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாழ்க்கை:&lt;/strong&gt; நாளைய இறப்பிற்கு எம்மைத் தயாராக்குவது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காசு:&lt;/strong&gt; கடதாசியினால் உருவாக்கப்பட்ட ஒன்று....மஹாராணி சிரிச்சுக்&lt;br /&gt;கொண்டிருப்பாங்கோ!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கணிதம்: &lt;/strong&gt;நீங்கள் பாஸாகாத ஒரே ஒரு பாடம் அல்லது அதிக தடவை&lt;br /&gt;கோட்டைவிட்ட பாடம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உணவு: &lt;/strong&gt;நீங்கள் உயிர் வாழ்வதற்கான காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கடவுள்:&lt;/strong&gt; பரீட்சைக்கு முதல் மீதமுள்ள ஒரேயொரு நம்பிக்கை; மனிதனின்&lt;br /&gt;மிகப் புத்திசாலித்தனமானகண்டுபிடிப்பு; அஞ்சு சதத்துக்கும்&lt;br /&gt;பிரயோசனம் இல்லாதது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மனிதன்: &lt;/strong&gt;வாலில்லாத ஒருவகை குரங்கினம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குரங்கு:&lt;/strong&gt; வாலுள்ள ஒரு மனிதம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கண்ணாடி:&lt;/strong&gt; தளவாடி; நீங்கள் எவ்வளவு அசிங்கம் என்பதற்கான ஒரேயொரு சாட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காமம்: &lt;/strong&gt;(பார்க்க உணவு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணா:&lt;/strong&gt; இடைக்கிடை பணம் அனுப்பும் ஒருவகை மனித ஜீவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ்: &lt;/strong&gt;உங்களை நினைத்து நீங்களே பெருமைப்படும் ஒருவிடயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கண்ணீர்:&lt;/strong&gt; overflow of sadness that escapes through your eyes.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-110256228754542920?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/110256228754542920/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=110256228754542920' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/110256228754542920'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/110256228754542920'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2004/12/blog-post.html' title='அகராதி'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-109984717737333058</id><published>2004-11-07T13:04:00.000-05:00</published><updated>2004-11-07T12:07:15.003-05:00</updated><title type='text'>வலியது வாழும்</title><content type='html'>பெயரினில் ஐக்கியம்&lt;br /&gt;செயலினில் அயோக்கியம்&lt;br /&gt;கயவரில் அதியுயர்&lt;br /&gt;கயவனே கவனி!&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் தேசநலனுக்கு&lt;br /&gt;பங்கந் தரு தேசமென்று&lt;br /&gt;ஆங்கோர் போர் கொண்டீர்&lt;br /&gt;எண்ணெய்யில்&lt;br /&gt;பங்குபெற விரும்பும்&lt;br /&gt;சிலவாலுகள் பங்குபெற.&lt;br /&gt;&lt;br /&gt;சற்றலைற் கொண்டு -நீவிர்&lt;br /&gt;'பெற்றெடுத்த' படங்கள்&lt;br /&gt;சிரிப்பென்ற சிரிப்பெல்லோ.&lt;br /&gt;டைனோசர் ஈராக்கில்&lt;br /&gt;ஒட்டகம் ஓட்டுதல் போலவும்&lt;br /&gt;சதாமும் பின்லாடனும்&lt;br /&gt;சதா சந்திச்சு&lt;br /&gt;பேரீச்சம்பழஞ் சாப்பிடல் போலவும்&lt;br /&gt;படமெடுத்துத் தர&lt;br /&gt;சீரிய சேவகர் கொண்டீர்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் அந்தப்புரங்களில்&lt;br /&gt;நீங்கள் அணுகுண்டுகள் செய்து&lt;br /&gt;அடுக்கி வத்திருப்பதும்&lt;br /&gt;இஸ்ரேலும், தாங்களும்&lt;br /&gt;மைனர் மாப்பிள்ளைகளாய்&lt;br /&gt;ஈவ்டீஸிங் செய்வதுவும்&lt;br /&gt;எவர்க்குமே தெரியாதே.&lt;br /&gt;&lt;br /&gt;'சீ என்ன என்ன'&lt;br /&gt;சொல்லுறதோ&lt;br /&gt;அதையே தெய்வ வாக்காக்கி&lt;br /&gt;பிறகதையே வாக்காக்கி&lt;br /&gt;மீண்டும் நீவிர் அரசாள...&lt;br /&gt;&lt;br /&gt;தோ தோ நாய்க்குட்டிகளும்&lt;br /&gt;தோதாக உங்கள்&lt;br /&gt;பின்னாலே துள்ளிவர...&lt;br /&gt;பாவம்&lt;br /&gt;அவையும் யாது செய்யும்?&lt;br /&gt;ஒட்டுக்கேட்டல்களினால்&lt;br /&gt;சொந்தச் சுதந்திரத்திற்கே&lt;br /&gt;வக்கில்லாத போது&lt;br /&gt;உலகமைதிபற்றி&lt;br /&gt;எதைச்செய்து கிழிக்க.&lt;br /&gt;&lt;br /&gt;வலியது வாழும் - ஈர்ந்த&lt;br /&gt;வலியதுவும் வாழும்.&lt;br /&gt;நிலைத்திருப்பது&lt;br /&gt;நிலையாமையன்றி&lt;br /&gt;வேறெதுவுமில்லை.&lt;br /&gt;கோடைகடந்தொருநாள்&lt;br /&gt;குலைநடுங்கக் குளிர்வருதல்&lt;br /&gt;புதிதில்லை&lt;br /&gt;சர்வதேச காவல்துறை ஐயா.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-109984717737333058?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/109984717737333058/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=109984717737333058' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/109984717737333058'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/109984717737333058'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2004/11/blog-post.html' title='வலியது வாழும்'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-109924341673409173</id><published>2004-10-31T13:22:00.000-05:00</published><updated>2004-10-31T12:57:36.103-05:00</updated><title type='text'>முதற் பூவே...</title><content type='html'>நாடுகள் கண்டு பிடிக்க&lt;br /&gt;நாடி,&lt;br /&gt;எவர்க்குமே தெரியாமல்&lt;br /&gt;மாண்ட முதற் கடலோடியே...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழின் மூத்த சொல்லை&lt;br /&gt;யாத்த தமிழனே...&lt;br /&gt;&lt;br /&gt;காதலென்றெ தெரியாமல்&lt;br /&gt;முதன் முதலாய்&lt;br /&gt;காதலித்த காதலரே...&lt;br /&gt;&lt;br /&gt;அடக்கப்பட்ட இனத்திற்காய்&lt;br /&gt;குரல் கொடுத்து&lt;br /&gt;அடையாளம் தெரியாச்&lt;br /&gt;சடலமாய்ப் போன&lt;br /&gt;முதற் போராளியே...&lt;br /&gt;&lt;br /&gt;குரல் கொடுக்க&lt;br /&gt;உரமே இல்லாமல்&lt;br /&gt;அடையாம் தெரியாச்&lt;br /&gt;சடலமாய்ப் போன&lt;br /&gt;அடக்கப்பட்ட இனத்தின்&lt;br /&gt;முதல் மனிதமே...&lt;br /&gt;&lt;br /&gt;உரிமைகள்&lt;br /&gt;பறி போனதே தெரியாமல்&lt;br /&gt;முதலில் மரித்துப்போன&lt;br /&gt;அப்பாவி மனிதமே...&lt;br /&gt;&lt;br /&gt;அந்நிய நாடொன்றில்&lt;br /&gt;முதற் கடை&lt;br /&gt;தொடங்கிய தமிழனே&lt;br /&gt;&lt;br /&gt;கடை தொடங்கி&lt;br /&gt;முதலுமிழந்த&lt;br /&gt;முதல் தமிழனே&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞன் என்று&lt;br /&gt;அவையால்&lt;br /&gt;அடையாளம் புரியாமல்&lt;br /&gt;அடங்கிப் போன&lt;br /&gt;முதற் கவியே...&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞன் என்று&lt;br /&gt;தனக்கே தெரியாமல்&lt;br /&gt;சயனித்த முதற்கவியே...&lt;br /&gt;&lt;br /&gt;யாருமே பார்க்காமல்&lt;br /&gt;தோன்றி மறைந்த&lt;br /&gt;பிரபஞ்சத்தின்&lt;br /&gt;முதலாவது வானவில்லே...&lt;br /&gt;&lt;br /&gt;பாலுக்காயழுத&lt;br /&gt;தாயிழந்த முதற் சேயே&lt;br /&gt;சேயிற்காயழுத&lt;br /&gt;சேயிழந்த&lt;br /&gt;முதல் தாயே...&lt;br /&gt;&lt;br /&gt;வாழப் பிடிக்காமல் -முதலில்&lt;br /&gt;தற்கொலை செய்த&lt;br /&gt;அப்பாவி ஜீவனே...&lt;br /&gt;&lt;br /&gt;நட்டநடுக் காட்டினிலே&lt;br /&gt;வாடிப் போன முதற்பூவாய்&lt;br /&gt;கேட்கப்படாமற் போன என்&lt;br /&gt;&lt;br /&gt;முதற் கவிதை&lt;br /&gt;உமக்குச் சமர்ப்பணம்.&lt;br /&gt;&lt;br /&gt;-கிஸோக்கண்ணன்&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-109924341673409173?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/109924341673409173/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=109924341673409173' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/109924341673409173'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/109924341673409173'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2004/10/blog-post_31.html' title='&lt;font size=-1&gt;முதற் பூவே...&lt;/font&gt;'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-108987550930864780</id><published>2004-07-15T01:10:00.000-04:00</published><updated>2004-07-15T14:17:07.510-04:00</updated><title type='text'>How to comment in Tamil:</title><content type='html'>&lt;font size=2&gt;To comment in Tamil, go to &lt;a href=" http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm"target="_blank"&gt;&lt;b&gt;Puthuvai tamil writer&lt;/b&gt;&lt;/a&gt; and type what u want to say in the upper box.  Then copy and paste the Tamil comments in the comment window. (If u want to say "அம்மா", just type "ammaa")&lt;/font&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-108987550930864780?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/108987550930864780/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=108987550930864780' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/108987550930864780'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/108987550930864780'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2004/07/how-to-comment-in-tamil.html' title='How to comment in Tamil:'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-108986896254675536</id><published>2004-07-15T01:05:00.000-04:00</published><updated>2004-10-31T13:38:47.373-05:00</updated><title type='text'>வாசித்த சிலவும் பாதித்த சிலவும்:</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;span style="font-size:100%;"&gt;கடந்த ஆண்டு ஊருக்குப் போய்வந்த நண்பன் ஒருவன் வன்னியின் தற்போதைய தோற்றம் பற்றிச் சில விடயங்களையும் படங்களையும் பகிர்ந்ததுண்டு. அந்த நண்பனுக்குப் 'பழைய' வன்னி பற்றிப் பெரிதும் தெரியாது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.muzhakkam.com/" target="_blank"&gt;&lt;b&gt;&lt;span style="font-size:100%;"&gt;முழக்கம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:100%;"&gt; வார இதழில் "வன்னிப் பயணம்" என்ற தலைப்பில் ஒரு பெரியவர் பயணக் கட்டுரை எழுதி வருகின்றார். அவர் வயதாலும், அறிவாலும் பெரியவர். எனவே பழைய-புதிய என்று ஏதாவது ஒப்பிட்டு எழுதுவார் என்ற எதிர்பார்ப்பில் வாசிக்கத் தொடங்கினால் ஒரே ஆச்சரியம்! அதில் பத்து சவீதங் கூட அவர் வன்னி பற்றிக் குறிப்பிடவில்லை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;பயணத்திற்கு முதல் தான் வாதநோய் மருத்துவரைப் போய்ப் பார்த்ததாகச் சொல்கின்றார்.... வாதம் பற்றி தான் இணையத்தளத்தில் தேடியதாகச் சொல்கின்றார்... பிறகு, "நல்லதம்பி" என்ற திரைப்படம் பற்றிச் சொல்கின்றார்...&lt;br /&gt;&lt;br /&gt;ஏயர் லங்கா விமானப்பணிப் பெண்கள் சிங்களத்தில் மட்டும் (ஆயுபோவன் சொல்லி) வரவேற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் சிறீலங்காவில் சம உரிமையுடன் வாழவில்லை என்பதைப் பற்றி இப்ப எவரும் சொல்வதில்லைத்தானே! பூமி தட்டை இல்லை என்பதை எத்தனை நாளுக்குத்தான் சொல்லிக் கொண்டிருப்பது! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:100%;"&gt;ச்சை! நான் சொல்ல வந்தது அதில்லை. பயண அனுபவம் எழுதும்போது வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிடுவதும், பழைய நாட்களை இரை மீட்பதும் நல்ல விடயம்தான். ஆனால் அதுவே அளவுக்கு மீறினால்...?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;center&gt;&lt;span style="font-size:100%;"&gt;======================&lt;/span&gt;&lt;/center&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;a href="http://kumudam.com/" target="_blank"&gt;&lt;b&gt;&lt;span style="font-size:100%;"&gt;குமுதம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:100%;"&gt; இதழில், இருமனைவிகளுடன் முதலிரவு என்று ஒரு கட்டுரை. அடடா, தமிழநாட்டிலும் இப்படியா? ஒருவனுக்கு ஒரு மனைவி அல்லது ஒருமனைவிக்கு ஒரு கணவன் என்பது அங்கு சட்டம் இல்லையா? சரி, அப்படி இருந்தாலும் இந்த விடயத்தை தமிழ்நாட்டுக்கே முரசறைந்துவிட்டுச் செய்வானா ஒருவன்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒண்டுமில்லையாம். திரைப்படமொன்றுக்கான காட்சியாம் அது. அக்கட்டுரை பின்வருமாறு போகின்றது. "...இங்கே மனைவியுடன் பாடும்போது காதலியின் நினைவு வந்துவிடுகிறது. அதனால் மனைவிக்கு ஒரு பல்லவி காதலிக்கு ஒரு பல்லவி என்று டூயட் போகிறது"&lt;br /&gt;&lt;br /&gt;முதலமைச்சருக்குத் தீவிரவாதிகளுடன் தொடர்பென்று ஒரு படத்தில் காட்சி வந்தால் அதையே ஒரு கட்டுரையாகப் போட இவர்களுக்குத் துணிவு இருக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;போனால் போகின்றது; அவர்களது எழுத்துச் சுதந்திரம் என்று விட்டுவிடலாம் என்றால், அதன் இறுதிவரிகள் கடுங்கோபத்தை உண்டாக்குகின்றன. அது இதுதான்:&lt;br /&gt;"இந்தக் காட்சிகள் படமெடுக்கப்பட்டது பாண்டிச்சேரியில் பாரதியார் வாழ்ந்த வீட்டுக்குப் பக்கத்தில். செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே"&lt;br /&gt;&lt;br /&gt;பாரதியின் பெயரைப் போகிற போக்கில் எடுத்துவிடுவது பாரதி இனி உயிர்த்துவர மாட்டார் என்ற துணிவிலன்றி வேறெதுவாக இருக்கப் போகின்றது!&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையைச் சொல்லுங்கள். இப்படியான கட்டுரை சமுதாய விழிச்சிக்காகவா எழுதப்பட்டது? எனக்கென்னமோ இக்கட்டுரையின் நோக்கத்தை விட அக்காட்சி பரவாயில்லைப் போலுள்ளது!&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-108986896254675536?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/108986896254675536/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=108986896254675536' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/108986896254675536'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/108986896254675536'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2004/07/blog-post_15.html' title='&lt;font size=2&gt;வாசித்த சிலவும் பாதித்த சிலவும்:&lt;/font&gt;'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-108983757818160771</id><published>2004-07-14T16:33:00.000-04:00</published><updated>2004-10-31T13:42:39.746-05:00</updated><title type='text'>என்னை வாழவிடு</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:100%;"&gt;உன்னை நான் காதலிக்கத் தொடங்கி பதினாறு தடவை பௌர்ணமி வந்துவிட்டது...! ஏனோ எனக்கு அமாவாசைகளைப் பிடிப்பதில்லை... அதிருக்கட்டும் உனக்கேன் என்னைப் பிடிப்பதில்லை...?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:100%;"&gt;இந்தப் பௌர்ணமி நிலவு வட்டமாக இருக்கிறது. அதனைப் பார்க்கும்போது உந்தன் நினைவுகள் அலைகளாய் என்னை அலைக்கழிக்கின்றன...! இருந்தும் இந்தக் கொட்டும் பனி இரவில் நிலவை -பஞ்சுமிட்டாய் பார்க்கும் ஒரு பாலகனாய்- பார்த்துக் கொண்டிருக்கிறேன்...!&lt;br /&gt;&lt;br /&gt;சின்னஞ் சிறு வயதுகளில், சின்னஞ் சிறு வகுப்புகளில் படித்த(?) நாட்களில் எனக்கு உன்னைப் பிடிப்பதில்லை. அப்போது உனக்கு என்னைப் பிடித்திருக்கலாம். ஆனால் நான் அதனை அறியாமல் விலகியே நடந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நாட்களில் என்னோடு படிக்கும் குட்டி, சிவா இருவரும் சந்தோசத்தில் பாட்டெல்லாம் பாடுவார்கள்...! நீ எப்போது வகுப்புக்கு வருவாய் என்று ஆவலோடும், ஆசையோடுங் காத்திருப்பார்கள். அப்படியே இப்போதெல்லாம் நானும் உன் வருகையை எதிர்பார்க்கத்தொடங்கி விட்டேன். ஆனால்...அந்தக் குட்டிக்கும், சிவாவுக்கும் நீ தொடர்ந்து கண் காட்டுவதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. என்னில் மட்டும் ஏனிந்த ஓரவஞ்சனை...?&lt;br /&gt;&lt;br /&gt;அவன் போட்ட எந்த மந்திரத்தில் நீ அவனது வலையில் விழுந்தாய் என்று இந்தப் பதினாறு பௌர்ணமிகட்கும் முந்திய ஒருநாளில் சிவாவையே கேட்டேன். நான் உன்னைக் காதலித்தால் நீயும் என்னைக் காதலிப்பாய் என்று அவன் சாதாரணமாய்ச் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ என்னைக் காதலிக்காவிடின் என் கல்வியே குழம்பிவிடும். ஏன், என் இளமையே வீணாகிப் போய்விடும். வாலிபன் ஒருவனின் வாழ்க்கையைக் கெடுத்த பாவி என்ற பட்டத்தை தயவு செய்து நீ பெற்று விடாதே...!&lt;br /&gt;&lt;br /&gt;என் காதலே உன்னைப் புரிந்து கொள்ள என்னால்தான் முடியவில்லை. நீயாவது என்னைப் புரிந்து கொண்டு, என்னில் இரக்கங் காட்டு...! என்னோடு படிக்கும் சக மாணவர்கள் என்னைக் கேலி செய்வதைப் பார்த்தும் உன் மனம் இளகவில்லையா? நீ எனக்கு ஒரு தடவை கண் காட்டினாலே போதும் மீதியை நான் பார்த்துக் கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓ என் கணித பாடமே...! நாளைய வகுப்பிலாவது நான் உன்னைப் புரிந்து கொள்வேன். அல்லது நீ என்னைப்புரிந்து கொள்வாய். அந்த நம்பிக்கையில் விடியலிற்காய் காத்திருக்கிறேன். கணிதமே, கண் திறந்து என்னை வாழவிடு...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;-கிஸோக்கண்ணன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-108983757818160771?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/108983757818160771/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=108983757818160771' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/108983757818160771'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/108983757818160771'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2004/07/blog-post_14.html' title='என்னை வாழவிடு'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-108949589131083768</id><published>2004-07-13T17:43:00.000-04:00</published><updated>2005-04-20T15:59:17.346-04:00</updated><title type='text'>குழந்தாய்...!</title><content type='html'>நரகத்திலும்&lt;br /&gt;குழந்தையுண்டாம்.&lt;br /&gt;பாவம் செய்தார்க்கு&lt;br /&gt;நரகமெனின்&lt;br /&gt;குழந்தையும் பாவிதானோ?&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை அழுகையில்&lt;br /&gt;கூடவே&lt;br /&gt;பெரியாளாய்&lt;br /&gt;பெரிதுமழும் மனசு.&lt;br /&gt;'பாவங் குழந்தை,&lt;br /&gt;என்ன வலியோ&lt;br /&gt;என்ன குறையோ?'&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தையாய் மாற&lt;br /&gt;எனக்கும்&lt;br /&gt;ஆசைதான்!&lt;br /&gt;ஆனாலும்&lt;br /&gt;பிடிக்காத மூஞ்சையெலாம்&lt;br /&gt;செல்லங் கொஞ்சுமென&lt;br /&gt;மனம் நினைக்க&lt;br /&gt;ஆசை கரைந்து போம்.&lt;br /&gt;&lt;br /&gt;தயவு செய்து&lt;br /&gt;நீங்கள் யாவரும்&lt;br /&gt;குழந்தையாய் மாறுவீர்.&lt;br /&gt;நீவிர் அப்போ&lt;br /&gt;தீது செய்யினும்&lt;br /&gt;வலியெடுக்காதே...!&lt;br /&gt;&lt;br /&gt;எவரேனும்&lt;br /&gt;நிலத்தினில் துப்பினும்&lt;br /&gt;சுள்ளென்று கோபமெழும்.&lt;br /&gt;குழந்தை&lt;br /&gt;முகத்தினில் துப்பினும்&lt;br /&gt;இன்னும் மனமேங்கும்.&lt;br /&gt;எனவே&lt;br /&gt;குழந்தையாய் மாறுவீர்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தையெனின்&lt;br /&gt;கெட்டது தவிர்த்து&lt;br /&gt;கேட்டது கிடைக்கும்.&lt;br /&gt;கேளாததுங் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைப் பிள்ளைக்கும்&lt;br /&gt;குட்டி நாய்க்கும்&lt;br /&gt;செல்லம்&lt;br /&gt;கொடுத்தல் தவறென&lt;br /&gt;பெரிய&lt;br /&gt;சொறி நாய்கள் வவ்வும்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லாதொருவனுக்கு&lt;br /&gt;குழந்தை மனம் சமமென்று&lt;br /&gt;சிலது&lt;br /&gt;அலம்பித் திரியும்.&lt;br /&gt;அப்போ&lt;br /&gt;மனிதர்களெல்லாம்&lt;br /&gt;பெரிய்ய்ய்ய கடவுளெல்லோ...!&lt;br /&gt;&lt;br /&gt;நஞ்சில்லாப் பாம்புகளும்&lt;br /&gt;நல்மனத்து&lt;br /&gt;வஞ்சிகளும், ஆடவரும்&lt;br /&gt;பிஞ்சுக் குழந்தைகள்தான்;&lt;br /&gt;யாவரும்&lt;br /&gt;குழந்தையாய் இருந்தவர்தாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-108949589131083768?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/108949589131083768/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=108949589131083768' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/108949589131083768'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/108949589131083768'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2004/07/blog-post_13.html' title='&lt;font size=2&gt;குழந்தாய்...!&lt;/font&gt;'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7593652.post-108949558854953389</id><published>2004-07-13T16:38:00.000-04:00</published><updated>2004-07-15T04:16:45.856-04:00</updated><title type='text'>முகமூடிகள்</title><content type='html'>&lt;font size=2&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;ஆடிக்காற்றின் வேகத்திற்கு முகங் கொடுக்க முடியாமல் காவோலை ஒன்று தன் கட்டவிழ்த்து மண்ணிற்கு வந்தது. அது வெறுங் காவோலை என்பதனாலோ என்னவோ பெரிதாக ஒருவருமே அலட்டிக் கொள்ளவில்லை. மாடு ஒன்று மட்டும் மோர்ந்து பார்த்து, முறைத்து விட்டுப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;அம்மாவினதும், சின்னம்மாவினதும் ஒப்பாரி எல்லோரையும் உருக்கிக் கொண்டிருந்தது. அவர்களுடன் போட்டியிட்டுக் களைத்து பறை மேளங்கள் கூட சற்று ஓய்ந்துபோய் இருந்தன.&lt;br /&gt;	&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;வெற்றிலையைச் சப்பிக்கொண்டிருந்த ஆச்சி ஒருவர் வெறும் சுண்ணாம்பிற்காய் யாரையோ திட்டிக் கொண்டிருந்தார். சிறுசுகள் "அம்மா ஒரு கடைக்குப் போனா..." என்று ஏதோ விளையாட்டில் மூழ்கியிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;"குமாரின்ரை அம்மாப்பா செத்துப் போச்சுது. பாவம் குமார்" பக்கத்து வீட்டுப் பரமக்காவின் மகன் வாக்குக் கண்ணன் யாருக்கோ சொல்லியது என் காதிலும் விழுந்தது. பாவப்படுவதுபோல் அவன் என்னை பழிப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் புரிந்தது. எப்போதோ ஒருநாள் கிளித்தட்டு விளையாடும்போது அவனோடு நான் அடிபட்டதற்காய் சமயம் பார்த்து பழிவாங்கிக் கொண்டான்.&lt;br /&gt;	&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;அதனைக் காதில் விழுத்தாதது போல் மறுபக்கம் திரும்பினேன். "நாம் என்ன குற்றம் செய்தோம். எம்மை ஏன் கட்டித் தூக்கியுள்ளீர்கள்?" என சொல்லாமல் சொல்லி தோரணங்கள் காற்றோடு வீணாகச் சண்டை போட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;அவற்றின் மீது காரணம் புரியாமல் வெறுப்பு வர அப்புவின் பிரேதம் உள்ள பக்கம் பார்வையைத் திருப்பினேன். அங்கு அண்ணா அப்புவின் முகத்தருகே வரும் இலையான்களைக் கலைக்க விசிறி ஒன்றால் விசிறிக்கொண்டிருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;"நாங்கள் வெறும் விசிறிக்கெல்லாம் பயப்படமாட்டோம்"  என்பது போல் இலையான்கள் மல்லுக்கு நின்றன. தன்னோடை படிக்கிற பெட்டையள் நிக்கிறதாலை அழலாமோ, வேண்டாமோ என்று யோசித்துக்கொண்டிருந்த அண்ணா நான் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் என்னை தன்னருகே கூப்பிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;"அழாதை குமார்...நீ அழுகிறது அப்புவுக்கு பிடிக்காது..." &lt;br /&gt;இதுக்குமேல் எதுவுமே சொல்லத்தோன்றாமல் அவன் என் தலையை தடவத் தொடங்கினான். &lt;br /&gt; 		&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;தன்னைச்சுற்றி நடப்பது எதுவுமே தெரியாமல்... தனக்காக இத்தனை பேர் அழுவதைக்கேளாமல்... அப்பு அமைதியாகப் படுத்திருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;"பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போகட்டோ எண்டு கேட்க, எனக்கு ஒண்டுமில்லை; நாளைக்கு எழும்பி நடப்பன் எண்டு சொன்னியேணை. இப்ப ஒண்டுஞ் சொல்லாமல் போட்டியே. என்னைப்பெத்த ராசாவுக்கு என்னணை அவசரம்?" அப்புவின் பாதங்களைப் பற்றியவண்ணம் அம்மா தொடர்ந்துங் குமிறினார்.&lt;br /&gt;	&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;ஊர்ப்பெருசுகள் இதனைச்சாட்டி ஓசியில் கிடைத்த கள்ளைக் குடித்துவிட்டு அரசியல் பற்றி ஏதோ அலம்பிக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;	&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;"கிழடு நேரம் பார்த்துச் செத்துப் போச்சு! இந்த முறை திருவிழாவுக்கும் போகேலாமல் வந்திட்டுது" சித்தப்பா புறுபுறுத்தபடி தனது குறையினை யாரிடமோ முறையிட்டுக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;நேற்றுவரைக்கும் சுவாசித்துக்கொண்டிருந்த அப்பு இப்போது பிணமாகிக் கிடந்தார். கடவுளே இது கனவாக இருக்கக்கூடாதா என்று என் உள்மனம் ஏங்கியது.&lt;br /&gt;	&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;முன்பொருநாள் அம்மா போட்டுத்தந்த தேத்தண்க்கு சீனி காணாது எண்டு நான் சிணுங்கியபோது அப்பு தன்னருகே என்னை கூப்பிட்டார்.&lt;br /&gt;"எடை மோனை...! நீ தேத்தண்க்கு சீனி காணாது எண்டு அழுகிறாய். இந்த உலகத்திலை எத்தினைபேர் ஒரு நேரச் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் இருக்குதுகள். காலுக்கு சும்மா போடுற செருப்புக்கு வழி இல்லாமல் சில சனம் கவலைப்படும்; ஆனா காலே இல்லாமல்  எவ்வளவு சனம் கஸ்ரப்படுகுதுகள். கிடைச்சதை வைச்சு சந்தோசப்பட வேண்டும் ராசா. சும்மா எந்த நேரமும் புறுபுறுக்கக்கூடாது" என்று எப்போதோ அவர் சொன்னதுக்கு இப்போது இலேசாக அர்த்தம் புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;செல்லமக்கா வீட்டு நாயோடை நான் சேட்டைவிட அது என் விளையாட்டுப் புரியாமல் கடித்துக்குதறியது. அப்போது என்னை மந்திகை ஆஸ்பத்திரியில் சேர்த்த போது ஒரு நொடியும் விலகாது அப்பு என்னை பார்த்து சிந்திய கண்­ர் இன்னும் மனசுக்குள் ஈரமாய் இருக்கின்றது. பிறகு வாற போற ஆக்களட்டை எல்லாம், "நாயின்ரை சாப்பாட்டை எடுத்துக்கொண்டு ஓடினால் அது கடிக்காமல் என்ன செய்யும்?" என்று பகிடிவிட்டது இன்னும் நினைவில் இருக்கிறது.&lt;br /&gt;	&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;ஒவ்வொரு தரமும் வன்னியிலை இருந்து வரும்போது தேனும், நெய்யும் கொண்டு வரும் என்ரை அப்பு...&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;நான் சோதினையிலை பாஸ் பண்ணும் போதெல்லாம் அதனை ஊரெல்லாம் முரசறைந்து, பிறகு எங்கடை அம்மன் கோவிலை சுற்றி அங்கப்பிரதட்சணை செய்யும் என்ரை அப்பு...&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;"அப்பு எண்டு சொல்லக்கூடாது! அம்மாப்பா எண்டுதான் சொல்லவேணும்" என்று அம்மா எனக்கு அடிக்கின்ற வேளைகளில் எல்லாம் என் கண்­ரை ஆதரவாகத் துடைக்கும் என்ரை அப்பு...&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;தன்ரை காசிலை எனக்கு சைக்கிள் வாங்கித்தந்த என்ரை அப்பு இனி இல்லை என்பதை எண்ணிப் பார்க்கையில் மனசுக்குள் சோகம் இலேசாக ஊற்றெடுக்கத் தொடங்கியது; அது கண்களால் அருவியாக கசிந்து...சிந்தி...தரையைத்தொட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;ஒப்பாரிகளுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டு வாயைச்சற்று பிளந்தபடி கட்டிலில் கிடத்தப்பட்டிருந்த அப்புவின் பிரேதத்தைப் பார்க்கையில் நேற்றுப் பிந்நேரம் வீட்டில் நடந்தது கண்ணிற்குள் வந்து போனது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;பேச்சு எதுவுமின்றி தன் மூச்சினை இழுத்து, இழுத்துவிடும் அப்புவின் முகத்தையே நான் பார்த்துக் கொண்டிருக்க... முருகேசண்ணருடன் அறைக்குள் நுழைந்த அப்பா என்னை விளையாடப்போகும்படி கலைத்தார். "ஓம்" என்றுவிட்டு அவர்களுக்கு தெரியாமல் கதவிடுக்கால் நோட்டம் விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;"என்ன முருகேசண்ணை! கிழவன் இப்போதைக்கு சாகாது போலை கிடக்கு. ஒரு மாசத்துக்கு மேலை ஆச்சு; கிழவன் பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கு" என்று கேள்விக்குறியோடு அப்பா முருகேசண்ணரின் முகத்தைப் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;"நான் சொன்னனாந்தானே...மனிசன் இனி பிழைக்கமாட்டுதெண்டு. அம்பது வருசமா தோட்டம் செஞ்ச உடம்பு அதுக்குன்னம் சரியாது" அப்புவின் தேகபலத்தையும், மனபலத்தையும் மெச்சிய  முருகேசர் அப்பாவின் பதிலிற்குக் காத்திராமல், தன்னோடு கொண்டு வந்த ஸொப்பிங் பாக்கை திறந்தார். அதற்குள் ஒரு கள்ளுப்போத்திலும், கடதாசியில் சுத்தி கொஞ்ச புழுதி மண்ணும் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;அப்பா அப்புவின் வாயைத்திறக்க முருகேசண்ணர் கள்ளை அப்புவுக்குப் பருக்கினார். அது தொண்டைக்குழி தாண்டிச்செல்லாமல் அப்புவுக்கு பிலக்கெடுத்தது. பருக்கப்பட்ட வேகத்திலேயே கள்ளு வெளியே முருகேசண்ணரின் முகத்தில் தெறித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;"அரியண்டம் பிடிச்ச கிழவனுக்கு சாகவே விருப்பமில்லை..." சொல்லியவாறே  தொடர்ந்து மண்ணை அப்புவின் வாய்க்குள் இட்டார். "க்கும்" என்ற ஒலியை விட்டபடி அப்புவின் உடல் துள்ளிச்சரிந்தது. நிலமையின் விபரீதம் அப்போதுதான் எனக்கு இலேசாகப்புரிந்தது. &lt;br /&gt;	&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;"ஐயோ...! என்ரை அப்புவை என்ன செய்யிறீங்கள்...?" எண்டு கத்திக் கொண்டே அறைக்குள் நுழைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;"டேய் குமார்... உன்னையெல்லோ விளையாடப்போகச் சொன்னனான்" அப்பா பளார் என்று என் முதுகில் விளாசினார். அடியின் வீரியந் தாங்க முடியாமல் வெளியே போய் விழுந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;இது நடந்து சற்று நேரத்தில் சொல்லிவைத்ததுபோல் அம்மாவின் அழுகுரல் ஊரையே கூட்டியது. "பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போகட்டோ எண்டு கேக்க வேண்டாம் வேண்டாம் எண்டு சொன்னியேணை". என்னைப்  பெத்த ராசாவுக்கு என்னணை அவசரம்?"&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;அம்மாவின் பசப்பு வார்த்தைகள் என் நெஞ்சைக்கூறு போட்டன. எல்லோருமாகச் சேர்ந்து என் அப்புவை கொண்டு போட்டு இப்ப பாசாங்கு விட்டுக் கொண்டிருக்கினம்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;எனக்கு எங்கிருந்து அந்த தைரியம் வந்ததோ தெரியவில்லை. மனசுக்குள் கருக்கொண்ட எரிச்சல் உதடுகளால் பிரசவமானது. "நீங்கள்தானே அப்புவுக்கு கள்ளை பருக்கி சாக்கொண்டனீங்கள்" விசும்பியவாறே ஓலமிட்டேன். எல்லோரும் என்னையும், அம்மாவையும் மாறி மாறிப் பார்த்தார்கள். அம்மாவின் கறுத்துப்போன முகம் அவமானத்தில் சற்று சிவந்தது. ஒன்றுமே சொல்லத்தோன்றாமல் திருதிருவென முழித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;அங்கு ஊர்ப்பெரிசுகளோடு கதைத்துக்கொண்டிருந்த அப்பாவுக்கும் நான் கத்தியது கேட்டிருக்கவேண்டும். &lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;"குமார் இங்காலை வா!"&lt;br /&gt;இலேசாக உறுமியவர் வீட்டுக்குப் பின்னால் கூட்டிச்சென்று...பூவரசந்தடி ஒன்றைப் பிடுங்கி கண்மண் தெரியாமல் என்னை அடிக்க ஆரம்பித்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;"என்ன, உமக்கு நீர் பெரிய ஆள் எண்டு நினைப்போ?" சீறிய அப்பாவின் முகத்தைப் பார்க்க பயமாகவும் இருந்தது; அசிங்கமாகவும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;நான் பெரியாளாக இருந்தால் அப்புவுக்கு கள்ளை பருக்கி சாக்கொண்டதைப் பற்றி கதைக்கலாம் போலை எல்லோ கிடக்கு. அப்ப அம்மா ஏன் எல்லாம் தெரிஞ்சும் ஒன்றும் தெரியாதவராக இருக்கிறார். ஒருவேளை அம்மா பெரியாள் இல்லையோ..?  அப்பாவும், முருகேசரும் மட்டுந்தான் பெரியாக்களோ...? எனக்கு குழப்பமாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;மனசில் இருந்த வலியோடு அவர் அடித்த வலியும் சேர்ந்து கொள்ள மனசு ரணமாகியது. வற்றிப்போனதோ என்னவோ எனக்கு கண்­ரே வரவில்லை.&lt;br /&gt;	&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;எல்லாமே முடிந்து அப்புவின்ரை பிரேதத்தை வேரக்கழிச்சுடலையில் கொண்டு போய் எரித்துமாகிவிட்டது. அடுத்த நாள் காலையில் எழும்பவே முடியாது தலையிடி பிய்த்துத் தின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;கண்களை மூடிகொண்டு 'அப்பு...அப்பு' என்று அனுங்கியபோது அம்மா வந்தார். எழும்பச் சொல்லியும் முடியாமல் 'உம்' கொட்டினேன். என் நெற்றியில் கைவைத்துப் பார்த்துவிட்டு, "என்னங்கோ...குமாரின்ரை உடம்பு நெருப்பா கொதிக்குது. எழும்ப மாட்டாமல் கிடக்கிறான். ஒருக்கா டொக்டர் முருகானந்தாவட்டை காட்டிப்போட்டு வாங்கோ" அம்மா அக்கறையோடு சொல்ல, அப்பா தலையாட்டிவிட்டு தன் சிகரெட்டில் கவனஞ் செலுத்த ஆரம்பித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;அந்த காலைநேரத்திலும் சின்னம்மா வந்து அம்மாவோடு கதைப்பது தெளிவாகக் கேட்டது. நேற்றிரவு அப்பு வந்து கதவை தட்டினவா எண்டும் தன்ரை பேரை சொல்லி கூப்பிட்டவா எண்டும் அம்மா சொல்ல, அதனை நம்பாமலோ என்னவோ சின்னம்மா மௌனத்தில் ஆழ்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;அம்மாவுக்குப் பக்கத்திலைதான் நான் ராத்திரி படுத்தனான். அவா சொல்வது போல் அப்படி ஒன்றுமே நடக்கேல்லை. அம்மாவால் எப்படி கூசாமல் பொய் சொல்ல முடிகின்றது? &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;"தோட்டக்கா எனக்கெண்டுதான் அப்பு சொல்லிக் கொண்டிருந்தவர். நீ என்னண்டா உனக்கெண்டு சொல்லுறாய். எங்கை உறுதியை காட்டு பாப்பம்?" சின்னம்மா அம்மாவிடம் உக்கிரத்தோடு கத்தினார். அம்மாவும் விடவில்லை. தானும் பதிலுக்கு இரைந்தார். &lt;br /&gt;	&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;'அப்பு...அப்பு' எண்டு வெளியே பாசாங்கு செய்தவர்கள் இப்போது சொத்துக்காய் சண்டை பிடித்துக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் எண்டு கணபதிப்பிள்ளை மாஸ்ரர் சொன்னதெல்லாம் இவர்களுக்கு தெரியாதா...? &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;வளர்த்த கடா மார்பில் பாய்வது எண்டதுக்கு இதுவா அர்த்தம்..? நெஞ்சுக்கடியில் இருந்து கேள்விகள் அடுத்தடுத்து எழுந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;"டேய் குமார்...! வளவுக்கை கிடந்த இது எப்படி வீட்டுக்கை வந்தது?" கத்தியவாறே அப்பா என்னருகில் வந்தார். அவரது கையில் வெறும் போத்தில் ஒன்றிருந்தது. &lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;"ஓ உந்தப்போத்திலோ...? நான்தான் எப்பாலும் ஒருக்கா எனக்கு தேவைப்படும் எண்டு எடுத்து வைச்சனான்" என் நான் குத்தலாகச் சொன்னது அவருக்கு புரிந்திருக்க வேண்டும்.&lt;br /&gt;	&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;"சரி சரி! வெளிக்கிடு; டொக்டரட்டை போவம்"  என்று தேவை இல்லாமல் சினந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;"ஏன் டொக்டரடைப் போய்  வீணாக் காசைச் செலவழிப்பான்? அப்புவுக்குப் பருக்கின கள்ளிலை மிச்சமிருந்தா எனக்குப் பருக்குங்கோவன்...!" உள்ளத்தில் உள்ளதை நான் கொட்டியதும்  "என்னடா சொன்னனீ...?" கையை ஓங்கியவர் பின் தயங்கி...தலை குனிந்து...மீண்டும் தன் சிகரெட்டில் மூழ்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;ஒருவிதத் திருப்தியோடு மறுபக்கந் திரும்பினேன்; சுவரில் மாட்டப்பட்டிருந்த படத்தில் அப்பு ஒன்றுமே தெரியாதவராக சிரித்துக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;யாராலோ தோற்கடிக்கப்பட்டது போல் உள்ளுணர்வு ஓங்கி அலற...கற்பூரம் காற்றிலே கரைவதுபோல் சோகத்தில் கரைந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;இலை துளிர்த்து, பச்சை காட்டி, வானம் பார்த்த ஒரு சிறுசெடியை வேரோடு பிடுங்கி எறிந்தது போல் என் சந்தோசங்கள் ஏன் சிதைந்து போயின...? என் கேள்விகளுக்குப் பதில் அளிக்க அங்கு எவருமே இருக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;அப்பு என்னைஅழைப்பது போல் உணர்ந்தேன். அம்மாவினதும், சின்னம்மாவினதும் கூச்சல் இப்போது பெரிதாகக்கேட்டது.&lt;br /&gt;		           &lt;center&gt;&lt;i&gt;(யாவுங் கற்பனையல்ல)&lt;/i&gt;&lt;/center&gt;&lt;/font&gt;   &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7593652-108949558854953389?l=kanitham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanitham.blogspot.com/feeds/108949558854953389/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7593652&amp;postID=108949558854953389' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/108949558854953389'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7593652/posts/default/108949558854953389'/><link rel='alternate' type='text/html' href='http://kanitham.blogspot.com/2004/07/blog-post_108949558854953389.html' title='&lt;FONT SIZE=2&gt;முகமூடிகள்&lt;/font&gt;'/><author><name>கிஸோக்கண்ணன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='12' src='http://photos1.blogger.com/blogger/7710/460/320/kanitham.jpg'/></author><thr:total>0</thr:total></entry></feed>
